என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டமன்ற தேர்தலில் விஜய்யை எதிர்த்து போட்டியா?- சீமான் பரபரப்பு பேட்டி
    X

    சட்டமன்ற தேர்தலில் விஜய்யை எதிர்த்து போட்டியா?- சீமான் பரபரப்பு பேட்டி

    • மக்களுக்கு சுமையாக இருந்தோம் என தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.
    • 2026 தேர்தல் மற்றவர்களுக்கு ஒரு தேர்தல். எங்களுக்கு அப்படி இல்லை.

    சென்னை:

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அவருடைய உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    நடிகை விஜயலட்சுமிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருப்பதாக கேட்கிறீர்கள். நீங்களாக ஒரு தீர்ப்பை எழுதக்கூடாது.

    முதலில் ஜி.எஸ்.டி. வரியை விதித்தது யார்.? அதன் பின்பு வரியை குறைத்தது யார்.? ஏன் குறைத்தார்கள் என்றால் இந்த வரி மக்களுக்கு சுமையாக இருந்தது.

    சுமையாக இருக்கும் என்று கூட தெரியாமல் வரியை விதித்த நீங்கள் என்ன ஆட்சியாளர்? என்ன தலைமை? இதில் பயன் இருக்குமா? வளர்ச்சிக்கு உதவுமா இல்லை வீழ்ச்சிக்கு தள்ளி விடுமா என்று கூட தெரியாமல் அதிகாரத்திற்கு எப்படி வந்தீர்கள்?

    மக்களுக்கு சுமையாக இருந்தோம் என தோல்வியை ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்கவேண்டும். இதேபோல் தான் பணம் செல்லாது என்று சொன்னார்கள். அதனால் நடந்த ஒரே ஒரு நம்மை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்..? இதனால் ஊழல் ஒழியும் என்றார்கள் ஒழிந்துவிட்டதா?

    2026 தேர்தல் மற்றவர்களுக்கு ஒரு தேர்தல். எங்களுக்கு அப்படி இல்லை. இது ஒரு தேசிய இனத்தின் விடுதலை. பா.ஜ.க. என் கொள்கை எதிரி திமுக என் அரசியல் எதிரி என்று விஜய் பேசுகிறார்.

    அப்போது தி.மு.க.வின் கொள்கையில் உடன்பாடா? பா.ஜ.க.வின் அரசியல் செயல்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடா?

    பா.ஜ.க. கொள்கை எதிரி என்றால் காங்கிரஸ் உங்கள் கொள்கை நண்பனா? என்ற கேள்வி வருகிறது. பா.ஜ.க. கொள்கைக்கும், காங்கிரஸ் கொள்கைக்கும் ஒரே ஒரு வேறுபாடு காட்டுங்கள்.

    பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒரே கொள்கைதான். கட்சியின் பெயர்தான் வேறு. கொடியில் வண்ணம் மாறும் கொள்கையில் எண்ணம் மாறாது.

    விஜய்யை எதிர்த்து வலுவான கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள் வரும் தேர்தலில் விஜய் எதிர்த்து போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள். இதுபோன்று சிறுபிள்ளைத்தனமாக கேட்கக்கூடாது. அண்ணன் தம்பி இடையே சண்டையை இழுத்து விடாதீர்கள். எங்களுக்குள் கருத்து முரண் இருக்கின்றது அதை சரி செய்துகொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம்.

    உன் மேல் இருக்கும் அக்கறையில் அவருடைய கருத்துக்களை எதிர்த்து வருகிறேன். 'அடுத்தவன் பேச்சை கேட்காதே அண்ணன் பேச்சைக் ஒருமுறை கேளு' உனக்கு எழுதி கொடுப்பவர்கள் தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறேன். அது அவருக்கு புரியவில்லை.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    தாய் பாசம் உள்ள தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாகையில் விஜய் பேசிய கருத்திற்கு பதில் அளித்த அவர், கொடுக்கட்டும் கொடுக்கட்டும். என் தம்பி விஜய் திடீரென்று மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவது மோடி தமிழில் திருக்குறள் சொல்வது போல உள்ளது என்றார்.

    Next Story
    ×