search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி வேலுமணி"

    • அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும்
    • செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க, த.மா.க உடன் கூட்டணி அமைத்து களம் கண்ட பாஜக படுதோல்வி அடைந்தது.

    இதையடுத்து, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பின்னர் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அண்ணாமலை அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி கூறிய கூட்டணி தொடர்பான கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்தார்.

    "அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற வேலுமணியின் கருத்து உண்மையே.அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் திமுக இத்தனை இடங்களை பெற்றிருக்க முடியாது" என்று அவர் கூறினார்.

    இப்படி அண்ணாமலையின் கருத்துக்கு மாறாக தமிழிசை பேசியது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இனி விமான நிலையத்தில் பிரஸ் மீட் கிடையாது. அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும். செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம். பிரஸ்மீட் எப்போது என பாஜக தரப்பில் இருந்து முறைப்படி தெரிவிக்கப்படும். பாஜகவினர் இனி இஷ்டத்திற்கு செய்தியாளர்களை சந்திக்கமாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

    டெல்லியில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலை இவ்வாறு தெரிவித்திருப்பது பாஜக மேலிடத்தின் முடிவாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

    ×