என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இஸ்ரேலில் 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை - பூஸ்டருக்கான வயது வரம்பும் குறைப்பு
Byமாலை மலர்6 Sep 2021 12:26 PM GMT (Updated: 6 Sep 2021 12:26 PM GMT)
டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்காக, இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது.
ஜெருசலேம்:
உலக அளவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பெரும்பாலும் கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. இருப்பினும் வைரஸ் கிருமியானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், 3வதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த முடிவெடுத்துள்ளன.
உலக அளவில் இஸ்ரேல் நாட்டில் தடுப்பூசி செலுத் தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் 80 சதவீதம் பேருக்கு இதுவரை இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், தீவிர ஊரடங்குகளைத் தவிர்க்கவே தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே தனது மக்கள்தொகையில் அதிக சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போட்ட இஸ்ரேல் நாட்டிலும் கூட இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் மத்தியிலும்கூட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்காக, இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் நாடு ஏற்கனவே 2 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்க வயது வரம்பைக் குறைத்துள்ளது.
பைசர் கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோசாக வழங்க முடிவு செய்த இஸ்ரேல், முதலில் வயதானோருக்கு தடுப்பூசியைச் செலுத்தியது. படிப்படியாக வயது வரம்பைக் குறைத்து வந்த அரசு, தற்போது 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாராக இருப்பினும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேலும் கொரோனாவால் பாதிப் படையாமல் இருக்க 4வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்த பரிசீலித்து வருவதாக அந்நாட்டு மருத்துவத்துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அடுத்தடுத்த அலைகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4வது டோஸ் தடுப்பூசியை செலுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்நாட்டில் 25 லட்சம் பேர் தங்கள் 3-வது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X