search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஸ்டர் டோஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து வருகிறது.
    • பாதிப்பு தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு பகிர வேண்டும்.

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.-7 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இந்தியாவிலும் இந்த வகை தொற்றுகள் பரவ தொடங்கி உள்ளன. எனினும் புதிய வகை தொற்றால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் கூறி உள்ளனர்.

    அதே நேரம், மீண்டும் கொரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டலியா நேற்று காணொலி மூலம் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுசுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது புதிய வகை தொற்றால் ஏற்படக்கூடிய எழுச்சிக்கான தயார் நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது மந்திரி மன்சுக் மாண்டலியா கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து வருகிறது. இந்த பாதிப்பு தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு பகிர வேண்டும்.

    முக கவசம் அணிதல் உள்பட கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் அந்த வழிமுறைகளை பின்பற்றுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு கொரோனா பாதிப்பு குறித்த நம்பகமான தகவலை மட்டுமே பகிர வேண்டும்.

    தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பதும் மிகவும் முக்கியம். இதன் மூலம் கொரோனா நோய் தொற்று குறித்த வதந்திகள், தவறான கருத்துக்கள், அவற்றின் வாயிலாக மக்களிடையே ஏற்படும் அச்சத்தை தடுக்க முடியும்.

    கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரங்கள், தடுப்பூசி திட்டம், பாதிப்பை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியபடுத்தி நோய் தொற்று தொடர்பாக அவர்களிடையே சிறிய அளவில் ஏற்படும் அச்சத்தையும் போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்திற்கு பின் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜெயலால் கூறுகையில், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கடைசி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு ஒரு வருடமாகிறது. இத்தகைய நீண்ட இடைவெளி நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.

    எனவே மக்கள் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை நிர்வகிக்க வேண்டிய மற்றும் அதிக ஆபத்தில் இருக்கும் முன்கள பணியாளர்களுக்கு 4-வது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி (2-வது பூஸ்டர் டோஸ்) போடுவதற்கு பரிசீலிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார்.

    இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் சகஜானந்த் பிரசாத் சிங் கூறுகையில், அதிக செயல்திறன் இருந்தபோதிலும் இந்தியாவில் சுமார் 30 சதவீதம் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    எனவே அதிகபட்ச மக்கள் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யுமாறு மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளோம். புதிய வகை தொற்றால் பீதி அடைய எந்த காரணமும் இல்லை. ஆனால் நாம் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.

    • பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக நாசி வழி செலுத்திக் கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம்.
    • மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியது.

    புதுடெல்லி:

    ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிவி 154 என்ற நாசி வழியாக செலுத்தும் மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருத்துக்கு தேவையான ஆதரவை மத்திய உயிர் தொழில்நுட்பத் துறையும், அதனுடைய நிறுவனமான உயிர்தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் வழங்குகிறது.

    இந்த மருந்தை 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், எளிதாக சேமித்து வைத்துக்கொள்ளலாம், பல பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்து கொரோனா தடுப்பூசியைப் போலவே மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே, நாசி வழியாக செலுத்தும் பிபிவி 154 என்ற மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றியை தந்த நிலையில், மக்கள் பயன்பாட்டுக்காக அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகள் அனுப்பப்பட்டுள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முதல் டோஸ் தடுப்பூசியாக இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்களுக்கும், பூஸ்டர் டோஸாக இந்த மருந்தை போட்டுக் கொண்டவர்களும் தடுப்பூசி தரும் அதே அளவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு உடலில் உண்டாகிறது. இது செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பயனுள்ளதாக இருக்கும் என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    • 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
    • ஜூலை 15-ந் தேதி தொடங்கிய இத்திட்டம் செப்டம்பர் 30-ந் தேதிவரை அமலில் இருக்கும்.

    புதுடெல்லி :

    நாட்டில் 65 வயதை தாண்டியவர்களுக்கும், முன்கள, சுகாதார பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வந்தது. இந்தநிலையில், சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

    கடந்த ஜூலை 15-ந் தேதி தொடங்கிய இத்திட்டம், செப்டம்பர் 30-ந் தேதிவரை அமலில் இருக்கும். இதற்காக நாடு முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் தொடங்கி, நேற்று 42-வது நாள் ஆகும். இந்த 42 நாட்களில் 9 கோடியே 60 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இதுவரை 14 கோடியே 70 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. அது சராசரியாக 27 லட்சத்து 77 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதுபோல், நாள் ஒன்றுக்கு சராசரியாக செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசிகள் 22 லட்சத்தை கடந்துள்ளது.

    விழிப்புணர்வு பிரசாரத்தால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. பிரதமர் மோடியின் உறுதியான, முற்போக்கான தலைமையின் கீழ் நாட்டின் கூட்டு மனஉறுதியை இது காட்டுவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் உன்னிப்பாக கண்காணித்து வந்தார்.

    இதற்கிடையே, பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் 'கோர்பேவேக்ஸ்' சேர்க்கப்பட்டுள்ளது.

    • பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக நாசி வழி செலுத்திக் கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம்.
    • மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பியுள்ளது.

    புதுடெல்லி:

    ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிவி 154 என்ற நாசி வழியாக செலுத்தும் மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருத்துக்கு தேவையான ஆதரவை மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையும், அதனுடைய நிறுவனமான உயிர்தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் வழங்குகிறது.

    இந்த மருந்தை 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், எளிதாக சேமித்து வைத்துக்கொள்ளலாம், பல பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்து கொரோனா தடுப்பூசியைப் போலவே மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், நாசி வழியாக செலுத்தும் பிபிவி 154 என்ற மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக இந்த நாசி வழி செலுத்திக் கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம். இதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றியை தந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மக்கள் பயன்பாட்டுக்காக அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகள் அனுப்பப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முதல் டோஸ் தடுப்பூசியாக இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்களுக்கும், பூஸ்டர் டோஸாக இந்த மருந்தை போட்டுக்கொண்டவர்களும் தடுப்பூசி தரும் அதே அளவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு உடலில் உண்டாகிறது. இது செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பயனுள்ளதாக இருக்கும் என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

    • ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தடுப்பூசி மேளா நடத்தப்படும்.
    • கர்நாடகத்தில் 8 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன.

    பெங்களூரு:

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந்த பணி இன்று(நேற்று) தொடங்கி வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 75 நாட்கள் நடக்கிறது. 2-வது டோஸ் போட்டு 6 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள தகுதியானவர்கள். இந்த 75 நாட்களில் 4.34 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.

    கர்நாடகத்தில் 8 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. மாநிலத்தில் தற்போது 8.84 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும் 31.55 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாவட்ட அளவில் தடுப்பூசி செலுத்த நுண்ணிய திட்டத்தை வகுத்துள்ளோம். அலுவலகங்கள் மற்றும் வீடு, வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    மென்பொருள் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்துவோம். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தடுப்பூசி மேளா நடத்தப்படும். தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் அரசுடன் பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும். அரசின் தடுப்பூசி மையங்களில் தகுதியானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை இலவமாக போட்டு கொள்ளலாம்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    • நேற்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருக்கிறது.
    • பெங்களூருவை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வெறும் 60 ஆயிரம் போ் மட்டுமே பூஸ்டா தடுப்பூசி போட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நாட்டிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவும், 75-வது சுதந்திர தினத்தையொட்டியும் நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இதையடுத்து, நேற்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருக்கிறது. முன்னதாக 2 டோஸ் தடுப்பூசியை இலவசமாக பொதுமக்கள் போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. பூஸ்டர் தடுப்பூசியை கட்டணம் செலுத்தி பொதுமக்கள் போட்டுக் கொள்ளலாம் என்றும், இதற்காக தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    ஆனால் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். அதன்படி, கர்நாடகத்தில் கடந்த 3 மாதங்களில் 3.97 லட்சம் பேர் மட்டுமே கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டு இருந்தார்கள். இவர்களில் பெங்களூருவில் மட்டும் 3.35 லட்சம் பேர் கட்டணம் கொடுத்து பூஸ்டர் தடுப்பூசி போட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூருவை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வெறும் 60 ஆயிரம் போ் மட்டுமே பூஸ்டா தடுப்பூசி போட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக பெங்களூருவில் தனயார் மருத்துவமனைகள் அதிகமாக இருப்பதும் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதாவது பெங்களூருவில் உள்ள 130 மருத்துவமனைகளில் 110 மருத்துவமனைகளில் பூஸ்டா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டாவது தவணை செலுத்திய பின்னர் 6 மாத காலத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.
    • இன்று முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.

    புதுடெல்லி :

    18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளன. கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்கவைத்துக் கொள்ள செலுத்தப்படுகிறது.

    இரண்டாவது தவணை செலுத்திய பின்னர் 6 மாத காலத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி இன்று முதல் 75 நாட்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

    • ஜூலை 15-ந்தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
    • கொரோனா பரவலைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் 18-59 வயதுப் பிரிவினருக்கு ஜூலை 15-ந்தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    இந்தியாவில் 18-59 வயதுப் பிரிவில் உள்ள 77 கோடி பேரில் 70 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவர்களில் ஒரே ஒரு விழுக்காட்டினர். அதாவது 72 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் போட்டுள்ளனர். இதற்கு காரணம் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படாதது தான்.

    பூஸ்டர் தவணை தடுப்பூசியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். இப்போது எனது யோசனை செயல்வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் பயன்படுத்தி இந்த வயதுப் பிரிவினர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக வரும் 17-ந் தேதி முதல் 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும், கிராமப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
    • பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி 9 மாதத்தில் இருந்து 6 மாதமாக குறைத்தது மத்திய சுகாதாரத் துறை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் போடப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திய பிறகு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்களுக்கு பிறகு பூஸ்டர் ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

    அறிவியல் ஆதாரங்கள் மற்றும் உலக நாடுகளின் அடிப்படையில் இதனை 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களாகக் குறைக்க வேண்டும் என துணைக்குழு அளித்த பரிந்துரையை நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்பக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

    எனவே, 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 முதல் 59 வயதுடைய அனைத்துப் பயனாளிகளும் தனியார் தடுப்பூசி மையங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதற்கான மாற்றங்கள் கோ வின் இணைய தளத்தில் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி தேசிய தடுப்பூசி திட்டத்தின் பயன்பாட்டில் உள்ளது.
    • கோவேக்சின் பூஸ்டர் டோஸ் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிரான நோயின் தீவிரத்தை குறைக்கிறது.

    புதுடெல்லி :

    டெல்டா, ஒமைக்ரான் வகை வைரஸ்களுக்கு எதிரான செயல்திறனை கோவேக்சின் பூஸ்டர் டோஸ் அதிகரிக்கிறது என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக முற்றிலும் உள்நாட்டில் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி, அது தேசிய தடுப்பூசி திட்டத்தின் பயன்பாட்டில் உள்ளது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்), பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசி பற்றிய ஒரு ஆராய்ச்சியை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெல்டா-ஒமைக்ரானுக்கு எதிராக... இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது டோஸ் செலுத்தியதன் பாதுகாப்பு செயல்திறன் சிரியாவின் வெள்ளெலி மாதிரியைக் கொண்டு (மனிதன் தொடர்பான நோய்களை ஆராய உதவும் விலங்கு மாதிரி) ஆராயப்பட்டது.

    இதில், கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது டோஸ் மற்றும் 3-வது டோஸ் (பூஸ்டர் டோஸ்) செயல் திறனை ஆராய்ந்ததில், இது டெல்டா வைரசுக்கு எதிரான செயல்திறனை மேம்படுத்துகிறது. ஒமைக்ரான் வகைகளான பிஏ.1.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கிறது என தெரிய வந்துள்ளது. நோய் எதிர்ப்பு பதிலளிப்பு, மருத்துவ பலன் கண்காணிப்புகள், வைரஸ் அளவு குறைதல், நுரையீரல் நோயின் தீவிரம் ஆகியவை ஆராயப்பட்டன.

    டெல்டா வைரஸ் தொற்று ஆராய்ச்சியில், 2-வது மற்றும் 3-வது டோஸ்களுக்கு இடையேயான பாதுகாப்பு பதிலளிப்பை ஒப்பிட்டு பார்த்ததில், பாதுகாப்பில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் செயல்திறன் உணரப்பட்டது. நுரையீரல் நோய் தீவிரம், 3 டோஸ் தடுப்பூசிக்கு பின் மேலும் குறைந்தது. டெல்டா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறனை குறிக்கும் 2-வது மற்றும் 3-வது டோஸ் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி ஆராய்ந்ததில், வைரஸ் சுமை குறைந்தது.

    ஒமைக்ரான் வைரஸ்களான பிஏ.1.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு பதிலளிப்பை ஆய்வு செய்ததில், 3-வது டோஸ் செலுத்திய பிறகு வைரஸ் சுமை குறைந்தது தெரியவந்தது. தற்போதைய ஆராய்ச்சியின் முடிவு, கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிரான நோயின் தீவிரத்தை குறைக்கிறது. பாதுகாப்பு நோய் எதிர்ப்பு பதிலளிப்பை விரிவுபடுத்துகிறது என தெரிய வந்துள்ளது.

    இவ்வாறு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

    ×