search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alex Hales"

    • அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது சரியான முடிவாகும்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தவர். மேலும் ஜோஸ் பட்லருடன் இணைந்து அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார்.

    ஹேல்ஸ் கடைசியாக கடந்த நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்காக விளையாடினார். மூன்று வருடங்களுக்கு பிறகு அலெக்ஸ் போட்டிக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.

    இந்நிலையில், அலெக்ஸ் தனது 11 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

    ஓய்வு குறித்து ஹேல்ஸ் கூறியதாவது:-

    அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது ஒரு பாக்கியம். இப்போது அந்த பயணத்தைப் பற்றி சிந்தித்து பார்க்கிறேன். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான் பெற்ற வாழ்க்கை மற்றும் இங்கிலாந்தின் அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருந்த தருணங்கள் உண்மையில் திருப்தி அளிக்கிறது.

    ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் செய்த பல நினைவுகள் உள்ளன. ஆனால் டிரெண்ட் பிரிட்ஜில் அந்த இரண்டு ஒரு நாள் சர்வதேச உலக சாதனை ரன்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். மேலும் இங்கிலாந்தில் நடந்த அந்த இரண்டு ஆட்டங்களிலும் மூன்று புள்ளிகளை எட்ட முடிந்தது.

    டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது சரியான முடிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போதைமருந்து விவகாரத்தில் சிக்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன், உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #WorldCup2019
    இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ். இவர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்தார். இங்கிலாந்து விளையாட இருக்கும் அயர்லாந்து மற்றும் இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் இடம் பிடித்திரந்தார்.



    சமீபத்தில் அவர் போதைமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவருக்கு மூன்று வாரம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு அவருக்கான தடைக்காலத்தை நீட்டித்துள்ளது.

    இதனால் உலகக்கோப்பைக்கான முதற்கட்ட வீரர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
    இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பிடித்துள்ளனர். #SLvENG
    இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் பிரிஸ்டோல் இரவு விடுதிக்கு வெளியில் வைத்து வாலிபருடன் மோதிய விவகாரத்தில், கிரிக்கெட்டிற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் இலங்கை தொடருக்கான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.



    இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மோர்கன், 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. சாம் குர்ரான், 6. டாம் குர்ரான், 7. லியம் டவ்சன், 8. அலெக்ஸ் ஹேல்ஸ், 9. லியம் பிளங்கெட், 10. அடில் ரஷித், 11. ஜோ ரூட், 12. ஜேசன் ராய், 13. பென் ஸ்டோக்ஸ், 14. கிறிஸ் வோக்ஸ், 15. ஒலி ஸ்டோன், 16. மார்க் வுட்.
    கிரிக்கெட்டிற்கு இழுக்கு சேர்த்ததாக பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. #ECB #BenStokes
    இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதும், பிரிஸ்டோலில் உள்ள இரவு விடுதிக்கு வெளியில் வைத்து வாலிபர் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனால் பென் ஸ்டோக்ஸ் சில தொடர்களில் விளையாடாத நிலை ஏற்பட்டது. அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு வாலிபரை தாக்கியதில் சம்பந்தம் இல்லை என விடுவிக்கப்பட்டார். வாலிபர் தாக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு கடந்த மாதம் பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.



    நீதிமன்றம் விடுவித்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தனி அதிகாரம் படைத்த ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரனை நடத்திய, இருவரும் கிரிக்கெட்டிற்கு இழுக்கு சேர்த்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து டிசம்பர் 5-ந்தேதி மற்றும் 7-ந்தேதிகளில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த இருக்கிறது.
    இந்தியாவிற்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியுள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

    இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் இங்கிலாந்து வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டனர். வலைப் பயிற்சியின்போது இங்கிலாந்து அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் ஆன அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு காயம் ஏற்பட்டது.



    இதனால் இன்றைய போட்டியில் அவர் களம் இறங்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்துள்ள ஹேல்ஸ்க்குப் பதிலாக தாவித் மலன் அழைக்கப்பட்டுள்ளார். #ENGvIND #INDvENG #AlexHales
    ×