என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![அஸ்தானா வழக்கை விசாரித்த அதிகாரி இடமாற்றம் - உச்ச நீதிமன்றத்தை நாடினார் அஸ்தானா வழக்கை விசாரித்த அதிகாரி இடமாற்றம் - உச்ச நீதிமன்றத்தை நாடினார்](https://img.maalaimalar.com/Articles/2018/Nov/201811191318268058_CBI-officer-probing-FIR-against-Asthana-moves-SC-challenges_SECVPF.gif)
X
அஸ்தானா வழக்கை விசாரித்த அதிகாரி இடமாற்றம் - உச்ச நீதிமன்றத்தை நாடினார்
By
மாலை மலர்19 Nov 2018 7:48 AM GMT (Updated: 19 Nov 2018 7:48 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #CBIVsCBI #CBIOfficerTransfer #RakeshAsthana
புதுடெல்லி:
![](https://img.maalaimalar.com/InlineImage/201811191318268058_1_supreme._L_styvpf.jpg)
இந்த இடமாற்ற உத்தரவை எதிர்த்து மணிஷ் குமார் சின்கா இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், தனது இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்விடம் முறையிட்டார்.
கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்கே கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது தனது மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என சின்கா கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, சின்காவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CBIVsCBI #CBIOfficerTransfer #RakeshAsthana
இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில் தொடர்புடைய ஐதராபாத் தொழிலதிபரை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான மணிஷ் குமார் சின்கா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு திடீரென மாற்றப்பட்டார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811191318268058_1_supreme._L_styvpf.jpg)
இந்த இடமாற்ற உத்தரவை எதிர்த்து மணிஷ் குமார் சின்கா இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், தனது இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்விடம் முறையிட்டார்.
கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்கே கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது தனது மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என சின்கா கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, சின்காவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CBIVsCBI #CBIOfficerTransfer #RakeshAsthana
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)