என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bangladeshis"

    • பெருந்துறை போலீசார் அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், பனியன் கம்பெனிகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கட்டிட வேலை, டெய்லர் வேலை, கூலி வேலை, செங்கல் சூளை உட்பட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுடன் வங்காளதேசத்தை சேர்ந்த சிலரும் சட்ட விரோதமாக குடியேறி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன. வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக மேற்கு வங்காளத்திற்குள் குடியேறி அங்கிருந்து ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் குடியேறி உள்ளனர். இதையடுத்து சட்ட விரோதமாக குடியேறிய வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை ஈரோடு, திருப்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    போலீசார் விசாரணையில் இவர்கள் உரிய அனுமதி, உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் பெருந்துறை, பணிக்கம்பாளையம், மேட்டுக்கடை போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் குடியிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பெருந்துறை போலீசார் நேற்று அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த பைஜித் (25), மாமொன் (43), மோனீர் (50), சுமொன் (25), ரீதாய் (23), அனுசூல் மெஸ்தர் (37), அசாத் (50) தீப்போன் (25), ஒசேன் (27), ரோபி (26) இவர்களுடன் மேலும் 3 ஆண்களும், 2 பெண்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் வாடகைக்கு குடியிருந்து கட்டில், சோபா தயாரிக்கும் கம்பெனியில் டெய்லர் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. மேலும் சிலர் கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    பெருந்துறை, பணிக்கம்பாளையம், வாய்க்கால் மேடு போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்தது.

    மேலும் இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆட்கடத்தல் வழக்கில் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தானே மாவட்ட நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. #HumanTrafficking #BangladeshisJailed #ThaneFleshTrade
    தானே:

    மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின்படி ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி மாறுவேடத்தில் ஆட்களை அனுப்பி விசாரித்தனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை மீட்டனர்.

    சட்டவிரோதமாக பெண்களைக் கடத்தி வந்து பாலியல் தொழில் செய்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த கபார் ஷபியுதீன் ஷாயிக்(48), அவரது மனைவி ஷிவாலி (36), ஷிவாலியின் சகோதரி நர்கிஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த தம்பதியரின் 11 வயது மகனை சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தானே மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதி காலிப் தீர்ப்பு வழங்கினார். அப்போது, கணவன் மனைவி உள்ளிட்ட மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். மேலும் மூவருக்கும் தலா 26 ஆயிரம் ரூபாய அபராதமும் விதித்தார். #HumanTrafficking #BangladeshisJailed #ThaneFleshTrade

    ×