search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooling"

    • தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ‘ஈரக்குமிழ் வெப்ப நிலை’ பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
    • மாநிலத் திட்டக் குழுவானது தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் 2024 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிக அதிக வெப்பம் நிலவும். இயல்பை விட அதிகமான நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும், பல நகரங்களை நகர்ப்புற வெப்பத்தீவு பதிப்பு தாக்கக் கூடும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் 'ஈரக்குமிழ் வெப்ப நிலை' பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவானது ( தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது. இந்த திட்டத்தை உருவாக்குவதற்கான உதவிகளை இங்கிலாந்து அரசு செய்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை முதலமைச்சராகிய தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    உள்ளூர் அளவிலான வானிலை முன்னெச்சரிக்கைகள், நகர்ப்புற பசுமையை அதிகமாக்குதல், நீர்நிலைகள் பாதுகாப்பு, குளிர்ந்த கூறைகள் திட்டம், வெப்பத்தை சமாளிக்கும் காற்றோட்டமான கட்டுமானங்கள், மருத்துவ கட்டமைப்புகள், விழிப்புணர்வு பிரச்சாரம், வெப்ப ஆபத்தில் சிக்குவோருக்கான புகலிடங்கள், போதுமான குடிநீர் வசதிகள், போக்குவரத்தில் வெப்பத்தை சமாளித்தல் மற்றும் பொதுப்போக்குவரத்தை அதிகமாக்குதல், அவசர உதவி வசதிகள், பல்துறையினர் பங்கேற்பு, போதுமான நிதி ஆதாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக வெப்பத் தணிப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவற்றை செயலாக்குவதற்கான முழுமையான பொறுப்புடைமை விதிகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் கருத்துக்களை கேட்டு, முழுமையான ஒரு வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    கரூரில் நேற்று கோடை மழை கொட்டி தீர்த்தது. இரவில் குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கோடை வெயில் 106,107 டிகிரி பதிவானது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்திலேயே கரூரில் அதிகபட்ச வெயில் பதிவாகி வந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. அக்னி நட்சத்திரம் தொடங்கினால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமே என பயந்தனர். 

    இந்த நிலையில் வாட்டி வதக்கிய கோடை வெப்பத்தை கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை தணிய வைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு 4,5 தினங்கள் கனமழை பெய்தது. மேலும் சாரல் மழையும் பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கரூர் நகர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. 1 மணிநேரம் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதில் அதிக பட்சமாக கரூரில் 33 மி.மீட்டர் மழை பதிவானது. அதேபோன்று அரவக்குறிச்சியில் 1.2மி.மீ., அணைப்பாளையத்தில் 7மி.மீ., பாலவிடுதியில் 8.4மிமீ., க.பரமத்தியில் 24.2மி.மீ., மயிலம்பட்டியில் 16 மி.மீட்டர் மழை பதிவானது. 

    மழையின் காரணமாக கரூர் வெங்கமேடு, பாலம்மாள்புரம் போன்ற பகுதியில் வெள்ளம் ஆறாக ஓடியது. பாலம்மாள்புரம் ரெயில்வே பாலத்தின் அடியில் வெகுநேரம் வெள்ளம் தேங்கி கிடந்தது. இதனால் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்வபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழையின் காரணமாக இரவில் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவியது. குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
    ×