என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் சோகம் - சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி
Byமாலை மலர்14 Aug 2019 10:50 AM GMT (Updated: 14 Aug 2019 10:50 AM GMT)
பாகிஸ்தானின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது கில்ஜித்- பால்டிஸ்தான் பகுதி. பாகிஸ்தானில் இன்று 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கில்ஜித்- பால்டிஸ்தான் பகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சியை பார்க்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுதந்திர தின நிகழ்ச்சியை பார்த்தபோது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலியானது பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X