search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்பா நடனம்"

    • குஜராத்தின் பிரபலமான கர்பா நடனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.
    • யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் ஒய்சாலா கோவில்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

    இந்த கர்பா நடனத்தைப் பார்த்து ரசிப்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிகின்றனர். வட மாநிலங்கள் பலவற்றில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும் குஜராத்தில் கர்பா நடனம் புகழ் பெற்றது.

    கர்பா நடனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கக் கோரி மத்திய அரசு யுனெஸ்கோவுக்கு பரிந்துரைத்தது.

    இந்நிலையில், பாரம்பரிய கலாசார நிகழ்வுகளைப் பாதுகாக்கும் யுனெஸ்கோவின் சர்வதேச குழுவின் மாநாடு தென் அமெரிக்க நாடான போட்ஸ்வானாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி குஜராத்தின் பாரம்பரியமான கர்பா நடனத்தைக் கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

    குஜராத்தின் கர்பா நடனத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததற்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • துர்கா தேவியை மையமாக வைத்து பாடுபொருளாக இசைக்கப்படுவது கர்பா பாடல்கள்.
    • குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் இறந்துள்ளனர்.

    அகமதாபாத்:

    நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

    இந்நிலையில், குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 10 பேரும் இள வயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பரோடாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல், அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபரும் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். இதேபோல், மேலும் 8 உயிரிழப்புகள் குஜராத்தில் பதிவாகியுள்ளன.

    நவராத்திரி தொடங்கி முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன.

    இதையடுத்து, கர்பா நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் இள வயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

    • நவராத்திரி விழா உற்சாக நடைபெற்று வரும் வேளையில் இதன் கொண்டாட்டங்கள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.
    • கர்நாடக மாநிலத்தில் மைசூர் தசரா விழா உலக பிரசித்தி பெற்றதாகும்.

    பெங்களூரு:

    நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இது விஜயதசமி, தசரா, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுகா, குல்லு தசரா, துர்கா மா என இன்னும் பல்வேறு பெயர்களில் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    மற்ற திருவிழாக்கள் எல்லாம், ஓரிரு நாட்களில் முடிந்து விடும். ஆனால் நவராத்திரி திருவிழா மட்டும் தான் 9 நாட்கள் நடைபெறும் என்பது இதன் சிறப்பாகும். அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    நவராத்திரி விழா உற்சாக நடைபெற்று வரும் வேளையில் இதன் கொண்டாட்டங்கள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.

    கர்நாடக மாநிலத்தில் மைசூர் தசரா விழா உலக பிரசித்தி பெற்றதாகும். அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் பண்டிகையாக நவராத்திரி திகழ்வதற்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் கர்பா நடனம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் கர்பா நடனம் ஆடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ட்விட்டர் பயனாளர் திவ்யா புத்ரேவு இதை பகிர்ந்துள்ளார்.

    பயணிகள் குழுவினர் விமான நிலையத்தில் திடீரென திரண்டு கர்பா நடனத்தில் ஈடுபடுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. பயணிகள் தங்கள் பொருட்களைத் தூக்கி விட்டுவிட்டு தன்னிச்சையாக குழுவோடு இணைந்து நடனம் ஆடினர்.

    ஊழியர்களில் சிலர் புலிகளைப் போலவும், சில பெண்கள் வண்ணமயமான பாரம்பரிய ஆடைகளிலும் காணப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் இசைக்கு ஒத்திசைந்து ஆடியது பார்வையாளர்களை கவர்ந்தது. பார்வையாளர்களும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதைக் காணக்கூடியதாக இருந்ததால், நடன நிகழ்ச்சியில் ஒரு மகிழ்ச்சியான கூட்டம் பங்கேற்பதை வீடியோ காட்டியது. பயணிகள் சரியான ஒத்திசைவில் நடனமாடுகிறார்கள்.

    இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் 4500க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகளின் நடனத்துக்கு நன்றி தெரிவித்து கருத்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் சிறந்த பயணிகள் அனுபவத்தை வழங்குவதில் பெங்களூரு விமான நிலையம் முன்னோடியாக இருக்க முயற்சிக்கிறது. எங்கள் பயணிகள் இந்த முயற்சியை பாராட்டுகிறோம்!" என்று குறிப்பிட்டுள்ளனர்.

    நடனம் குறித்து கருத்து கூறியுள்ள மற்றொருவர், " பெங்களூரு பல கலாச்சாரங்களின் கலவையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். கர்பா என்பது ஒரு அழகிய நடனமாகும், நவராத்திரி முழுவதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும். பெங்களூருவில் தற்போது நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×