search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாகிஸ்தானில் சட்ட விரோதமாக நுழைந்த 19 இந்தியர்கள் கைது - பாகிஸ்தான் அரசு தகவல்

    பாகிஸ்தானில் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்த 19 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்த 19 இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் மீது சட்ட விரோத எல்லை கடத்தல் மற்றும் உளவு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய மத்திய மறுஆய்வு வாரியத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் அனைவரையும் நவம்பர் 9-ந்தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க வாரியம் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு நவம்பர் 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வாரியத்தால் மீண்டும் விசாரிக்கப்படும். அப்போது இவர்கள் விசாரணையை எதிர்கொள்வார்களா அல்லது விடுவிக்கப்படுவார்களா என்பது முடிவு செய்யப்படும்’’ எனக் கூறினார்.
    Next Story
    ×