என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவிக்கு கலைமாமணி விருது- ஜேசுதாசுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது
- சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.
- கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.
தற்போது, 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட உள்ளது. கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.
மேற்படி வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்து உள்ளது.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.
மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ந.முருகேச பாண்டியன், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) - பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ், பாலசரசுவதி விருது (நாட்டியம்) - பத்மஸ்ரீ முத்து கண்ணம்மாள்.
அகில இந்திய விருது பெறும் கலை வித்தகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற் கேடயம் பெறுவதற்குரிய கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழு கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறந்த கலை நிறுவனம் -தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணா மலை மன்றம்), சிறந்த நாடகக் குழு-கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம்.
சிறந்த கலை நிறுவனத்திற்கு வழங்கப்படும் கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கு வழங்கப்படும் சுழற் கேடயத்துடன் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில், 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள், அகில இந்திய விருதுகள், சிறந்த கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழுவினருக்கான கேடயங்கள் ஆகியவை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்படும்.
எழுத்தாளர்- க.திருநாவுக்கரசு, இயற்றமிழ்க் கவிஞர்- கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர்- எஸ்.சந்திர சேகர் (எ) தங்கம் பட்டர், குரலிசை- பாபநாசம் அசோக் ரமணி, திருமறை தேவார இசை-பா.சற்குரு நாதன் ஓதுவார், தமிழிசைப் பாடகர்- டி.ஏ.எஸ்.தக்கேசி, மிருதங்கம்- திருச்சூர் சி.நரேந்திரன், கோட்டு வாத்தியம் - என்.நரசிம்மன், நாதசுர ஆசிரியர்- கோ.பில்லப்பன், நாதசுரம்- திருக்காட்டுப்பள்ளி டி.ஜே.சுப்பிரமணியன், கல்யாணபுரம் ஜி.சீனிவாசன், தவில் - திருவல்லிக்கேணி கே.சேகர், பரதநாட்டிய ஆசிரியர் - வழுவூர் எஸ்.பழனியப்பன், பரதநாட்டியம் - பிரியா கார்த்திகேயன்,
நாடக நடிகர்- பூச்சி எஸ்.முருகன், நாடக இயக்குனர் - காரைக்குடி நாராயணன், ஆர்மோனியம்- என்.ஏ. அலெக்ஸ், திரைப்பட நடிகர் - எஸ்.ஜே.சூர்யா, திரைப்பட நடிகை - சாய் பல்லவி, திரைப்பட இயக்குனர் - லிங்குசாமி, திரைப்பட அரங்க அமைப்பாளர்- ஜே.கே. (எ) எம்.ஜெயகுமார், திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் - சூப்பர் சுப்பராயன்,
சின்னத்திரை நடிகர்- பி.கே.கமலேஷ், இசை நாடக நடிகர் - எம்.பி. விசுவநாதன், கிராமியப் பாடகர் - வீர சங்கர், பொய்க்கால் குதிரை ஆட்டம் - நா. காமாட்சி, பெரிய மேளம்- எம்.முனுசாமி, நையாண்டிமேள நாதஸ்வரம்- பி.மருங்கன், வள்ளி ஒயில்கும்மி- கே.கே.சி.பாலு, ஓவியர்- வே.ஜீவானந்தன்.
எழுத்தாளர் - சாந்த குமாரி சிவகடாட்சம், இலக்கியப் பேச்சாளர் - தி.மு.அப்துல்காதர், சமயச் சொற்பொழிவாளர் -சு.முத்துகணேசன், குரலிசை- ஜெயஸ்ரீ வைத்தியநாதன், சாரதா ராகவ், வயலின்- பகலா ராமதாஸ், மிருதங்கம் -நெய்வேலி ஆர்.நாராயணன், நாதசுரம் - செம்பனார் கோவில் எஸ்.ஜி.ஆர்.எஸ்.மோகன் தாஸ், சித்துக்காடு டி.ஜி.முருகவேல், தவில் - திருக்கடையூர் டி.ஜி.பாபு, சுதா காலட்சேபம்- சுசித்ரா பாலசுப்பிரமணியன், பரதநாட்டிய ஆசிரியர்- அமுதா தண்டபாணி, பாகவத மேளா-சுப்பிரமணிய பாகவந்தர், பரதநாட்டியக் குரலிசை - சுவாமிமலை கே.சுரேஷ்,
நாடக நடிகர்- பொன் சுந்தரேசன், நாடக இயக்குனர் - கவிஞர் ரா.நன்மாறன், நாடகத் தயாரிப்பாளர் - சோலை ராஜேந்திரன்,
திரைப்பட நடிகர் - விக்ரம் பிரபு, திரைப்பட நடிகை- ஜெயா வி.சி.குகநாதன், திரைப்பட பாடலாசிரியர் - விவேகா, திரைப்பட செய்தித் தொடர்பாளர்- டைமண்ட் பாபு, திரைப்பட புகைப்படக் கலைஞர் - டி.லட்சுமி காந்தன், சின்னத்திரை நடிகை- மெட்டிஒலி காயத்ரி, இசை நாடக நடிகர் - என்.சத்தியராஜ்,
தேவராட்டம்- ந.ரஞ்சி தவேல் பொம்மு, பொம்மலாட்டம்- மு.கலைவாணன், தப்பாட்டம்- எம்.எஸ்.சி.ராதா ரவி, நையாண்டி மேள நாதஸ்வரம் - கே.பாலு, பண்பாட்டுக் கலை பரப்புனர் - ஆர்.சாமிநாதன், ஓவியர்- கே.லோகநாதன்.
இயற்றமிழ்க் கவிஞர் - கே.ஜீவபாரதி, குரலிசை - ஆர்.காசியப் மகேஷ், வீணை- ஹேமலதாமணி, கிளாரினெட்- வே.பிரபு, நாதசுரம் - பி.பி.ரவிச் சந்திரன், ஞான நடராஜன், எம்.எஸ்.ஆர்.பரமேஸ்வரன், தவில் - ராமஜெயம் பாரதி, பா.ராதாகிருஷ்ணன், பரதநாட்டிய ஆசிரியர் - க.தனசுந்தரி, குச்சுப்பிடி நாட்டியம் - வி.ஜெயப் பிரியா,
பரதநாட்டியக் குரலிசை - கே.ஹரிபிரசாத், பழம் பெரும் நாடக நடிகர்- என்.ஜோதிகண்ணன், நாடக நடிகர்- வானதிகதிர் (எ) பெ.கதிர்வேல், விழிப்புணர்வு நாடக நடிகர் - வி.கே.தேவநாதன், திரைப்பட நடிகர் - கே.மணி கண்டன், திரைப்பட குணச் சித்திர நடிகர் - எம்.ஜார்ஜ் மரியான், திரைப்பட இசை அமைப்பாளர்- அனிருத், திரைப்பட பின்னணிப் பாடகி - ஸ்வேதா மோகன், திரைப்பட நடன இயக்குனர்- சாண்டி (எ) அ.சந்தோஷ்குமார், திரைப்பட செய்தித் தொடர்பாளர் - நிகில் முருகன், சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்- என்.பி.உமாசங்கர் பாபு, சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்- அழகன் தமிழ்மணி, இசை நாடக நடிகர்- ஏ.ஆர்.ஏ.கண்ணன், இசை நாடக நடிகை- ஆர்.எம்.தமிழ்ச் செல்வி, தெருக்கூத்து- கே.எம்.ராமநாதன், வில்லுப்பாட்டு- டி.ஜெகநாதன், நையாண்டி மேள தவில்- சி.மகாமணி, கிராமியப் பாடல் ஆய்வாளர்- ஆ.சந்திரபுஷ்பம், சிற்பி-சு.தீனதயாளன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






