என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » third t20 match
நீங்கள் தேடியது "third t20 match"
சேப்பாக்கத்தில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் ஷிகர் தவான், ரிஷப் பந்த் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. #INDvWI #ShikarDhawan #RishabhPant
சென்னை:
இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷாய் ஹோப்பும், ஷிம்ரோன் ஹெட்மையரும் அதிரடியாக ஆடியதால் 6 ஓவரில் அந்த அணி 50 ரன்களை எடுத்தது.
இவர்கள் இருவரையும் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் பிரித்தார். இதனால் அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது.
அடுத்து இறங்கிய டேவன் பிராவோ பொறுப்புடன் ஆடினார். இவருக்கு நிகோலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சற்று நேரம் பொறுமையாக ஆடிய இவர்கள் தங்களது அதிரடியை தொடர்ந்தனர். நிகோலஸ் பூரன் 4 சிக்சர்கள் அடித்து ஆட்டத்தை உற்சாகமாக்கினார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. டேரன் பிராவோ 43 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் 25 பந்தில் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கமாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இறங்கினர்.
ரோகித் சர்மா 4 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அப்போது அணியின் எண்ணிக்கை 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது..
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் முதலில் நிதான ஆட்டத்தை ஆடினார். தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் இவருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். 19வது ஓவரில் ரிஷப் பந்த் 38 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். தவான் - பந்த் ஜோடி 130 ரன்கள் சேர்த்து அசத்தியது. ஷிகர் தவான் 62 பந்துகளில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுடனான டி20 தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #INDvWI #ShikarDhawan #RishabhPant
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். #INDvWI
சென்னை:
இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாய் ஹோப்பும், ஷிம்ரோன் ஹெட்மையரும் களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் 6 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களை எடுத்தது.
இந்த அதிரடி ஜோடியை சுழல்பந்து வீச்சாளர் சாஹல் பிரித்தார். முதலில் ஷாய் ஹோப்பை 24 ரன்னிலும், ஹெட்மையரை 26 ரன்னிலும் அவுட்டாக்கினார். இதையடுத்து அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது.
அடுத்து இறங்கிய டேவன் பிராவோ பொறுப்புடன் ஆடினார். ராம்தின் 15 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் சிக்கி வெளியேறினார்.
அடுத்து ஆடிய நிகோலஸ் பூரன் பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக ஆடினர். அதன்பின்னர் அதிரடியை தொடர்ந்தனர். நிகோலஸ் பூரன் 4 சிக்சர்கள் அடித்து ஆட்டத்தின் அவரது அணியின் ரன்கள் உயர வழிவகுத்தார். இந்த ஜோடி 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. டேரன் பிராவோ 43 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் 25 பந்தில் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. #INDvWI
சென்னை சேப்பாக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. #INDvWI #rohitsharma
சென்னை:
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றி அசத்தியது.
இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்திலும் 71 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. #INDvWI #rohitsharma
பிரிஸ்டோலில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றியது இந்தியா. #ENGvIND
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள். இதனால் இங்கிலாந்து 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது.
பட்லர் 34 ரன்களும், ராய் 31 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹேல்ஸ் (30) மோர்கன் (6), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.
இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டும், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், சாஹர், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷிகர் தவான் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். லோகேஷ் ராகுல் 19 ரன்களில் அவுட்டானார்.
மறுபுறம், ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடினார். அவர் டி20 போட்டிகளில் மூன்றாவது சதமடித்து அசத்தினார். அவருக்கு கோலி ஒத்துழைப்பு கொடுத்தார். கோலி 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா ரோகித்துடன் சேர்ந்து அதிரடியாக ஆடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இந்தியா 18. 4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வென்றது. ரோகித் சர்மா 100 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருதை ரோகித் சர்மா வென்றார். அத்துடன் தொடரையும் 2-1 என கைப்பற்றி அசத்தியது. #ENGvIND #EnglandvIndia
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X