search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரியம் நவாஸ்
    X
    மரியம் நவாஸ்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் மகள் மரியம் கைது

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் மகள் மரியம் நவாசை அந்நாட்டு தேசிய பொறுப்புடமை முகமை கைது செய்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில், நவாஸ் ஷரீப்பின் மகளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணை தலைவருமான மரியம் நவாசை பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை முகமை இன்று கைது செய்துள்ளது. 

    நவாஸ் ஷரீப்

    லாகூரில் உள்ள லோக்பத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரீப்பை காணச்செல்லும் போது, மரியம் நவாசை கைது செய்த என்.ஏ.பி அதிகாரிகள் அவரை லாகூர் கொண்டு சென்றனர்.
    Next Story
    ×