search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3வது டி 20 போட்டி"

    சேப்பாக்கத்தில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் ஷிகர் தவான், ரிஷப் பந்த் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. #INDvWI #ShikarDhawan #RishabhPant
    சென்னை:

    இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷாய் ஹோப்பும், ஷிம்ரோன் ஹெட்மையரும் அதிரடியாக ஆடியதால் 6 ஓவரில் அந்த அணி 50 ரன்களை எடுத்தது.

    இவர்கள் இருவரையும் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் பிரித்தார். இதனால் அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது.

    அடுத்து இறங்கிய டேவன் பிராவோ பொறுப்புடன் ஆடினார். இவருக்கு நிகோலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
    சற்று நேரம் பொறுமையாக ஆடிய இவர்கள் தங்களது அதிரடியை தொடர்ந்தனர். நிகோலஸ் பூரன் 4 சிக்சர்கள் அடித்து ஆட்டத்தை உற்சாகமாக்கினார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. டேரன் பிராவோ 43 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் 25 பந்தில் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 



    இந்தியா சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கமாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இறங்கினர்.

    ரோகித் சர்மா 4 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அப்போது அணியின் எண்ணிக்கை 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது..

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் முதலில் நிதான ஆட்டத்தை ஆடினார். தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் இவருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். 19வது ஓவரில் ரிஷப் பந்த் 38 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். தவான் - பந்த் ஜோடி 130 ரன்கள் சேர்த்து அசத்தியது. ஷிகர் தவான் 62 பந்துகளில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    இறுதியில், இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுடனான டி20 தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #INDvWI #ShikarDhawan #RishabhPant
    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். #INDvWI
    சென்னை:

    இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாய் ஹோப்பும், ஷிம்ரோன் ஹெட்மையரும் களமிறங்கினர்.

    தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் 6 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களை எடுத்தது.

    இந்த அதிரடி ஜோடியை சுழல்பந்து வீச்சாளர் சாஹல் பிரித்தார். முதலில் ஷாய் ஹோப்பை 24 ரன்னிலும், ஹெட்மையரை 26 ரன்னிலும் அவுட்டாக்கினார். இதையடுத்து அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது.

    அடுத்து இறங்கிய டேவன் பிராவோ பொறுப்புடன் ஆடினார். ராம்தின் 15 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் சிக்கி வெளியேறினார்.



    அடுத்து ஆடிய நிகோலஸ் பூரன் பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக ஆடினர். அதன்பின்னர் அதிரடியை தொடர்ந்தனர். நிகோலஸ் பூரன் 4 சிக்சர்கள் அடித்து ஆட்டத்தின் அவரது அணியின் ரன்கள் உயர வழிவகுத்தார். இந்த ஜோடி 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. டேரன் பிராவோ 43 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் 25 பந்தில் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

    இந்தியா சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. #INDvWI
    சென்னை சேப்பாக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. #INDvWI #rohitsharma
    சென்னை:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்திலும் 71 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.



    இந்நிலையில், இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. #INDvWI #rohitsharma
    ×