என் மலர்tooltip icon

    உலகம்

    • உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் விரும்புகிறார்.
    • முக்கிய அம்சங்கள் கொண்ட போர் நிறுத்த திட்டங்களை வழங்கியுள்ளார்.

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து 4 வருடங்கள் நிறைவடைய இருக்கிறது. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய அம்சங்கள் கொண்ட போர் நிறுத்த பரிந்துரையை அறிவித்துள்ளார். அதனடிப்படையில் உக்ரைன் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்த போதிலும் நிலத்தை விட்டுக்கொடுப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றில் உக்ரைன் உடன்படவில்லை. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

    இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை அடைவதற்கு உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு ஜூன் மாதம் வரை அமெரிக்கா காலக்கெடு வழங்கியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ஜூன் மாதத்திற்குள் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், டிரம்ப் நிர்வாகம் அதற்கான அழுத்தத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஜூன் மாதத்திற்குள் எல்லாவற்றையும் செய்ய அமெரிக்க விரும்புகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர எல்லாவற்றையும் செய்வார்கள். அனைத்து நிகழ்ச்சிக்குமான தெளிவான அட்டவணையை அமெரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் பரிந்துரை தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் மியாமியில் நடைபெற வாய்ப்புள்ளது. இதில் உக்ரைன் பங்கேற்கும் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ஒரு பக்கம் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்ற போதிலும், மறுபக்கம் ரஷியா உக்ரைனின் மின்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    • கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் செய்தவர்கள்.
    • Operation Safe Cities என்ற திட்டத்தின் கீழ், சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது.

    அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு குடியேற்றக் கொள்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய "மிகவும் ஆபத்தான குற்றவாளிகள்" பட்டியலை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் மொத்தம் 89 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Operation Safe Cities என்ற திட்டத்தின் கீழ், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் பணியைத் டிரம்ப் நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

    இந்தப் பட்டியலில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

    • 2020 இல் சீனா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, சோதனை நடத்தி உள்ளது.

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

    கடத்த ஆண்டு பிரதமர் மோடி, ஜிஜின்பிங் சந்திப்பின் பின் உறவு சற்று சீரானது. ஆனால் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், சீனா தங்கள் பக்கம் உள்ள பகுதியில் தொடர்ந்து பல்வேறு கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. இவை ராணுவ கட்டுமானங்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் கல்வான் தாக்குதலுக்கு சரியாக ஒரு வாரம் கழித்து, ஜூன் 22-23 தேதிகளில் சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்தியதாக அமெரிக்கா தற்போது குற்றம்சாட்டி உள்ளது.

    வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள லோப் நூர் சோதனைத் தளத்தில் இந்த ரகசிய அணு ஆயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, தீவிரமான சோதனையில் ஈடுபட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

    சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தாங்கள் சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகத் தெரிவித்துள்ளது.

    • வாக்குப்பதிவு இயந்திர மோசடி குற்றச்சாட்டுகள் பற்றி நான் பேசிய தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன்.
    • நான் எந்த தவறும் செய்யவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 2020-ம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது என்று தெரிவித்தார். மேலும் அந்த வீடியோவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோரின் முகத்தை குரங்குகளின் உடலில் பொருத்தி பாடுவது போன்ற காட்சி இருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

    இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, வாக்குப்பதிவு இயந்திர மோசடி குற்றச்சாட்டுகள் பற்றி நான் பேசிய தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். அதை நான் பகிர்ந்தேன். அது சரிபார்க்கப்பட்டிருக்கும் என்று கருதினேன். ஆட்சேபனைக்குரிய பகுதி பற்றி எனக்கு தெரியாது. நான் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.

    • குண்டு வெடிப்பு தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
    • தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் நேற்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    சந்தேக நபர் ஒருவர் மசூதி வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

    குண்டு வெடிப்பு தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதையடுத்து, இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

    பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், 170-க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    • மைக்கலேஞ்சலோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
    • ஓவியத்தை வாங்க நேரில் மட்டுமல்லாமல் தொலைபேசியிலும் இணையத்திலும் ஓவிய ஆர்வலர்கள் திரண்டனர்.

    புகழ்பெற்ற கலைஞர் மைக்கலேஞ்சலோவின் ஓர் ஓவியம் 27.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. இது அவரின் படைப்புகளுக்குக் கிடைத்திருக்கும் அதிக தொகை என்கின்றனர்.

    இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.225 கோடியாகும். சிவப்புச் சுண்ணாம்பால் வரையப்பட்ட இந்த சிறிய பாத ஓவியம் சுமார் 5 அங்குலமே ஆனது. பாத ஓவியத்தின் குதிகால் தரையில் இருந்து சற்று உயர்ந்து, கீழே ஒரு நிழலின் வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது. கால்விரல்கள் சற்று சுருங்கியுள்ளன.

    மைக்கலேஞ்சலோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு அரிய வரைபடத்திற்கு கிடைத்த மிக உயர்ந்த விலை என்கின்றனர். சிஸ்டீன் தேவாலயத்திற்கு மைக்கலேஞ்சலோ தீட்டிய சுமார் 50 படைப்புகளில் அதுவும் ஒன்று. நியூயார்க்கில் இந்த ஓவியத்தை வாங்க நேரில் மட்டுமல்லாமல் தொலைபேசியிலும் இணையத்திலும் ஓவிய ஆர்வலர்கள் திரண்டனர். 45 நிமிட விறுவிறுப்பான ஏலத்திற்குப் பிறகு இந்த ஓவியம் விற்பனை ஆனது.

    • ஈரான் அணுஆயுத திட்டம் விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார்.
    • ஓமனில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஓமனில் இருநாடுகளும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

    ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பான விசயத்தில், மீண்டும் ஆரம்ப புள்ளிக்கு இரு நாடுகளும் திரும்பியதாக தெரிகிறது. அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கு ராணுவ கமாண்டர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

    இருநாட்டின் பிரதிநிதிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஓமன் மத்தியஸ்தரராக செயல்பட்டு, ஓமனிடம் இரு நாடுகளும் தங்கள் கருத்தை தெரிவித்து அதை பரிமாற்றிக் கொண்டன. இந்த பேச்சுவார்த்தை மூலம் பதற்றம் முடிவுக்கு வரும் என ஈரான் நம்புகிறது.

    அதேவேளையில், ஈரானின் அணுஆயுத திட்டம் குறித்து ஒப்பந்தம் முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை முடிவு பெறாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அணுஆயுத திட்டம் ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்னால் ஈரான் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார்.

    ஓமனில் மறைமுக பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், ஈரானுடன் அமெரிக்கா சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த வாரம் தொடக்கத்தில் மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா மீது 50%-ஆக இருந்த வரி தற்போது 18% குறைக்கப்பட்டுள்ளது.
    • இடைக்கால ஒப்பந்த அம்சங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார்.

    ரஷிய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

    இந்தியா மீண்டும் ரஷிய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்தியா மீது 50%ஆக இருந்த வரி தற்போது 18% குறைக்கப்பட்டுள்ளது. இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை அமெரிக்கா சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டது.

    இடைக்கால ஒப்பந்த அம்சங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.

    அதில், இந்தியாவில் இருந்து 30 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதிக்கு வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 18 சதவீத இறக்குமதி வர விதிக்கும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்களுக்கு வரிகுறைப்பு.

    அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • குண்டு வெடிப்பு தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
    • அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் நேற்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    சந்தேக நபர் ஒருவர் மசூதி வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

    குண்டு வெடிப்பு தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

    இதையடுத்து, இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், 170-க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    • துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் வீடு அமைந்துள்ளது.

    இந்நிலையில், தனது குடியிருப்பு முன் நின்றுகொண்டிருந்த அலக்ஸியேவ் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்தக் கொலை முயற்சிக்கு பின்னணியில் உக்ரைன் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அலெக்ஸியேவ் அந்நாட்டின் அதிபர் புதினுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

    • வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பாரளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், நீர் பீய்ச்சி அடித்தும் தடுத்தனர்.

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த நிலையில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

    வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பாரளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

    இதற்கிடையே யூனுஸ் தலைமையில் தற்போதைய இடைக்கால அரசாங்கத்தின் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த டிசம்பரில் மாணவர் அமைப்பு தலைவர் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள முகமது யூனுஸின் இல்லத்தை நோக்கி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றனர்.

    போராட்டக்காரர்கள் தடையை மீறி முன்னேற முயன்றபோது, அவர்களைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், நீர் பீய்ச்சி அடித்தும் தடுத்தனர்.

    முகமது யூனுஸின் இல்லத்தைச் சுற்றியும், டாக்காவின் முக்கியப் பகுதிகளிலும் காவல்துறை மற்றும் ராணுவ பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  

    • பிரதமர் மோடி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறேன்.
    • இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் 2 நாட்களில் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்படவிருந்த ஒரு மிகப்பெரிய போரைத் தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    பேட்டி ஒன்றில் பேசிய அவர், தெற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலில், அணு ஆயுத பலம் கொண்ட இரண்டு அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் மூளும் அபாயம் இருந்ததாகவும், தனது தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தான் இரு நாடுகளின் தலைவர்கள் (பிரதமர் மோடி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்) உடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாகவும், அதன் மூலம் இரு தரப்பையும் அமைதிப்படுத்த முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    இதை அவர் ஏற்கனவே பலமுறை பொது மேடைகளில் கூறியிருந்தாலும் இந்தியா அதை மறுத்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் நடைவடிக்கையால் பாகிஸ்தான் - இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் 2 நாட்களில் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.  

    ×