search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்வையாளர்கள் நியமனம்"

    • கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • 39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம்.

    பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதற்கட்டமாக தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளளது. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தல், ஜூன் 1ம் தேதியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது.

    இதைதொடர்ந்து, ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உள்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கைக்காக பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

    விருதுநகர்

    பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 236 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு மகளிரணி துணை செயலாளர் பவானி ராஜேந்திரன், அருப்புக்கோட்டை தொகுதிக்கு நியமனக்குழு உறுப்பினர் சரவணன், சாத்தூர் தொகுதிக்கு விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கொடி சந்திரசேகர், சிவகாசி தொகுதிக்கு ஐ.டி.அணி துணை செயலாளர் மதுரை எஸ்.பாலா, விருதுநகர் தொகுதிக்கு ஐ.டி.அணி துணை செயலாளர் விஜய கதிரவன், திருச்சுழி தொகுதிக்கு இளைஞரணி துணை செயலாளர் ராஜா என்ற பிரதீப்ராஜா, ராஜபாளையம் தொகுதிக்கு வர்த்தக அணி இணை செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    ×