search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "April Fool"

    • உலக முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாட்டப்பட்டு வருகிறது
    • கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மனிதர் தந்திரமாகச் சொன்ன #AprilFool பொய்களை இன்னும் நம்பி கொண்டிருக்கிறது நமது இந்தியா!

    உலக முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாட்டப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பலரும் பல ஒலிகளை சொல்லி மற்றவரை ஏமாற்றுவர். அவ்வகையில் இன்று உலக முட்டாள் தினம் கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "ஒரு நினைவூட்டல்: இன்று #AprilFool என்கின்றனர் பலர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மனிதர் தந்திரமாகச் சொன்ன #AprilFool பொய்களை இன்னும் நம்பி கொண்டிருக்கிறது நமது இந்தியா!

    ஆண்டுக்கு 2 கோடி வேலை என்றார்! நம்பினோம்..

    அனைவருக்கும் 15 லட்சம் என்றார்! நம்பினோம்..

    ஸ்விஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் இதோ வந்துவிட்டது என்றார்! நம்பினோம்..

    50 நாட்களில் தீக்குளிப்பேன் என்று கண்ணீர் வீட்டார்! நம்பினோம்..

    சமையல் பாத்திரங்களை தட்டினால் கொரோனா ஓடிவிடும் என்றார்! நம்பினோம்..

    இதோ இந்தியா வல்லரசாகி விட்டது என்றார்! நம்பினோம்..

    விநாயகருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது என்றார்! நம்பினோம்...

    2022-ற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்றார்! நம்பினோம்..

    ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்றார்! நம்பினோம்...

    இவற்றை எல்லாம் சொன்னது யார்? ஒன்றாவது நிறைவேறியதா? எதுவும் இல்லை.

    ஓட்டுமொத்த இந்தியர்களையும் தனது வார்த்தை ஜாலத்தால் முட்டாளாக்கியது யார்? April 19-ல் பதிலடி கொடுப்போம். இந்தியாவை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×