என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதனிடையே, இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 28-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார்.
    • பொன்னியின் செல்வன் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் . இப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா,ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.இப்படத்தில் இடம் பெற்ற வீர ராஜ வீர பாடலின் மீது காப்புரிமை வழக்கு தொடுக்கப்பட்டது.

    இதனை பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடுத்தார். ஏனெனில் இப்பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இப்பாடல் இசையமைப்பட்டுள்ளதாக வழக்கை தொடுத்தார்.

    இந்த வழக்கில், ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் ரூ.2 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டவேண்டும் எனவும் அனைத்து ஆன்லைன் தளங்களிலும் தாஹர் சகோதரர்கள் பெயரை கிரெடிட்டாக கொடுக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவுகள் பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர். ரகுமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு, "தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது. 

    • சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.
    • கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

    தற்போது, 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட உள்ளது. கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

    மேற்படி வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்து உள்ளது.

    கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

    மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ந.முருகேச பாண்டியன், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) - பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ், பாலசரசுவதி விருது (நாட்டியம்) - பத்மஸ்ரீ முத்து கண்ணம்மாள்.

    அகில இந்திய விருது பெறும் கலை வித்தகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

    தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற் கேடயம் பெறுவதற்குரிய கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழு கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சிறந்த கலை நிறுவனம் -தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணா மலை மன்றம்), சிறந்த நாடகக் குழு-கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம்.

    சிறந்த கலை நிறுவனத்திற்கு வழங்கப்படும் கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கு வழங்கப்படும் சுழற் கேடயத்துடன் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில், 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள், அகில இந்திய விருதுகள், சிறந்த கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழுவினருக்கான கேடயங்கள் ஆகியவை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்படும்.

    எழுத்தாளர்- க.திருநாவுக்கரசு, இயற்றமிழ்க் கவிஞர்- கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர்- எஸ்.சந்திர சேகர் (எ) தங்கம் பட்டர், குரலிசை- பாபநாசம் அசோக் ரமணி, திருமறை தேவார இசை-பா.சற்குரு நாதன் ஓதுவார், தமிழிசைப் பாடகர்- டி.ஏ.எஸ்.தக்கேசி, மிருதங்கம்- திருச்சூர் சி.நரேந்திரன், கோட்டு வாத்தியம் - என்.நரசிம்மன், நாதசுர ஆசிரியர்- கோ.பில்லப்பன், நாதசுரம்- திருக்காட்டுப்பள்ளி டி.ஜே.சுப்பிரமணியன், கல்யாணபுரம் ஜி.சீனிவாசன், தவில் - திருவல்லிக்கேணி கே.சேகர், பரதநாட்டிய ஆசிரியர் - வழுவூர் எஸ்.பழனியப்பன், பரதநாட்டியம் - பிரியா கார்த்திகேயன்,

    நாடக நடிகர்- பூச்சி எஸ்.முருகன், நாடக இயக்குனர் - காரைக்குடி நாராயணன், ஆர்மோனியம்- என்.ஏ. அலெக்ஸ், திரைப்பட நடிகர் - எஸ்.ஜே.சூர்யா, திரைப்பட நடிகை - சாய் பல்லவி, திரைப்பட இயக்குனர் - லிங்குசாமி, திரைப்பட அரங்க அமைப்பாளர்- ஜே.கே. (எ) எம்.ஜெயகுமார், திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் - சூப்பர் சுப்பராயன்,

    சின்னத்திரை நடிகர்- பி.கே.கமலேஷ், இசை நாடக நடிகர் - எம்.பி. விசுவநாதன், கிராமியப் பாடகர் - வீர சங்கர், பொய்க்கால் குதிரை ஆட்டம் - நா. காமாட்சி, பெரிய மேளம்- எம்.முனுசாமி, நையாண்டிமேள நாதஸ்வரம்- பி.மருங்கன், வள்ளி ஒயில்கும்மி- கே.கே.சி.பாலு, ஓவியர்- வே.ஜீவானந்தன்.

    எழுத்தாளர் - சாந்த குமாரி சிவகடாட்சம், இலக்கியப் பேச்சாளர் - தி.மு.அப்துல்காதர், சமயச் சொற்பொழிவாளர் -சு.முத்துகணேசன், குரலிசை- ஜெயஸ்ரீ வைத்தியநாதன், சாரதா ராகவ், வயலின்- பகலா ராமதாஸ், மிருதங்கம் -நெய்வேலி ஆர்.நாராயணன், நாதசுரம் - செம்பனார் கோவில் எஸ்.ஜி.ஆர்.எஸ்.மோகன் தாஸ், சித்துக்காடு டி.ஜி.முருகவேல், தவில் - திருக்கடையூர் டி.ஜி.பாபு, சுதா காலட்சேபம்- சுசித்ரா பாலசுப்பிரமணியன், பரதநாட்டிய ஆசிரியர்- அமுதா தண்டபாணி, பாகவத மேளா-சுப்பிரமணிய பாகவந்தர், பரதநாட்டியக் குரலிசை - சுவாமிமலை கே.சுரேஷ்,

    நாடக நடிகர்- பொன் சுந்தரேசன், நாடக இயக்குனர் - கவிஞர் ரா.நன்மாறன், நாடகத் தயாரிப்பாளர் - சோலை ராஜேந்திரன்,

    திரைப்பட நடிகர் - விக்ரம் பிரபு, திரைப்பட நடிகை- ஜெயா வி.சி.குகநாதன், திரைப்பட பாடலாசிரியர் - விவேகா, திரைப்பட செய்தித் தொடர்பாளர்- டைமண்ட் பாபு, திரைப்பட புகைப்படக் கலைஞர் - டி.லட்சுமி காந்தன், சின்னத்திரை நடிகை- மெட்டிஒலி காயத்ரி, இசை நாடக நடிகர் - என்.சத்தியராஜ்,

    தேவராட்டம்- ந.ரஞ்சி தவேல் பொம்மு, பொம்மலாட்டம்- மு.கலைவாணன், தப்பாட்டம்- எம்.எஸ்.சி.ராதா ரவி, நையாண்டி மேள நாதஸ்வரம் - கே.பாலு, பண்பாட்டுக் கலை பரப்புனர் - ஆர்.சாமிநாதன், ஓவியர்- கே.லோகநாதன்.

    இயற்றமிழ்க் கவிஞர் - கே.ஜீவபாரதி, குரலிசை - ஆர்.காசியப் மகேஷ், வீணை- ஹேமலதாமணி, கிளாரினெட்- வே.பிரபு, நாதசுரம் - பி.பி.ரவிச் சந்திரன், ஞான நடராஜன், எம்.எஸ்.ஆர்.பரமேஸ்வரன், தவில் - ராமஜெயம் பாரதி, பா.ராதாகிருஷ்ணன், பரதநாட்டிய ஆசிரியர் - க.தனசுந்தரி, குச்சுப்பிடி நாட்டியம் - வி.ஜெயப் பிரியா,

    பரதநாட்டியக் குரலிசை - கே.ஹரிபிரசாத், பழம் பெரும் நாடக நடிகர்- என்.ஜோதிகண்ணன், நாடக நடிகர்- வானதிகதிர் (எ) பெ.கதிர்வேல், விழிப்புணர்வு நாடக நடிகர் - வி.கே.தேவநாதன், திரைப்பட நடிகர் - கே.மணி கண்டன், திரைப்பட குணச் சித்திர நடிகர் - எம்.ஜார்ஜ் மரியான், திரைப்பட இசை அமைப்பாளர்- அனிருத், திரைப்பட பின்னணிப் பாடகி - ஸ்வேதா மோகன், திரைப்பட நடன இயக்குனர்- சாண்டி (எ) அ.சந்தோஷ்குமார், திரைப்பட செய்தித் தொடர்பாளர் - நிகில் முருகன், சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்- என்.பி.உமாசங்கர் பாபு, சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்- அழகன் தமிழ்மணி, இசை நாடக நடிகர்- ஏ.ஆர்.ஏ.கண்ணன், இசை நாடக நடிகை- ஆர்.எம்.தமிழ்ச் செல்வி, தெருக்கூத்து- கே.எம்.ராமநாதன், வில்லுப்பாட்டு- டி.ஜெகநாதன், நையாண்டி மேள தவில்- சி.மகாமணி, கிராமியப் பாடல் ஆய்வாளர்- ஆ.சந்திரபுஷ்பம், சிற்பி-சு.தீனதயாளன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர்.
    • காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார்.

    ஊட்டி:

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    கூடலூர் பஸ் நிலையம் அருகே இன்று திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதல் இடம் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம். அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கையை 54 சதவீதமாக உயர்த்தியது அ.தி.மு.க அரசு தான். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, கல்வியில் புரட்சி செய்தது அ.தி.மு.க.

    தி.மு.க. 4 ஆண்டு ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியாவது கொண்டு வரப்பட்டதா? மத்திய அரசு கொடுக்கவில்லை என்பார்கள். ஆனால் அது தவறு. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

    நேற்று உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் முதல் ரோல் மாடல் தான் ஸ்டாலினின் அரசு. கமிஷன், ஊழலில் ரோல்மாடல் தி.மு.க., குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டி திறப்பதில் ரோல் மாடல் தி.மு.க தான்.

    எதிர்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் 525 வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அத்தனையும் பொய். அதிலும் நீங்கள் ரோல் மாடல் தான். போட்டோ சூட் நடத்துவதிலும் நீங்கள் தான் ரோல் மாடல்.

    கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தி.முக.வோடு அங்கம் வகிப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார். சாறை முழுவதுமாக குடித்து விட்டு சக்கையை வழங்குகிறார்கள் என தெரிவித்து இருந்தார்.

    உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினையும், ஸ்டாலின் உதயநிதியையும் புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் போதாது என்று இப்போது துர்கா ஸ்டாலினும் வந்து விட்டார். அவரும் ஸ்டாலினை புகழ்கிறார். இவர்களை நாட்டு மக்கள் புகழ்ந்து பேசவில்லை. குடும்ப மக்கள் தான் அவர்களை புகழ்ந்து பேசிக் கொள்கின்றனர்.

    தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர். தி.மு.க. குடும்ப கட்சி. கருணாநிதி குடும்பம் இருக்கும் வரை தி.மு.க.வில் யாரும் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. உழைப்பை சுரண்டும் குடும்பம் ஸ்டாலின் குடும்பம்.

    நாட்டில் உள்ள எந்த கட்சியாலாவது இப்படி குடும்ப ஆட்சி நடப்பதை பார்க்க முடிகிறதா? கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வரமுடியும். இப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? ஒரு குடும்பம் 8 கோடி மக்களை சுரண்டி பிழைப்பதற்கு நாம் அனுமதிக்கலாமா? இதற்கு ஒரு முடிவு கட்டுவிங்களா? என மக்களை பார்த்து கேட்டார்.

    செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர். இவர் பல கட்சிகளுக்கு போய்விட்டு வந்து விட்டார். காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் ஆட்சியில் பங்கு கேட்டு பேசி வருகின்றனர். ஆனால் இவர் சொல்கிறார் ராகுல்காந்தி ஆட்சியில் பங்கு கேட்க சொல்லவில்லை என சொல்கிறார். உண்மையில் ஒரு காங்கிரஸ் தொண்டனாக இருந்திருந்தால் அந்த எண்ணம் இவருக்கு வந்திருக்குமா?. அவர் தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை.

    செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை. தி.மு.க.வுக்கு தான் விசுவாசமாக உள்ளார்.

    தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு வந்துவிட்டது. ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தி.மு.க கூட்டணி நிலையான கூட்டணியாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கிறார்கள்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை எப்போதும் கூட்டணியை நம்பி இருந்தது இல்லை. ஆனால் தி.மு.க எப்போதும். கூட்டணியை நம்பி தான் இருக்கிறது. மக்கள் எங்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள். 2026 தேர்தலில் அ.தி.மு.க வெல்லும். ஆட்சிக்கு வரும். அதனை ஸ்டாலின் பார்க்க தான் போகிறார்.

    மக்களின் எழுச்சியே எங்களது ஆட்சி வருவதற்கான அடையாளம். தேர்தலில் அ.தி.முக. தான் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்துக்கு தான் தற்போது மற்ற கட்சிகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.

    அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமை என ஸ்டாலின் பேசுகிறார். தலைவன் மட்டும் அல்ல தொண்டன் கூட யாருக்கும் அடிமை இல்லை. நாங்கள் சொந்த காலில் நிற்கிறோம்.

    உங்களை போன்று கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்கே கூட்டணி அமைக்கிறோம். உங்களை போன்று பல கட்சிகளை கூட்டணியில் வைத்து அவர்களை அடிமையாக்க நாங்கள் விரும்பவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தி.மு.க. தான் நியமிக்கிறது. தி.மு.க. யாரை பரிந்துரை செய்கிறதோ அவரை தான் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கிறது. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.ம.வேலு சாமி, மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    • விஜய் பிரசாரம் செய்யும் பகுதிகளில் போலீசார் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.

    திருச்சி:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் நாளான 13-ந் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டார். ஆனால் திருச்சியில் திரண்ட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் பிரசாரம் தாமதமானது.

    அரியலூரில் நள்ளிரவை கடந்து பிரசாரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்று பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சென்னை பிரசாரம் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டது. அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    27-ந் தேதி காலையில் நாமக்கல்லிலும் பின்னர் கரூரிலும் பிரசாரம் செய்ய உள்ளார். விஜய் பேசுவதற்கு கரூரில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகில், ஈரோடு ரோடு வேலுச்சாமிபுரம், 80 அடி சாலை ஆகிய நான்கு இடங்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர்.

    இதற்காக காவல்துறை அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று அல்லது நாளை கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே விஜய் பிரசாரம் செய்யும் பகுதிகளில் போலீசார் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் கரூரில் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடம் பிரசாரத்துக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.

    விஜய் கரூர் வருகையை முன்னிட்டு அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய்க்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

    • தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும்.
    • புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கதிர்காமம் தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலை, நூலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா என முப்பெரும் விழா இன்று நடந்தது.

    கதிர்காமம் தொகுதி செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, தொகுதி துணை செயலாளர் தங்க தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. தலைமை கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான சிவா ஆகியோர் கருணாநிதி சிலை, நூலகம் மற்றும் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும். ஓரணியில் தமிழ்நாடு என தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை மு.க. ஸ்டாலின் தொடங்கினார். ஒரு கோடி வீடுகளுக்கு திமுக தொண்டர்கள் சென்று, 2.70 கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்துள்ளனர்.

    அடுத்தகட்டமாக புதுவை மாநிலத்திலும் வருகிற 2026 தேர்தலையொட்டி ஒரு வாரத்துக்குள் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தலைமை கழகத்தால் அறிவிக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்.

    இதற்கான ஆயத்த பணியை தொடங்க கதிர்காமம் பகுதியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு, கருணாநிதி சிலை திறப்பு, இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்ததுபோல நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் 30 தொகுதியிலும் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். 30 தொகுதியிலும் திமுக வெற்றி பெற ஆயத்த பணிகளை மேற்கொள்வோம்.

    புதுச்சேரியில் 4 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்துள்ளது. 5-வது முறையாக புதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி அமையும் வகையில் உறுப்பினர் சேர்க்கை அமைய வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தேர்தல் நேரத்தில் தலைமை எடுக்கும் கூட்டணி முடிவுகள், தொகுதி பங்கீடு அமையும்.

    புதுச்சேரிக்கும் சேர்த்து தமிழக தி.மு.க.தான் தலைமை. ஸ்டாலினும், ராகுல்காந்தியும் இணைந்து தமிழகம், புதுச்சேரி மாநில முடிவுகளை எடுப்பார்கள். யாருக்கு எத்தனை சீட் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். அதை தி.மு.க ஏற்கும், காங்கிரசும் ஏற்கும் என நம்புகிறேன். 30 தொகுதியிலும் வெற்றி பெறும் வாய்ப்புகளை தி.மு.க. உருவாக்கும்.

    அண்ணாமலை பியூஸ் போன பல்பு. அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை நாங்கள் சரியாக உள்ளோம். நாங்கள் வெற்றி பெறப்போவது நிச்சயம். தி.மு.க. கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என 2019 முதல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

    அவர் கூட்டணியிலிருந்து அல்ல, கட்சியிலிருந்து பாதி பேர் வெளியே சென்று விட்டனர். ஒவ்வொருவராக தி.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். எடப்பாடி அவர் நிலையை முதலில் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விஜய் பற்றி கேட்காதீர்கள். 1980 தேர்தலுக்கு நாராயணசாமி நாயுடுக்கு மிகப்பெரும் கூட்டம் கூடியது.

    அவரை இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர், கருணாநிதி சென்று பார்த்தனர். அந்த கட்சி இப்போது எங்கே உள்ளது? இதுபோல பல உதாரணம் உள்ளது. கூட்டம் சேர்வதை வைத்து கணக்கிட கூடாது. திடீர் பிள்ளை யாருக்கு கூட கூட்டம் கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மக்களுக்கு சுமையாக இருந்தோம் என தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.
    • 2026 தேர்தல் மற்றவர்களுக்கு ஒரு தேர்தல். எங்களுக்கு அப்படி இல்லை.

    சென்னை:

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அவருடைய உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    நடிகை விஜயலட்சுமிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருப்பதாக கேட்கிறீர்கள். நீங்களாக ஒரு தீர்ப்பை எழுதக்கூடாது.

    முதலில் ஜி.எஸ்.டி. வரியை விதித்தது யார்.? அதன் பின்பு வரியை குறைத்தது யார்.? ஏன் குறைத்தார்கள் என்றால் இந்த வரி மக்களுக்கு சுமையாக இருந்தது.

    சுமையாக இருக்கும் என்று கூட தெரியாமல் வரியை விதித்த நீங்கள் என்ன ஆட்சியாளர்? என்ன தலைமை? இதில் பயன் இருக்குமா? வளர்ச்சிக்கு உதவுமா இல்லை வீழ்ச்சிக்கு தள்ளி விடுமா என்று கூட தெரியாமல் அதிகாரத்திற்கு எப்படி வந்தீர்கள்?

    மக்களுக்கு சுமையாக இருந்தோம் என தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்கவேண்டும். இதேபோல் தான் பணம் செல்லாது என்று சொன்னார்கள். அதனால் நடந்த ஒரே ஒரு நம்மை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்..? இதனால் ஊழல் ஒழியும் என்றார்கள் ஒழிந்துவிட்டதா?

    2026 தேர்தல் மற்றவர்களுக்கு ஒரு தேர்தல். எங்களுக்கு அப்படி இல்லை. இது ஒரு தேசிய இனத்தின் விடுதலை. பா.ஜ.க. என் கொள்கை எதிரி திமுக என் அரசியல் எதிரி என்று விஜய் பேசுகிறார்.

    அப்போது தி.மு.க.வின் கொள்கையில் உடன்பாடா? பா.ஜ.க.வின் அரசியல் செயல்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடா?

    பா.ஜ.க. கொள்கை எதிரி என்றால் காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா? என்ற கேள்வி வருகிறது. பா.ஜ.க. கொள்கைக்கும், காங்கிரஸ் கொள்கைக்கும் ஒரே ஒரு வேறுபாடு காட்டுங்கள்.

    பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒரே கொள்கைதான். கட்சியின் பெயர்தான் வேறு. கொடியில் வண்ணம் மாறும் கொள்கையில் எண்ணம் மாறாது.

    விஜய்யை எதிர்த்து வலுவான கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள் வரும் தேர்தலில் விஜய் எதிர்த்து போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள். இதுபோன்று சிறுபிள்ளைத்தனமாக கேட்கக்கூடாது. அண்ணன் தம்பி இடையே சண்டையை இழுத்து விடாதீர்கள். எங்களுக்குள் கருத்து முரண் இருக்கின்றது அதை சரி செய்துகொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம்.

    உன் மேல் இருக்கும் அக்கறையில் அவருடைய கருத்துக்களை எதிர்த்து வருகிறேன். 'அடுத்தவன் பேச்சை கேட்காதே அண்ணன் பேச்சைக் ஒருமுறை கேளு' உனக்கு எழுதி கொடுப்பவர்கள் தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறேன். அது அவருக்கு புரியவில்லை.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    தாய் பாசம் உள்ள தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாகையில் விஜய் பேசிய கருத்திற்கு பதில் அளித்த அவர், கொடுக்கட்டும் கொடுக்கட்டும். என் தம்பி விஜய் திடீரென்று மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவது மோடி தமிழில் திருக்குறள் சொல்வது போல உள்ளது என்றார்.

    • ஸ்விக்கி மூலம் நான் பன்னீர் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் சிக்கன் டெலிவரி செய்யப்பட்டது.
    • பன்னீரின் சுவையிலும் வித்தியாசம் இருந்ததால் சுதாரித்துக் கொண்டு சோதித்து பார்த்தேன்.

    மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையிலும் கால் பதித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி, காலா மற்றும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

    பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் மனதில் பதிந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

    கடைசியாக அதர்ம கதைகள் திரைப்படத்தில் நடித்து இருந்தார். கெஸ்ட் மற்றும் தி நைட் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

    நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைப்பெற்றது. அவரது சிறு வயது நண்பரான நரனீத் மிஸ்ரா என்பவரை கரம் பிடித்தார்.

    இந்நிலையில், சாக்ஷி அகர்வால் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சாக்ஷி அகர்வால் ஆர்டர் செய்த உணவு காண்பிக்கப்பட்டுள்ளது.

    தான் சைவ உணவை ஆர்டர் செய்ததாகவும், வந்தது சிக்கன் எனவும் ஸ்விக்கி உணவகத்தை டேக் செய்து பகிர்ந்துள்ளார்.

    பதிவில், "சுத்த சைவமான எனக்கு சிக்கன் வந்துள்ளது. என் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழில் பேசி சாக்ஷி அகர்வால் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், " கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்விக்கி மூலம் நான் பன்னீர் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் சிக்கன் டெலிவரி செய்யப்பட்டது. நான் என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை. ஆர்டர் செய்த உணவில் மோசமான மணம் வந்ததுடன், பன்னீரின் சுவையிலும் வித்தியாசம் இருந்ததால் சுதாரித்துக் கொண்டு சோதித்து பார்த்தேன். அது சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்,

    நான் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டு, சைவம் - அசைவம் உண்பவர்களுக்கு இடையேயான பிரச்னையோ, இந்துக்கள் இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்னையோ இல்லை. வாடிக்கையாளருக்கும் மோசமான வாடிக்கையாளர் சேவைக்குமான பிரச்னை.

    உணவு என்பது ஒருவரின் தனியுரிமை, அதில் அசைவம் சாப்பிடாதது என் உரிமை. உணவு என்பது நம் உணர்வு மட்டுமன்றி, நம்பிக்கை, கலாசாரம், மத உணர்வுகளையும் சார்ந்தது என்பதால் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

    • பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர், பன்முக தன்மை கொண்டவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
    • தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் சிலை அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பத்திரிகை உலகில் முடிசூடா மன்னர், பன்முக தன்மை கொண்டவர், அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டு அவர்களால் அன்போடு சின்னையா என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த மணிமண்டபம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டம் மற்றும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தபோது தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கோரிக்கையை ஏற்று மணிமண்டபம் கட்டுவதற்கு உடனடியாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து அப்போது செய்தித்துறை அமைச்சராக இருந்த நான், முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் மணிமண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் புகழுக்கு காலத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த மணிமண்டபம் அ.தி.மு.க. அரசால் கட்டப்பட்டது. தொடர்ந்து இதனை பொதுமக்களும் கலந்து கொள்ளும் விதமாக மிகப்பெரிய விழாவாக நடத்தி எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    பல்வேறு மன்னர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்ட நிலையில், பத்திரிகை உலகை சேர்ந்தவருக்கு சிலை அமைத்த முதல் பெருமை அ.தி.மு.க.வுக்கு தான் இருக்கிறது. இதே போல் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாருக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் சிலை அமைக்கப்பட்டது. அவரது பிறந்தநாள் விழாவையும் அரசு விழாவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் அறிவித்தார்.

    சி.பா. ஆதித்தனார் மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆகியோரது புகழுக்கு மேலும் புகழ் சேர்த்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சிதான் என்ற பெருமை எங்களுக்கு எப்போதும் உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • பா.ஜ.க. கூட்டணியில் இருப்பது எங்க விருப்பம். உங்களுக்கு ஏன் வலிக்கிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகின்ற இடமெல்லாம் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் ஒரே குடும்பமான கோபாலபுரத்து குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது.

    தமிழகத்தில் விலைவாசியை உயர்த்தி உள்ளனர். ஆனால் கூலியும், சம்பளமும் உயரவில்லை. ஊழல் மட்டும் உயர்ந்துள்ளது. தி.மு.க.வில் குடும்பத்தினரை தவிர வேறு யாரு முதலமைச்சராக அந்த இயக்கத்தில் வர முடியாது. சாதாரண தொண்டனாக இருந்த எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக வந்துள்ளார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டதில் இருந்து ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு. இந்தியாவை 11 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கிற ஒரு பிரதமராக மோடி இருக்கிறார். பா.ஜ.க.-அ.தி.மு.க. குறித்து பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத இடமே இல்லை. இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது.

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலை நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம் நடத்திய போது முதலமைச்சர் ஸ்டாலின் ரஜினி படம் பார்த்து கொண்டிருந்தார். பா.ஜ.க. கூட்டணியில் இருப்பது எங்க விருப்பம். உங்களுக்கு ஏன் வலிக்கிறது. அ.தி.மு.க. எத்தனை பிரிவாக இருந்தால் உங்களுக்கு என்ன, அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு சாத்தியம் இல்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவரை கட்சியில் ஏன் சேர்க்க வேண்டும். பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் நல்ல பெயர் வந்துவிட கூடாது என ஸ்டாலின் நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டிடிவி தினகரன் உடன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
    • டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் இணைவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில், டிடிவி தினகரன் உடன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் இணைவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தொடரும் வரை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடியாது. கூட்டணியில் இருந்து வெளியேறியபோது, அவசரப்பட வேண்டாம் என்று தொலைபேசியில் அண்ணாமலை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்; அதையேதான் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பிலும் கூறினார்" என்று தெரிவித்தார்.

    கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அண்ணாமலை நேரில் சந்தித்து வலியுறுத்திய நிலையில், டிடிவி தினகரன் அதனை நிராகரித்தார். 

    • போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • ‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 90-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 'தினத்தந்தி' குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதாகுமரன், சம்யுக்தா ஆதித்தன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் மனோ தங்கராஜ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், ஓய்வு பெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் மகாலிங்கம்,

    தி.மு.க. சார்பில் வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம், விவசாய அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், வர்த்தகர் அணி நிர்வாகிகள் தமிழ்மணி, சுரேஷ், ராஜமாணிக்கம், கனிமொழி, அல்லிராஜ், சரவணன் சீனிவாசன், வெங்கடேசன், ரங்கநாதன், பாபு, ஆறுமுகம், தி.நகர் சீனிவாசன், கோபி, ரஞ்சித், ஆனந்தன், பாலாஜி.

    இலக்கிய அணி துணை செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன்,

    காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் எம்.பி., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் தி.நகர் ஸ்ரீராம், சைதை வில்லியம்ஸ், புதூர் பிரகாஷ், நந்தனம் ஆதியார், அருள் பெத்தையா, ஜி.கே.தாஸ், சிவாஜிநாதன், சேவியர்.

    த.மா.கா. பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்.பி.நாதன், ஆர்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர் சென்னை நந்து, எஸ்.ஆர்.கேஸ்டில் ரவி,

    சமத்துவ மக்கள் கழக தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் கண்ணன், துணை பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி, வண்ணாரப்பேட்டை நாடார் சங்க செயலாளர் ராஜேஷ், கடையல் நாடார் சங்கத் தலைவர் தாஸ், ஆலடிப்பட்டி நாடார் இளைஞர் சங்க தலைவர் மாசிலாமணி, அத்திகுளம் நாடார் சங்க பொருளாளர் சங்கரபாண்டியன், சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு உறுப்பினர் சாபுதீன்.

    நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், இணை செயலாளர் மாரிமுத்து, நிர்வாகிகள் சந்திரமோகன், கரு.சின்னதுரை, மனோக ரன், கிப்சன், முருகேசன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நிர்வாகிகள் பாஸ் கர், பத்மநாபன், மருதவேல், மேகவேல்.

    தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் டி.விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட் டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார்.

    சேலம் நாடார் சங்க துணைத் தலைவர் மாடசாமி, திருச்சி அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் அமுல்நாதன், செயலாளர் ராஜேந்திரன், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க தலைவர் கணேசன் நாடார், துணை தலைவர் கதிரேச பெருமாள், பொருளாளர் லட்சுமணன், கமிட்டி உறுப்பினர் ஸ்டீபன்,

    திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் சுந்தர், செயலாளர் திருபுகழ், பொருளாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் ராஜதுரை, மாணிக்கவேல், அரிதாஸ், தாமஸ், பச்சையப்பன், வில்சன், தேவசகாயம், மாசானமுத்து, ராமசாமி, சுரேஷ் பொன்ராஜ், குணசீலன், தங்கராஜ், திருமலை, ராமகிருஷ்ணன், முருகேசன்.

    நாடார் தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள் படப்பை சேவியர், சைமன் பொன்ராஜ், முருகேசன், ஆலயா ரமேஷ் கண்ணன், ஆல்பர்ட் தேவதாஸ்,

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், பொதுச்செயலாளர் ஜெகதீஷ் சவுந்தர்முருகன், பொருளாளர் நசீர் அகமது, துணை செயலாளர் பால முனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காயல் இளவரசு, ஆறுமுக நயினார், அயன்புரம் கிளை மன்ற நிர்வாகிகள் பிரபு சவுந்தர் முருகன், சந்திரசேகர், சச்சிதானந்தம், துரைராஜ், பால்ராஜ், செங்குட்டுவன், ஜஸ்டின், பாலமுருகன், ராமலிங்கம், மனோகரன், நந்தகுமார், புகழ், அருண் பாண்டியன், சதீஷ், சிவபிரகாசம், பார்வதி செல்வன்,

    மணலி புதுநகர் அய்யா வைகுண்டபதி தலைவரும், நற்பணி மன்ற மாவட்ட தலைவருமான துரை பழம், நிர்வாகிகள் ராமையா, வன்னியராஜன், பாண்டியன், மீஞ்சூர் கிளை நிர்வாகி வி.எஸ்.லிங்கம், திருத்தணி நகர நற்பணி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ஆர்.கே.நகர் பகுதி மன்ற தலைவர் வேல்ராஜா.

    தென்காசி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற லோட்டஸ் முருகன், திருச்சி அனியாப்பூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் சிவக்குமார், துணை தலைவர் ராஜா, செயலாளர் காமராஜ், பொருளாளர் சந்திரன்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, நிர்வாகிகள் பாண்டியராஜன், ஜெகன், லயன்முருகன், செல்வம், தர்மராஜ், கார்மேகம், ஜான்வெஸ்லி, பாலன், தேவராஜ், வேல்குமார், டேவிட், அந்தோணி, முகைதீன், சத்தியரீகன், வில்வநாதன், தர்மலிங்கம், செல்வம், மீரான், தமிழ்நாடு வணிகர் மகாஜன சங்க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட் ராஜா.

    வடசென்னை வியாபாரி சங்கத் தலைவர் ராபர்ட், செயலாளர் சேவியர், துணை தலைவர் எட்வர்ட் துணை செயலாளர் செந்தில்.

    பழைய வண்ணாரப் பேட்டை முருகன் டாக்கீஸ் பாலசுப்பிரமணியன்.

    ×