என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குலசேகரன்பட்டினம் திருவிழா: இன்று இரவு ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் பவனி
Byமாலை மலர்16 Oct 2018 9:12 AM GMT (Updated: 16 Oct 2018 9:12 AM GMT)
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 7-ந் திருநாளன இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவில் 7-ந் திருநாளன இன்று (16-ந் தேதி) மாலை 4 மணிக்கு மகிசாசூரன்,வீதியுலா, இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
திருவிழா தொடங்கி யதையொட்டி தினசரி காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகங்களும், பகல் 1 மணிக்கு ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணி முதல் சமய சொற்பொழிவு பட்டி மன்றம், இன்னிசை கச்சேரி போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
10-ந் திருநாளான வருகிற வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண பல லட்சம் பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள்.திருவிழாவிற் கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
திருவிழா தொடங்கி யதையொட்டி தினசரி காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகங்களும், பகல் 1 மணிக்கு ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணி முதல் சமய சொற்பொழிவு பட்டி மன்றம், இன்னிசை கச்சேரி போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
10-ந் திருநாளான வருகிற வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண பல லட்சம் பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள்.திருவிழாவிற் கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X