search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengaluru Airport"

    • பயணிகள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • போலீசார் விரைந்துவந்து வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    பெங்களூரு:

    பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சிலர் தனது உடைமைகளை இழந்துவிட்டதாக கூறியும், பர்சை தவற விட்டதாகவும் கூறி பணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இத்தகைய மோசடி நபர்கள் தற்போது விமான நிலையம்வரை வந்து விமான பயணிகளிடமும் கைவரிசை காட்ட தொடங்கிவிட்டனர்.

    பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுட சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒரு வாலிபர் எனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலரிடம் பணம் வசூலித்தார்.

    அவரது நிலையை அறிந்த பலரும் அவரிடம் பணம் கொடுத்தனர். இந்த நிலையில் அவரது நடவடிக்கையில் சில பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்துவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பதும், தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி பணம் வசூலித்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை சோதனை செய்ததில் அவரது பர்சில் பல்வேறு வங்கிகளை சேர்ந்த 26 கிரெடிட் கார்டுகள் இருந்தன.

    சென்னைக்கு செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டும் அவரிடம் இருந்தது. இதை தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த விக்னேஷ் கடந்த ஆண்டு சென்னை, ஐதராபாத், மும்பை விமான நிலையங்களிலும் இதுபோன்று பணம் வசூலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் யாரும் அதுபற்றி புகார் செய்யவில்லை.

    மேலும் பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு பயணியிடம் வேலைக்கான இண்டர்வியூ செல்ல வேண்டும், எனது உடைமைகளை இழந்துவிட்டேன் என கூறி ரூ.8 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இதுபற்றி அந்த பயணி கொடுத்த புகாரில்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • நவராத்திரி விழா உற்சாக நடைபெற்று வரும் வேளையில் இதன் கொண்டாட்டங்கள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.
    • கர்நாடக மாநிலத்தில் மைசூர் தசரா விழா உலக பிரசித்தி பெற்றதாகும்.

    பெங்களூரு:

    நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இது விஜயதசமி, தசரா, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுகா, குல்லு தசரா, துர்கா மா என இன்னும் பல்வேறு பெயர்களில் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    மற்ற திருவிழாக்கள் எல்லாம், ஓரிரு நாட்களில் முடிந்து விடும். ஆனால் நவராத்திரி திருவிழா மட்டும் தான் 9 நாட்கள் நடைபெறும் என்பது இதன் சிறப்பாகும். அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    நவராத்திரி விழா உற்சாக நடைபெற்று வரும் வேளையில் இதன் கொண்டாட்டங்கள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.

    கர்நாடக மாநிலத்தில் மைசூர் தசரா விழா உலக பிரசித்தி பெற்றதாகும். அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் பண்டிகையாக நவராத்திரி திகழ்வதற்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் கர்பா நடனம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் கர்பா நடனம் ஆடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ட்விட்டர் பயனாளர் திவ்யா புத்ரேவு இதை பகிர்ந்துள்ளார்.

    பயணிகள் குழுவினர் விமான நிலையத்தில் திடீரென திரண்டு கர்பா நடனத்தில் ஈடுபடுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. பயணிகள் தங்கள் பொருட்களைத் தூக்கி விட்டுவிட்டு தன்னிச்சையாக குழுவோடு இணைந்து நடனம் ஆடினர்.

    ஊழியர்களில் சிலர் புலிகளைப் போலவும், சில பெண்கள் வண்ணமயமான பாரம்பரிய ஆடைகளிலும் காணப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் இசைக்கு ஒத்திசைந்து ஆடியது பார்வையாளர்களை கவர்ந்தது. பார்வையாளர்களும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதைக் காணக்கூடியதாக இருந்ததால், நடன நிகழ்ச்சியில் ஒரு மகிழ்ச்சியான கூட்டம் பங்கேற்பதை வீடியோ காட்டியது. பயணிகள் சரியான ஒத்திசைவில் நடனமாடுகிறார்கள்.

    இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் 4500க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகளின் நடனத்துக்கு நன்றி தெரிவித்து கருத்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் சிறந்த பயணிகள் அனுபவத்தை வழங்குவதில் பெங்களூரு விமான நிலையம் முன்னோடியாக இருக்க முயற்சிக்கிறது. எங்கள் பயணிகள் இந்த முயற்சியை பாராட்டுகிறோம்!" என்று குறிப்பிட்டுள்ளனர்.

    நடனம் குறித்து கருத்து கூறியுள்ள மற்றொருவர், " பெங்களூரு பல கலாச்சாரங்களின் கலவையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். கர்பா என்பது ஒரு அழகிய நடனமாகும், நவராத்திரி முழுவதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும். பெங்களூருவில் தற்போது நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடும் பனி மூட்டத்தால பெங்களூரு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால், சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. #ChennaiAirport
    வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் குளிர் நிலவி வருகிறது. காலை நேரங்களில் பனி மூட்டங்கள் அதிக அளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    வடமாநிலங்களைத் தொடர்ந்து தென் மாநிலங்களிலும் குளிர் அதிக அளவில் நிலவி வருகிறது. இன்று காலை பெங்களூருவில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பனிமூட்டங்கள் காணப்பட்டது. இதனால் சிங்கப்பூர் - பெங்களூரு விமானமும், கோவா- பெஙகளூரு விமானமும் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தன.

    இந்நிலையில் அந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன. மேலும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலான 50 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரத்தில் தாமதம் ஏற்பட்டன.
    பெங்களூரு விமான நிலையத்தில் பணிக்கு போதை மயக்கத்தில் வந்த பெண் விமானிக்கு விமானத்தை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது வழக்கம்போல் விமானிகள், விமான ஊழியர்களிடம் மது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை அறியும் மூச்சு பரிசோதனை நடத்தப்பட்டது.

    அப்போது துணை பெண் விமானி ஒருவர் போதை மயக்கத்தில் இருந்தது தெரியவந்தது. எனவே அவர் விமானம் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தகவலை ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார். பொதுவாக விமானம் ஓட்டும் முன்பு விமானிகளிடம் 2 தடவை மூச்சு பரிசோதனை நடத்தப்படும். அப்போது அவர்கள் போதை பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டால் விமானம் ஓட்ட தடை விதிக்கப்படும். அது 3 மாதமாக இருக்கலாம் அல்லது 3 வருடமாக இருக்கலாம்.

    2016-ம் ஆண்டு முதல் இப்பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது மதுபோதையில் இருந்த 2 விமானிகளும் 3 விமான ஊழியர்களும் சிக்கினர். இவர்கள் சர்வதேச விமானங்களை ஓட்டும் விமானிகள் ஆவர். தற்போது போதை மயக்கத்தில் இருந்ததாக சிக்கிய பெண் விமானி விமான பணிப்பெண்ணாக இருந்தவர். #tamilnews
    பெங்களூரில் விமான நிலையத்துக்கு சென்ற பெண்ணை மானபங்கப்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்த கட்டிட கலை வடிவமைப்பாளரான 26 வயது பெண் கடந்த 1-ந் தேதி மும்பை புறப்பட்டார்.

    அதிகாலை 2 மணி அளவில் அவர் வாடகை காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ஆனால் திடீரென கார் டிரைவர் மாற்றுப் பாதையில் அழைத்து சென்றார். அப்போது அந்த பெண் இது குறித்து கேட்ட போது மிரட்டினார். அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றார். பின்னர் தனது காரில் வைத்து மானபங்கப்படுத்தினார்.

    அதோடு அந்த பெண்ணின் ஆடையை கட்டாயமாக அவிழ்த்ததும் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார். மேலும் படம் எடுக்க போஸ் கொடுக்குமாறும் கட்டாயப்படுத்தினார்.

    இதுகுறித்து புகார் கொடுத்தால் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து விடுவோம் என்றும் மிரட்டினார்.

    அந்த பெண் மும்பை சென்றடைந்த பிறகு நடந்த சம்பவம் குறித்து பெங்களூர் போலீஸ் கமி‌ஷனருக்கு இமெயில் மூலம் புகார் அனுப்பினார். இந்த புகார் மனு ஜே.பி. நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் பெண்ணை மானபங்கப்படுத்திய வாடகை கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    செல்போனில் படம் எடுப்பதற்காக குற்றவாளி அந்த பெண்ணின் ஆடையை அவிழ்க்குமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் அந்த பெண் மறுத்தார். மிரட்டி படம் எடுத்து உள்ளார்.

    இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். #Tamilnews
    ×