search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Election Working Committee Officers"

    • அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • வட சென்னைக்கு கே,எஸ்,சீனிவாசன் நியமனம்.

    அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவது:-

    பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பாராளுமன்றத் தொகுதிகளுக்கு கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    அதன்படி, ராமநாதபுரம் தொகுதிக்கு மலேசியா.எஸ் பாண்டியன், எம்.எஸ். நிறைகுளத்தான், எஸ்.எம். சாமிநாதன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல், சிதம்பரம் தொகுதிக்கு என்.சதன் பிரபாகர், கு. ராஜமாணிக்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வட சென்னைக்கு கே,எஸ்,சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




     


    • ராமநாதபுரம் தொகுதிக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்.
    • நீலகிரிக்கு தேர்தல் பொறுப்பாளராக அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி நியமனம்.

    தமிழ்நாடு உட்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

    தேர்தல் பணிகளை முறைப்படுத்தும் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டார்.

    திமுக-வின் கலாநிதி வீராசாமி போட்டியிடும் வடசென்னை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டார்.

    திமுக-வின் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடும் தென்சென்னைக்கு கோகுல இந்திரா தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதிக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்.

    திமுக-வின் ஆ.ராசா போட்டியிடும் நீலகிரிக்கு தேர்தல் பொறுப்பாளராக அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி நியமனம்.

    பாஜக சார்பில் ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம்.

    பாஜக-வின் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்கு இசக்கி நியமனம்.

    தேனி தொகுதிக்கு ஆர்.பி.உதயகுமார், தூத்துக்குடி தொகுதிக்கு கடம்பூர் ராஜூ, மதுரை தொகுதிக்கு நத்தம் விஸ்வநாதன் நியமனம்.

    தஞ்சை தொகுதிக்கு காமராஜ், மயிலாடுதுறை தொகுதிக்கு ஓ.எஸ்.மணியன், திருச்சிக்கு சி.விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதன்படி, தர்மபுரி, வட சென்னை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தென்காசி தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர் நியமிக்கபட்டுள்ளனர்

    ×