search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aligarh"

    • பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது
    • இச்சம்பவத்தை எம்.எல்.ஏ. ஜெய்வீர் சிங் கவனிப்பதும் பதிவாகியுள்ளது

    பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த தலைவர்களில் ஒருவரான மறைந்த பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அலிகாரின் கோல் பகுதியில் ஸ்ரீராம் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோல் சட்டசபை உறுப்பினர் அனில் பராசர் ஏற்பாடு செய்திருந்தார். அம்மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர், உயர் கல்வி அமைச்சர் மற்றும் முன்னாள் மேயர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

    இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான சதீஷ் குமார் கவுதம் (51). கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த சதீஷ், தனக்கு அருகே அமர்ந்திருந்த பா.ஜ.க.வின் பெண் சட்டசபை உறுப்பினர் ஒருவரின் தோளில் கை போட்டார். இந்த அநாகரீகமான செய்கையை அடுத்து அப்பெண் எம்.எல்.ஏ. தனது இருக்கையை மாற்றி அதே மேடையில் வேறொரு இடத்தில் அமர்ந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சி அங்கிருந்த சிலரால் வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், எம்.பி.யின் அத்துமீறலை அந்த பெண் எம்.எல்.ஏ. தடுக்க முற்படுவதும் இந்த சம்பவத்தை பா.ஜ.க.வின் பரோலி எம்.எல்.ஏ.வான தாகுர் ஜெய்வீர் சிங் கவனிப்பதையும் காண முடிகிறது.

    இந்நிகழ்ச்சி வைரலானதை தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி.யின் அநாகரீக செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய ஊடக பொறுப்பாளர் சுரேந்திர ராஜ்புத், "இதுதான் கலாச்சார பெருமை பேசும் பா.ஜ.க.வின் உண்மையான கலாச்சாரம்" என விமர்சித்துள்ளார்.

    இதுவரை இச்சம்பவம் குறித்து பா.ஜ.க.வின் தரப்பிலிருந்து எந்த அறிக்கையோ அல்லது அந்த எம்.பி. மீது  என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த செய்தியோ வரவில்லை.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் முதல் கூட்ட தொடரில் பெண்களுக்கு பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளில் 33% இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை பா.ஜ.க. கொண்டு வந்தது. ஆனால், மேடையில் பெண் எம்.எல்.ஏ.வை நிம்மதியாக அமர கூட விடவில்லை என இந்நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் என்கவுண்டர் செய்வதற்கு முன், பத்திரிகையாளர்களை வர வழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். #AligarhEncounter
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாக முஸ்டாக்கிம் மற்றும் நவ்சாத் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர். 

    இந்த நிலையில், நேற்று இவர்கள் 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை விரட்டி சென்ற போது அலிகாரில் உள்ள பழைய கட்டிடத்தில் மறைந்து கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். 

    இதனையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் மறைந்து இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகளை என்கவுண்டர் செய்தனர்.

    முன்னதாக சம்பவ இடத்திற்கு பத்திரிகையாளர்களை வரவழைத்து துப்பாக்கிச்சண்டையை படம் பிடித்து கொள்ளவும் அனுமதி வழங்கினர்.

    யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பு ஏற்தில் இருந்து மாநிலத்தில் உள்ள 60க்கு மேற்பட்ட ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×