search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bcom."

    • கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக உள்ளனர்.
    • கட்-ஆப் மார்க் 99-100 வரை செல்ல வாய்ப்பு.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் உயர் கல்வியில் சேருவதற்கான நடை முறைகளை பின்பற்றி வருகின்றனர். வழக்கம்போல இந்த ஆண்டும் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக உள்ளனர்.

    என்ஜினீயரிங், கலை அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் உற்சாகத்துடன் விண்ணப்பிக்கின்றனர். இந்த ஆண்டு வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் பாடங்களில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    அதனால் கட்-ஆப் மார்க் 99-100 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்கள் உள்ளன. பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ. உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் சேருவதற்கு போட்டி போட்டு விண்ணப்பிக்கின்றனர்.

    அரசு கலைக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் படிக்க ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிப்பதற்கு வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அரசு கல்லூரிகளை நாடுகின்றனர்.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் போதும். படிப்பு செலவு (சுமை) இல்லாமல் போய் விடும் என பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பி.காம் (பொது), பி.காம் (நிதி), கார்பரேட் மற்றும் பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை தெரிவு செய்து இடங்களை புக் செய்து உள்ளனர்.

    சென்னையில் உள்ள டாப் கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிக்க அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் செல்வாக்கை பயன்படுத்தி சிபாரிசு கடிதம் பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    லயோலா கல்லூரி, டி.ஜி. வைஷ்ணவக் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி, ஸ்டெல்லா மேரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் பி.காம் இடத்திற்கு அலை மோதுகிறார்கள்.

    கட்-ஆப் மார்க் அடிப் படையில் மாணவர் சேர்க்கை என்றாலும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது இடம் வாங்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

    இதுதவிர பாரதி மகளிர் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, மாநில கல்லூரி போன்ற அரசு கலைக் கல்லூரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏ. அமைச்சர்களின் சிபாரிசு கடிதம் பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

    ஒரு சில கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்கும் போட்டி ஏற்பட்டு உள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இது வரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும்.
    • பி.காம் படிக்க 99 சதவீதம் கட்ஆப் மதிப்பெண் தேவை.

    சென்னை:

    பள்ளி கல்வியில் இறுதி வகுப்பான பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம் என்றாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும்.

    என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கணித பாடத்துடன் இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண் முக்கியமாகும். இந்த 3 பாடங்களின் கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. 3 பாடங்களில் எடுத்த மதிப்பெண் கணக்கீடு செய்து கட்-ஆப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். இதனால் பொறியில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.

    கடந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் 3909 பேர் முழு மதிப்பெண் பெற்றனர். அதே போல் இயற்பியல் பாடத்தில் 812 பேர் நூற்றுக்கு நூறு பெற்று இருந்தனர். அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு இந்த பாடங்களில் 100க்கு 100 பெற்றவர்கள் குறைவாகும்.

    இயற்பியல் பாடத்தில் 633 பேரும், வேதியியல் பாடத்தில் 471 பேரும் முழு மதிப் பெண் பெற்றுள்ளனர். ஆனால் பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் தொடர்பான பாடப்பிரிவுகளில் 8 ஆயிரம் இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக கட்-ஆப் மார்க் குறைய வாய்ப்பு உள்ளது.

    அதே நேரத்தில் வணிகவியல், பொருளியல் பாடங்களில் அதிகமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

    வணிகவியலில் 6142 பேரும், பொருளியலில்3299 பேரும் சதம் அடித்ததால் டாப் கலை அறிவியல் கல்லூரிகளில் கட்-ஆப் மார்க் 99-100 வரை உயர வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    இந்த வருடம் இயற்பியல், வேதியியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாகும். கணிதப் பாடத்தில் 2587 பேர் நூற்றுக்கு நூறு எடுத்து உள்ளனர்.

    கட்-ஆப் மதிப்பெண் குறைவதற்கு முக்கிய காரணம் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு மட்டுமின்றி நிறைய பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயமாக கட்-ஆப் மார்க் குறையும்.

    மேலும் வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு கட்-ஆப் மார்க் குறையும்.

    தாவரவியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் சென்டம் குறைந்துள்ளதால் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

    ஆனால் வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடங்களில் இந்த அணடு அதிக அளவிலான சென்டம் வாங்கி உள்ளனர். இதனால் டாப்-கலை கல்லூரிகளில் மிகக் கடுமையான போட்டி ஏற்படக்கூடும்.

    பி.காம் பாடப் பிரிவுகளுக்கு கடந்த ஆண்டு கடுமையான போட்டி இருந்தது. இந்த வருடம் அதை விட கூடுதலாக போட்டி ஏற்படும். 99 முதல் 100 வரை கட்-ஆப் மார்க் இடம் பெறக் கூடும்.

    பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை 84 சதவீதமாக இருந்து வந்தது. அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் செயல்பாடு சிறப்பாக இருப்பதால் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.

    இதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு முக்கிய காரணமாகும். நன்றாக படித்தால் உயர் பதவிக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டதால் புதிய உற்சாகத்தை கொடுத்து உள்ளது. அதன் காரணமாக தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் கம்ப்யூட்டர் மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த வருடம் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேதியியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    • கடந்த ஆண்டு அனைத்து போர்டுகளையும் உள்ளடக்கிய ரேங்க் பட்டியலில் 134 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய 94 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கணித பாடத்தில் 690 பேர் மட்டும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். கடந்த ஆண்டில் 1,858 பேர் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 3 பங்கு சென்டம் குறைந்துள்ளது.

    ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேதியியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    வேதியியல் பாடத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 1,500 மாணவர்கள் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டு 3,909 பேர் சென்டம் வாங்கி உள்ளனர்.

    இதே போல இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 634 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 812 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த ஆண்டு உயிரியலில் 1,494 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பேரும், கணித அறிவியலில் 4,618 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    கணினி அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு 3,827 பேர் சென்டம் பெற்றிருந்தனர். அது இந்த ஆண்டு 4,618 ஆக உயர்ந்துள்ளது.

    மொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 8,544 மாணவ-மாணவிகள் அதிகமாக 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். பிளஸ்-2 தேர்வில் கணித அறிவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 200 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு (கணிதம் 100, வேதியியல்+ இயற்பியல் 100 மதிப்பெண்) அடிப்படையில் என்ஜினீயரிங் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

    இந்த ஆண்டு கணித பாடத்தில் சென்டம் வாங்கியவர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் கூட வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 2 மடங்கு பேர் கூடுதலாக முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை இயற்பியல், வேதியியலை விட 2 மடங்கு கூடுதல் முக்கியத்துவம் கணித பாடத்திற்கு கொடுக்கப்படுகிறது. எனவே என்ஜினீயரிங் கட்-ஆப் மதிப்பெண் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும் கடந்த ஆண்டு அனைத்து போர்டுகளையும் உள்ளடக்கிய ரேங்க் பட்டியலில் 134 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

    இந்த ஆண்டு கணித பாடத்தில் சென்டம் வாங்கியவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதோடு, அந்த பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதால் என்ஜினீயரிங் சேர்கைக்கான கவுன்சிலிங்கில் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது என கல்வி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    அதே நேரத்தில் கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் நகர கல்லூரிகளில் பி.காம் இடங்களை பெறுவதற்கு கடும் போட்டி நிலவும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

    கணக்கு பதிவியலில் 6,573 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 44 சதவீதம் அதிகமாகும். இதே போல வணிகவியலில் 5,678 பேர் சென்டம் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 22 சதவீதம் அதிகமாகும்.

    எனவே லயோலா போன்ற கல்லூரிகளில் இந்த ஆண்டு பி.காம் பொதுப்பிரிவு இடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் 100 சதவீதத்தை கூட தொடக்கூடும் என கல்வி ஆலோசகர்கள் கணித்துள்ளனர்.

    இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், கடந்த ஆண்டு லயோலா கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிகளில் பி.காம் இடங்களுக்கான கட்-ஆப் 98 சதவீதம் வரை இருந்தது. இந்த ஆண்டு அங்கு பி.காம் படிப்புகளுக்கு கட்-ஆப் 99 சதவீதத்தை தாண்டும் அல்லது 100 சதவீதத்தை தொட வாய்ப்புள்ளது.

    இந்த ஆண்டு சி.பி.எஸ்.சி. காமர்ஸ் ஸ்ட்ரீம் தேர்வுகள் கூட எளிதாக இருந்ததாகவும் அந்த மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

    ஒட்டு மொத்தமாக வேதியியல், கணித அறிவியல் போன்ற பாடங்களிலும் குறைந்தது ஒரு பாடத்திலாவது முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

    • தரவரிசைப்பட்டியல் www.cgac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • அசல் மாற்றுச்சான்றிதழ் இல்லை எனில் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு கலைக்கல்லுாரிகளில், கடந்தாண்டைக் காட்டிலும், இந்தாண்டு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சிக்கண்ணா கல்லுாரியில் வரும் 10ம் தேதியும், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் வரும் 8ம் தேதியும் கலந்தாய்வு துவங்குகிறது.இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் வரும் 10ம் தேதி துவங்கி, 17 வரை நடக்கிறது. விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.cgac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தி–னரின் குழந்தைகள் தேசிய மாணவர்படை ஏ' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை வரும் 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. ஆடை வடிவமைப்பு நாகரிகம் பாடப்பிரிவிற்கும், கலந்தாய்வு நடக்கும். வணிகவியல் சார்ந்த பாடப்பிரிவுகளுக்கும், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான தரவரிசை, 750 வரையிலான கலந்தாய்வு வரும் 11ல் நடக்கிறது. வரும் 12ம் தேதி, 751 முதல், 1,400 வரையிலும் நடக்கிறது.அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு, தரவரிசை, 700 வரையில், வரும் 13ம் தேதி நடக்கிறது.மேலும், 701 முதல், 1,400 வரையில் வரும் 16ல் நடக்கிறது. வரும் 17ம் தேதி தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு முதல், 1000 பேருக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடக்கும். இதுகுறித்த விவரங்கள், மாணவர்களின் இ மெயில், மொபைல் எண்ணிற்கு வரும். இதுகுறித்து சிக்க–ண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:- கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 சான்றிதழ் அவசியம். மாற்றுச்சான்றிதழ், சாதி–ச்சான்றிதழ், சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் அவசியம் எடுத்து வரவும். பாஸ்போர்ட் அளவிலான, 6 புகைப்படங்கள் வேண்டும். கல்லுாரி கட்டண தொகை செலுத்த வேண்டும்.அசல் மாற்று–ச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் இல்லை எனில் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வரவும்.

    இம்முறை அரசு கலை கல்லுாரிகளில் தமிழகத்தில் முதல்முறையாக ரேங்கிங் பட்டியல் இக்கல்லுாரியில்தான் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இதைபோல் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, காங்கயம் கலை அறிவியல் கல்லுாரிகளில் வரும் 8ம் தேதி கலந்தாய்வு துவங்கப்பட உள்ளது. ஊரடங்கிற்கு பின் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த முறை, 4 ஆயிரம் பேர் மட்டுமே சிக்கண்ணா கல்லுாரியில் சேர விண்ணப்பித்த நிலையில் இம்முறை, 6 ஆயிரத்து, 119 பேரின் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் 4 ஆயிரத்து, 42 விண்ணப்ப–ங்கள் பெறபட்டுள்ளதாகவும், கடந்தாண்டை விட ஆயிரம் விண்ணப்பங்கள் அதிகம் என்றும் தெரிவித்தனர். அதேபோல் இந்த ஆண்டு பி. காம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம் போன்ற பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

    • கல்லூரிகளில் பி.காம். படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
    • 300 இடங்களுக்கு 5 ஆயிரத்திற்கும் விண்ணப்பங்கள்

    திருச்சி:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேர்வதற்காக கல்லூரிகளை தேர்வு செய்து வருகிறார்கள். மேலும் என்ன படித்தால் எந்த வேலைக்கு செல்லலாம் என ஆர்வமாக ேதடித்தேடி கல்லூரி படிப்புகளை முடிவு செய்கிறார்கள்.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், அரசு கல்லூரிகள் உள்ளிட்டவைகளில் மாணவ-மாணவிகள் ஆர்வமாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற படிப்பை தேர்வு செய்து விண்ணப்படிவங்களை கல்லூரிகளுக்கு நேரிலும், இணையதளம் மூலமாகவும் அனுப்பி வருகின்றனர்.

    இதில் பி.காம் பட்டப்படிப்பிற்கு அதிக அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் அதிக அளவிலான மாணவ-மாணவிகள் பி.காம். பட்டப்படிப்ைப தான் தேர்வு செய்வதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து திருச்சி ஜமால் முகமது கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தததில் இருந்து கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்படிவங்களை அளித்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் உள்ளிட்டவைகளை படிப்பதற்கு அதிக முன்னுரிமை அளிப்பது வழக்கம்.

    ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கல்லூரி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் பி.காம். பட்டப்படிப்பில் சேர்வதில் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது வரை ஆயிரத்திற்கும் மேல் எங்கள் கல்லுரியில் பி.காம். படிப்பில் சேர விரும்புவர்களின் விண்ணப்ப படிவங்கள் வந்து குவிந்துள்ளது.

    பி.காம். பட்டப்படிப்பை அதிகம் அவர்கள் ஏன் விரும்புகிறார்கள் என்று ஆராயும் போது, பி.காம். இளநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு முதுநிலையில் சி.ஏ., சி.எஸ்., எம்.பி.ஏ., எம்.காம். உள்ளிட்ட படிப்புகளை படித்து நல்ல உயர்ந்த இடத்திற்கு வேலைக்கு செல்லவும், தங்களது வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ளவும் தேர்வு செய்துள்ளதாக மாணவர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் இதுபோன்ற படிப்புகளை படித்து முடிப்பதால் நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து அதிக வருவாய் கிடைக்கும் வழியை ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். கிராமப்புறத்தில் உள்ளவர்கள் குறிப்பாக பி.ஏ., பி.எஸ்சி. படித்துவிட்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்தால் நல்ல மதிப்பில் இருந்து வந்தனர்.

    அதேபோல் தற்போது பி.காம். பட்டபடிப்பிற்கு தான் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வங்கி போட்டித்தேர்வுகள், அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்தும் இருப்பதால் அனைவரும் பி.காம். படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தொழில் நுட்பவியல், நூண்ணுயிரியல் படிப்பிலும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே சேர்கிறார்கள் என்றார்.

    பிஷப்ஹீபர் கல்லூரி நிர்வாகத்தினர் கூறும்போது, இந்த ஆண்டு கணிதம் மற்றும் வணிகவியல் படிப்பை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எங்கள் கல்லூரியில் பி.காம். படிப்பிற்கான இடம் 300 தான் உள்ளது. ஆனால் 5 ஆயிரத்திற்கும் மேல் மாணவ, மாணவிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர் என்று கூறினார்.

    மாணவர்களின் தேவை இருப்பின் கூடுதலாக பி.காம். இடங்கள் அதிகரிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அரசு மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இந்த ஆண்டு மாணவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பட்டப்படிப்புகளின் மீது அதிகரித்து வரும் மோகம் தான் இதற்கு காரணமாகும்.

    பொறியியல் படிப்புகளின் மீது இருந்து வந்த ஆர்வம் குறைந்து இப்போது கலை அறிவியல் பாடப் பிரிவுகள் மீது திரும்பி இருப்பதால் எல்லா கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பி வருகின்றன.

    குறிப்பாக பி.காம்., பி.ஏ. ஆங்கிலம், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கே இடம் கிடைக்கவில்லை.

    அரசு மட்டுமின்றி ஒரு சில தனியார் கலைக் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் இடங்கள் நிரம்பி விட்டதால் மற்ற பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பதாரர்களை மாற்றி வருகிறார்கள். ஆனாலும் இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பி.காம்.மில் இடம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பி.காம். இடங்கள் கடந்த ஆண்டு சில கல்லூரிகளுக்கு அதகரித்து கொடுக்கப்பட்டது. அதுபோல இந்த வருடமும் தேவையைக் கருதி கூடுதலாக இடங்கள் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியதாவது:-

    அரசு கலைக்கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் இந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்பது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

    தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அடிப்படையில் புதிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

    புதிய பாடப்பிரிவுகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்த பிறகு தேவை இருப்பின் கூடுதலாக பி.காம். இடங்கள் அதிகரிக்கப்படும். அதேபோல தனியார் கல்லூரிகளிலும் தேவையை அறிந்து இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #BCom #TNMinister #KPAnbazhagan
    இந்த வருடம் அதிகளவு விண்ணப்பம் வந்தால் கூடுதலாக பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவு இடங்கள் உருவாக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா கூறினார்.
    கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா கூறியதாவது:-

    கடந்த வருடத்தை போல இந்த ஆண்டும் பட்டப்படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. எந்தெந்த பகுதியில் தேவை அதிகமாக உள்ளது என்பதை அறிந்து முன் கூட்டியே விண்ணப்பம் வினியோகம் தொடங்கப்பட்டு விட்டது.

    பி.காம், பி.ஏ., பி.பி.ஏ., கலை பாடப்பிரிவுகளிலும் பி.எஸ்.சி. அறிவியல் பாடப்பிரிவுகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தேர்வு முடிவு வெளிவந்து 10 வேலை நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இதுவே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்ற பாடப்பிரிவு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்

    தேர்வானவர்களின் முதல் பட்டியல் ஜூன் 2-வது வாரத்திற்குள் வெளியிடப்படும். அதன் பின்னர் விடுபட்டவர்கள், தாமதமாக விண்ணப்பித்தவர்கள் போன்றவற்றை ஆய்வு செய்து 2-வது பட்டியல் வெளியிடப்படும்.

    அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த வருடம் அதிகளவு விண்ணப்பம் வந்தால் கூடுதலாக பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவு இடங்கள் உருவாக்கப்படும். தேவையை பொறுத்து இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×