search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI officer"

    • உங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் நீங்கள் செல்போன் வீடியோ அழைப்பை ஆன் செய்து வைக்க வேண்டும்.
    • போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவை சேர்ந்த 29 வயது பெண் வக்கீல் ஒருவரின் செல்போனுக்கு கடந்த 3-ந்தேதி அழைப்பு வந்தது. அதில் கூரியர் நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன ஊழியர் பேசுவதாகவும், உங்களது முகவரியிட்டு அனுப்பப்பட்ட பார்சலில் 140 கிராம் போதை பொருள் இருந்ததாகவும், உங்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறி அழைப்பை வேறு ஒரு நபருக்கு திருப்பிவிட்டார்.

    இதையடுத்து மும்பை சி.பி.ஐ. அதிகாரி பேசுவதாக கூறி தனது பெயர் அபிஷேக் சவுகான் என அடையாளப்படுத்திக் கொண்டு அழைப்பில் இணைந்தார். அப்போது அவர் நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு உள்ளீர்கள். வழக்கில் இருந்து விடுவிக்க நாங்கள் சொல்வதை போல் செய்யுங்கள் என கூறி அந்த பெண்ணிடம் ஸ்கைப் பதிவிறக்கம் செய்து சாட்டிங் தொடங்கும்படி கட்டாயப்படுத்தினார். மேலும் உங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் நீங்கள் செல்போன் வீடியோ அழைப்பை ஆன் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து கடந்த 3-ந் தேதி மதியம் 2.15 மணி முதல் 5-ந் தேதி அதிகாலை 1.15 மணி வரை சுமார் 35 மணி நேரத்தில் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் மர்ம நபர்கள் பயத்தைகாட்டினர். அப்போது அபிஷேக் சவுகான் அந்த பெண்ணிடம் போதைப்பொருள் சோதனைக்காக ஆடைகளை அகற்ற வேண்டும் என கூறினார். ஏறக்குறைய 36 மணி நேரம் நீடித்த ஒரே அழைப்பில், அந்த பெண் நிர்வாணமாக பதிவு செய்யப்பட்டு மிரட்டப்பட்டார். ரூ. 15 லட்சம் கொடுத்தால் உங்களை விட்டு விடுவதாக அபிஷேக் சவுகான் அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண் ஒரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.10.7 லட்சத்தை அபிஷேக் சவுகான கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பின்னர் கிரெடிட் கார்டில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாயை 2 பரிவர்த்தனைகளாக அனுப்பி வைத்தார். இதனிடையே அபிஷேக் சவுகான் மேலும் ரூ.10 லட்சம் தருமாறு கேட்டார். இல்லையொன்றால் வீடியோவை வலைதளங்களில் வெளியிடப்படும். நீங்களும், உங்களுடைய குடும்ப உறுப்பினர்களும் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்துபோன அந்த பெண் கடந்த 5-ந் தேதி அதிகாலை 1.15 மணியளவில் அழைப்பை துண்டித்துவிட்டு போலீசாரை அணுகினார்.

    இதையடுத்து போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் கூரியர் மோசடி தொடர்பாக எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் வெளியிட வேண்டாம், உடனடியாக சைபர் காவல்துறையை தொடர்பு கொள்ளவும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளில், போலி கூரியர் மோசடி மூலம் சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு நபரை அழைத்து தங்கள் பெயரில் ஒரு கூரியரில் போதைப்பொருள் அல்லது பிற சட்டவிரோத பொருட்களுடன் பிடிபட்டதாக தெரிவிக்கிறார்கள். மோசடி செய்பவர்கள் கூரியர் நிறுவன ஊழியர்களாக காட்டிக்கொண்டு பணமோசடி அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி பெண்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #CBIVsCBI #CBIOfficerTransfer #RakeshAsthana
    புதுடெல்லி:

    இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில் தொடர்புடைய ஐதராபாத் தொழிலதிபரை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான மணிஷ் குமார் சின்கா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு திடீரென மாற்றப்பட்டார்.



    இந்த இடமாற்ற உத்தரவை எதிர்த்து மணிஷ் குமார் சின்கா இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், தனது இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்விடம் முறையிட்டார்.

    கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்கே கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது தனது மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என சின்கா கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, சின்காவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CBIVsCBI #CBIOfficerTransfer #RakeshAsthana
    மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் சி.பி.ஐ. அதிகாரிபோல் நடித்து நகை-பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கும்பல் ஊழியர்களின் செல்போன்களை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    மதுரை:

    மதுரை தெற்கு வெளிவீதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 4 மணி அளவில் ஒரு நபர் வந்தார். அவர் நகை அடகு வைக்க வேண்டும். அதற்கு என்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என்று அங்கிருந்த ஊழியரிடம் விசாரித்து கொண்டிருந்தார்.

    அப்போது அடையாள அட்டையுடன் வருவதாக கூறி விட்டு வெளியே சென்ற அந்த நபர் சிறிது நேரத்தில் 4 பேருடன் மீண்டும் நிதி நிறுவனத்துக்குள் வந்தார்.

    அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் உங்கள் நிதி நிறுவனத்திற்கு எதிராக வந்த புகாரின் அடிப்படையில் விசாரிக்க வந்துள்ளோம். நாங்கள் அனைவரும் சி.பி.ஐ. அதிகாரிகள்.

    இங்குள்ள நகை-பணம் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டனர். இந்த நேரத்தில் அங்கிருந்த ஊழியர்கள் 5 பேரின் செல்போன்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 3 பேரின் செல்போன்களையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்த நிதி நிறுவன மேலாளரை சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது உடனடியாக லாக்கர் சாவியை தாருங்கள் சோதனை நடத்த வேண்டும் என்று அடிக்கடி கூறி கொண்டே இருந்தனர்.

    அவர்களது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட நிதி நிறுவன மேலாளர் எச்சரிக்கை அலாரத்தின் சுவிட்சை அழுத்தினார். அப்போது பயங்கர சத்தத்துடன் அலாரம் ஒலித்தது. சுதாரித்துக்கொண்ட அந்த கும்பல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் செல்போன்களை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் போல நிதி நிறுவனத்தில் புகுந்தவர்கள் போலி நபர்கள் என்றும், அவர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது.இதுகுறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. கொள்ளை முயற்சி நடந்த நிதி நிறுவனத்தில் கைரேகை நிபுணர்களும், போலீசாரும் சோதனை நடத்தினர்.

    நிதி நிறுவன மேலாளர் எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் அங்கிருந்த சுமார் 5 கோடி ரூபாய், நகைகள் தப்பியது.

    ×