search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி துணைநிலை ஆளுநர்"

    • டெல்லி துணைநிலை ஆளுநர் ஏற்கனவே இரண்டு மோசடி தொடர்பான குற்றச்சாட்டி விசாரிக்க உத்தரவு.
    • தற்போது மேலும் ஒரு மோசடி தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளார்.

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் யாருக்கு அதிகாரம் என்பதில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் இருந்து கொண்டே வருகிறது.

    இந்த மோதல் உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வெற்றி பெற்றாலும், மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி மாநில அரசின் அதிகாரத்தை குறைத்தது. இதற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து கட்சிகளை ஒன்று திரட்டி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பலன் கிடைக்கவில்லை.

    தற்போது டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவர்கள் சிக்கியுள்ளனர். அமலாக்கத்துறையால் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் சிறைக்கு சென்றுள்ளனர். தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குறிவைக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    இதற்கிடையே பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததாக துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு பரிந்து செய்து வருகிறார். மேலும், சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில்தான் ஆம் ஆத்மியின் மோஹல்லா கிளினிக்கில் இல்லாத நோயாளிகளுக்கு போலி ஆய்வக பரிசோதனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    நோயாளிகளை குறிக்க போலி மற்றும் நடைமுறையில் இல்லாத மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் போலி மருந்து வழக்கு, காடு மற்றும் வனவிலங்கு துறை தொடர்பான மோசடி குறித்து விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் இலவச மின்சார திட்டம் குறித்து விசாரணை நடத்த துணை நிலை ஆளுநர் சமீபத்தில் உத்தரவிட்டார்.
    • மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு உள்ளது. இதுதொடர்பாக வார்த்தைப் போர் தொடர்கிறது. ஆம் ஆத்மி அரசாங்கம் கொண்டு வந்துள்ள இலவச மின்சார திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா சமீபத்தில் உத்தரவிட்டார்.

    துணை நிலை ஆளுநரின் இந்த உத்தரவையடுத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக சாடினார். "ஆம் ஆத்மியின் இலவச மின்சார உத்தரவாதத்தை குஜராத் மக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதனால்தான் டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது. டெல்லி மக்களே எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் இலவச மின்சாரத்தை எந்த சூழ்நிலையிலும் நிறுத்த விடமாட்டேன். குஜராத் மக்களுக்கும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். குஜராத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம் அமைந்தால், உங்களுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்" என கெஜ்ரிவால் பதிவிட்டிருந்தார்.

    இதற்கிடையே மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 ம் தேதி ராஜ்காட் மற்றும் விஜய் காட் பகுதியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இதற்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இது குடியரசு தலைவரை அவமதிக்கும் செயல், என்று காட்டமாக குறிப்பிட்டார்.

    ஆளுநரின் இந்த கண்டனத்தை தொடர்ந்து இன்று கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், "துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா என்னை தினமும் திட்டும் அளவுக்கு என் மனைவி கூட என்னை திட்டியதில்லை. கடந்த ஆறு மாதங்களில் துணைநிலை ஆளுநர் கடிதம் எழுதிய அளவுக்கு, என் மனைவி எனக்கு காதல் கடிதங்கள் எழுதவில்லை. ஆளுநர் அவர்களே, நீங்கள் கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதுபோல் உங்களை இயக்குபவர்களையும் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    ×