search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2016ஆம் ஆண்டு தாக்குதல்"

    டாக்காவில் 2016-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உள்பட 22 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு தீர்ப்பாயம் நேற்று முன்தினம் தனது விசாரணையை தொடங்கியது. #Bangladesh #SuicideAttack
    டாக்கா:

    வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற ஓட்டலுக்குள் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 5 பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தரிஷி ஜெயின் (வயது 19) என்கிற பெண் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த 17 பேரும், பாதுகாப்புபடை வீரர்கள் 2 பேர் உள்பட வங்காள தேசத்தை சேர்ந்த 5 பேரும் பலியாகினர்.

    அதே சமயம் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். வங்காள தேசத்தில் நடந்த இந்த தாக்குதல் உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.

    இதற்கிடையே உயிர் இழந்த 5 பயங்கரவாதிகள் தவிர மேலும் 17 பேருக்கு ஓட்டல் தாக்குதலில் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இவர்களில் 9 பேர் ராணுவம் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் உயிர் இழந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர். இதையடுத்து ஓட்டல் தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கில் சிறப்பு தீர்ப்பாயம் நேற்று முன்தினம் தனது விசாரணையை தொடங்கியது. முதல் நாள் விசாரணையின்போது போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அதனை தொடர்ந்து நேற்றும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்தது.

    முன்னதாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 6 பேர் சார்பில் ஆஜராக 5 வக்கீல்களை சிறப்பு தீர்ப்பாயம் நியமித்ததும், ஆனால் வக்கீல்கள் அனைவரும் அதனை ஏற்க மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. 
    கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது விதிமீறிய வழக்கில் கே.என்.நேரு, 3 எம்எல்ஏக்கள் திருச்சி கோர்ட்டில் ஆஜராகினர்.

    திருச்சி:

    கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மே மாதம் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மற்றும் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், கணேசன் உள்ளிட்டவர்கள் சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    அப்போது அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கே.என்.நேரு உள்ளிட்ட 9 பேர் மீது கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் கடந்த 4-ந்தேதி விசாரணை நடைபெற்ற போது தி.மு.க.வினர் ஆஜராகவில்லை. இன்று மீண்டும் விசாரணை நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏக்கள் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், வடக்கு மாவட்ட செலாளர் காடு வெட்டி தியாகராஜன், திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், அப்போதைய வேட்பாளர்கள் பழனியாண்டி, கணேசன் ஆகியோர் ஆஜராகினர்.

    அப்போது சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வழக்கு தொடர்பாக என்ன கூறுகிறீர்கள் என்று கே. என்.நேரு உள்ளிட்டவர்களிடம் நீதிபதி கவுதமன் கேட்டார். அதற்கு அவர்கள் இதில் உண்மையில்லை என்று கூறினர்.

    இதை தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை வருகிற 30.5.2018 அன்று நீதிபதி கவுதமன் ஒத்தி வைத்தார். இன்று கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் ஆஜராக வந்த போது அவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே. என்.சேகரன், வக்கீல்கள் பாஸ்கர், ஓம்.பிரகாஷ், தி.மு.க. பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், தர்மராஜ், இளங்கோவன், பாலமுருகன், முத்துசெல்வம், கிராப்பட்டி செல்வம், ராமதாஸ், வட்ட செயலாளர் நாகராஜ், மற்றும் பலர் உடன் வந்தனர். 

    ×