search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களவை தேர்தல்- அதிமுகவில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
    X

    மக்களவை தேர்தல்- அதிமுகவில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

    • அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • வட சென்னைக்கு கே,எஸ்,சீனிவாசன் நியமனம்.

    அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவது:-

    பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பாராளுமன்றத் தொகுதிகளுக்கு கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    அதன்படி, ராமநாதபுரம் தொகுதிக்கு மலேசியா.எஸ் பாண்டியன், எம்.எஸ். நிறைகுளத்தான், எஸ்.எம். சாமிநாதன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல், சிதம்பரம் தொகுதிக்கு என்.சதன் பிரபாகர், கு. ராஜமாணிக்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வட சென்னைக்கு கே,எஸ்,சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





    Next Story
    ×