search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே-9 மோப்ப நாய்
    X
    கே-9 மோப்ப நாய்

    கொரோனா தொற்றை கண்டுபிடிக்க மோப்ப நாய் - 92 சதவீத துல்லியமான முடிவுகள் கிடைப்பதாக தகவல்

    அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க மோப்பநாய் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 92 சதவீத துல்லியமான முடிவுகள் கிடைப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    அபுதாபி:

    உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் மோப்பநாய்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. அனைத்து நாடுகளிலும் போலீஸ் மற்றும் ராணுவத்தில் இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாய்களின் படைகளை பொதுவாக கே- 9 அல்லது `கேனைன்’ என்று அழைக்கிறார்கள். மற்ற நாடுகளை போல அமீரகத்திலும் போலீஸ் ்துறையில் கே- 9 என்ற மோப்ப நாய் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    அமீரகத்தில் முதன்முறையாக கடந்த 1976-ம் ஆண்டு 6 நாய்கள் மற்றும் 6 பயிற்சியாளர்களுடன் இந்த மோப்ப நாய்கள் பிரிவு துபாய் போலீசில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கே-9 மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டது.

    கே-9 மோப்ப நாய்


    தற்போது இந்த ஆண்டு துபாய் போலீசில் 60 மோப்ப நாய்கள் மற்றும் 45 பயிற்சியாளர்கள் பணியில் உள்ளனர். துபாயின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் குற்ற புலனாய்வுத்துறையில் இந்த கே-9 மோப்ப நாய் பிரிவு முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது துபாய் மோப்ப நாய் படை பிரிவில் ஜெர்மன் செப்பர்டு, மலினோய்ஸ் மற்றும் லாப்ரடார் வகை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. உயர் வகை மோப்ப நாய்களுக்கு மூக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது ஆகும்.

    இந்த நாய்களுக்கு மூக்கில் 25 கோடி உணரும் செல்கள் உள்ளது.

    மேலும் குறிப்பிட்ட வாசனையை நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் குற்றவாளி பயந்தால் அல்லது குழப்பமாக இருந்தால் கூட மிக நுட்பமாக கண்டுபிடித்து விடுகிறது.

    இந்த நாய்களை வைத்து கொரோனா தொற்றை கண்டுபிடிக்க உள்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உள்ள பொருட்களை மோப்பம் பிடிக்க செய்து பழக்கப்படுத்தப்படுகிறது. பிறகு அந்த வைரஸ் தொற்றுடையவர்களை எளிதில் தனது மோப்ப சக்தியால் அடையாளம் கண்டுபிடித்து விடுகிறது. இந்த பரிசோதனைகள் அனைத்தும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைகளில் செய்துபார்க்கப்பட்டது.

    இந்த பரிசோதனைகளில் துபாய் போலீஸ்துறையில் உள்ள கே- 9 நாய்கள் கொரோனா தொற்றுடையவர்களை 92 சதவீதம் துல்லியமாக கண்டுபிடித்துள்ளது. மிக நுட்பமான மோப்ப சக்தியுடைய இந்த பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் பொது இடங்களில் ரோந்து, வணிக வளாகங்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் விமான நிலையங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது என அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×