search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Black money case"

    • இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில், அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    • தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது.

    மும்பை :

    வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 8-ந் தேதி ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நோட்டீஸ், அனில் அம்பானி வேண்டும் என்றே சுவீஸ் வங்கியில் 2 வங்கி கணக்கில் உள்ள ரூ.814 கோடி பணம் குறித்து வருமான வரித்துறையிடம் மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர்.

    இந்த விவகாரத்தில் அனில் அம்பானி மீது கருப்பு பண ஒழிப்பு தடுப்பு சட்டம் பிரிவு 50, 51 கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில், அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் அனில் அம்பானி அவர் மீதான வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் கங்காபுர்வாலா, ஆர்.என். லத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அனில் அம்பானி தரப்பில் ஆஜரான வக்கீல், "அனில் அம்பானிக்கு எதிரான சட்டப்பிரிவு 2015-ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் 2006-07 மற்றும் 2010-11-ம் ஆண்டு நடந்தவை. எனவே குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க முடியாது" என கூறினார்.

    இதுகுறித்து பதில் அளிக்க தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நவம்பர் 17-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் அதுவரை அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

    கருப்பு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #AgustaWestlandcase #GautamKhaitan
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. அவர் மீது புதிதாக கருப்பு பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கவுதம் கெய்தானின் விசாரணைக் காவல் நிறைவடைந்ததை அடுத்து, அவரை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே, கருப்புப் பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி கவுதம் கெய்தான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பை 19-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. #AgustaWestlandcase #GautamKhaitan
    வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் தொடர்பாக கணக்கு சமர்ப்பிக்காத கார்த்தி சிதம்பரத்தின் மீது வருமான வரித்துறை விசாரித்து வரும் வழக்கில் அவருக்கு சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் அளித்துள்ளது. #KarthiChidambaram #anticipatorybail #BlackMoneycase
    சென்னை:

    சட்டத்தை மீறிய வகையில் வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பாக கணக்குகளை சமர்ப்பிக்காத கார்த்தி சிதம்பரத்தின் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கருப்புப் பண தடுப்பு சடத்தின்கீழ் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த விவாகரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக தவறியதால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து, போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க நேற்று நள்ளிரவு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வீட்டுக்கு சென்ற கார்த்தி சிதம்பரம் தனது வக்கீல்கள் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ், சதிஷ் பராசரன் 
    மூலம் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

    கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறிந்து வருமான வரித்துறை வக்கீலும் அதிகாரிகளும் நள்ளிரவு நேரத்தில் நீதிபதியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

    வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 18-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்த நிலையில், தனது மனைவி, குழந்தைகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டுச் செல்ல தயாராகும் நிலையில் தனக்கெதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்பியதும், வரும் 28-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார். 

    இதையே எழுத்துமூலமான வாக்குறுதியாக பதிவு செய்யுமாறு கூறிய நீதிபதி இந்திரா பானர்ஜி, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்வரை அவருக்கு எதிராக பிறப்பித்த பிடி வாரண்டை நிறுத்தி வைக்குமாறு வருமான வரித்துறை வக்கீல்களுக்கு உத்தரவிட்டார். பிடி வாரண்ட் நிறுத்தப்பட்டதை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார். #KarthiChidambaram #anticipatorybail  #BlackMoneycase
    ×