என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • விஜயின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது புகார்
    • தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக நிர்வாகி இமயதமிழன் ஆன்லைனில் புகார்

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போவதாகவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

    இந்நிலையில், விஜயின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக நிர்வாகி இமயதமிழன் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட காணொளியை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ‘வண்ணம்கொண்ட வெண்ணிலவே’ காதலின் அத்வைதம்
    • ஒவ்வொரு பாட்டிலும் உனக்குள்ளிருந்த நடிகனைக் கரைத்துக் குழைத்துப் பூசியிருப்பாய்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவு தினத்தையொட்டி திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாசமுள்ள பாட்டுக்காரா!

    நினைவு நாளில் அல்ல

    உன்னை

    நினைக்காத நாளில்லை

    நீ பாடும்போது

    உடனிருந்த நாட்கள்

    வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்

    'பொன்மாலைப் பொழுது'

    உன் குரலின்

    அழகியல் வசீகரம்

    'சங்கீத ஜாதிமுல்லை'

    கண்ணீரின் திருவிழா

    'காதல் ரோஜாவே'

    கவிதைக் கதறல்

    'வண்ணம்கொண்ட

    வெண்ணிலவே'

    காதலின் அத்வைதம்

    'பனிவிழும் மலர்வனம்'

    சிருங்காரச் சிற்பம்

    'காதலே என் காதலே'

    தோல்வியின் கொண்டாட்டம்

    ஒவ்வொரு பாட்டிலும்

    உனக்குள்ளிருந்த நடிகனைக்

    கரைத்துக் குழைத்துப்

    பூசியிருப்பாய்

    உன் வரவால்

    திரைப்பாடல் பூச்சூடிநின்றது

    உன் மறைவால்

    வெள்ளாடை சூடி நிற்கிறது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது.
    • லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    லாஜிடெக் நிறுவனம் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 என்ற வயர்லெஸ் கீபோர்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒளியை மட்டுமே சக்தியாகப் பயன்படுத்தும் ஒரு வயர்லெஸ் கீபோர்டு ஆகும். இந்த சாதனம் லாஜிடெக்கின் "லாஜி லைட்-சார்ஜ்" தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளியிலிருந்தும் கூட ரீசார்ஜ் செய்ய முடியும்.

    முழுமையாக சார்ஜ் செய்தவுடன், கீபோர்ட்டை நான்கு மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்த கீபோர்டில் உள்ள ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டை சார்ஜ் செய்ய வேண்டிய தேவையை நீக்குகிறது.

    இந்த கீபோர்டு முழு அளவிலான அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு மடிக்கணினியின் டைப்பிங் அனுபவத்தை வழங்கும். மேலும் இதில் சிசர்-ஸ்விட்ச் கீ வழங்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டை பல சாதனங்களுடன் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஈஸி-சுவிட்ச் கீ பயன்படுத்தி மூன்று சாதனங்களுக்கு மத்தியில் மாற்றி பயன்படுத்த அனுமதிக்கிறது.



    லாஜிடெக் நிறுவனம் இந்த கீபோர்டின் வணிக மயமாக்கப்பட்ட சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 என்ற வெர்ஷனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது. இந்த வெர்ஷன் 23 ஷார்ட்கட்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது.

    லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. யுனிவர்சல் மற்றும் மேகோஸ் மாடல்களின் விலை 99.99 டாலர்கள் ஆகும். இதன் வணிக மயமாக்கப்பட்ட வெர்ஷனின் விலை 109.99 டாலர்கள் ஆகும்.

    • மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல.
    • விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன.

    பிச்சைக்காரர்கள் போல் ஒட்டுப் போட்ட சட்டை மாதிரி செல்வப்பெருந்தகை கட்சி மாறி வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய விமர்சனத்திற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, எவ்வளவு ஆழமாக அரசியலில் சமூக விரோத எண்ணங்கள் புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங்களை அறியாத செழிப்பின் அகந்தையையும் வெளிப்படுத்துகிறது. மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து, விளிம்புநிலை மக்களின் வாக்குகளால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இறுதியில் ஊர்ந்து சென்று முதல்வராகவும் ஆனீர்கள். ஆனால், இன்று மக்களின் வலிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தூரத்தில் நிற்கிறீர்கள்.

    டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, வேறொருவரின் சொகுசு பென்ட்லி காரில் (Bentley) பயணிக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இந்த நாட்டின் ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் தெரியும், புரியும்?

    என்னை 'பிச்சைக்காரன் - ஒட்டு போட்ட சட்டை' என்று அழைக்கும் போது, என்னை மட்டுமல்ல, எளிமையான நிலைமையில் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் மரியாதையையும் மதிப்பையும் இழிவுபடுத்துகிறீர்கள். நான் கிழிந்த துணி அணிந்திருந்தாலும், அந்த துணியில் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களின் கண்ணீர், கனவுகள், நம்பிக்கைகள் உள்ளன.

    விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன. அவர்கள் சுயமரியாதைக்கும், அன்றாட வாழ்வுப் போராட்டத்திற்கும் நான் கடமைப்பட்டவன். அந்த மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல.

    எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா.?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.
    • டாக்டர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்திற்கு முழுநேர பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அருள் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சமீப காலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய மருத்துவர் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டில் பாமக-வினர் மத்தியிலும், பொதுமக்கள், அனைத்து கட்சித்தலைவர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் மருத்துவர் மக்கள் மேம்பாட்டுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர்.

    மருத்துவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பாமக-வின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் மருத்துவர் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.

    எனவே அவருடைய பாதுகாப்பு கருதி முழுநேரமும் மருத்துவர் அய்யா வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும் தைலாபுரம் தோட்டத்திற்கு மருத்துவர் அய்யாவை சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலி பரிசோதனை கருவி (Metal detector) அமைத்திட கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அருள் எம்.எல்.ஏ. அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • சூர்யகுமார் யாதவின் கருத்துகள் விளையாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக புகார்
    • சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஐசிசி ஏற்றுக்கொண்டது.

    ஆசிய கோப்பை தொடரில் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்

    சூர்யகுமார் யாதவின் கருத்துகள் விளையாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதி, அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் ஐசிசியிடம் புகார் அளித்தது.

    இந்நிலையில், சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐசிசி, முறையான விசாரணை தொடங்க உத்தரவிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தெரிவித்த கருத்துகள் குறித்து ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் விளக்கம் கேட்டுள்ளார்.

    • முதுகு வலிக்கு சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அசௌகரியமாக உணர்ந்துள்ளதாக தகவல்.
    • 6 மாதம் ரெட்-பால் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார்.

    இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர், பிசிசிஐ-யிடம் ரெட்-பால் (டெஸ்ட்) கிரிக்கெட்டில் இருந்து 6 மாதம் காலம் விலகி இருக்க அனுமதி கேட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் வேண்டுகோளை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் அவருடைய பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. அதேபோல் ரஞ்சி கோப்பை சாம்பியனுக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா விளையாடும் இரானி கோப்பைக்கும் அவருமைய பெயர் பரிசீலனை செய்யப்படமாட்டாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் விளையாடிய அவர், 2ஆவது டெஸ்டில் இருந்து விலகினார்.

    முதுகு வலி காரணமாக லண்டனில் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதில் இருந்து மீண்டும் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தர போட்டிகளில் விளையாடும் போது, அசௌகரியமாக உணர்ந்துள்ளார். இதனால் டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தார். தனக்கு 6 மாதம் ஓய்வு தேவை என பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.

    ஐபிஎல் 2025 தொடருக்குப்ப பிறகு துலீப் டிராபி அரையிறுதியில் விளையாடினார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் விளையாடினார்.

    2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷ்ரேயாஸ் அய்யருக்கு முதுகில் பிரச்சினை ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது காயத்தின் வீரியம் அதிகமானது. இதனால் ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அதன்பின் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார். 2023 ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    • உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.
    • மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும்.

    இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தால் மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரெயில் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இது உலகின் மிக ஆடம்பரமான ரெயில்களில் ஒன்றாகும்.

    இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு சிறப்பு ரெயிலில் பயணம் செய்தார். அவர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல இந்த ரெயிலில் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்கான ஜனாதிபதி அறை, டீலக்ஸ் அறைகள், உணவகங்கள், ஓய்வறைகளைக் கொண்ட பெட்டிகள் சொகுசு ரெயிலில் உள்ளன.

    இன்று காலை 8 மணிக்கு திரவுபதி முர்மு பயணம் செய்த மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரபிரதேசத்தின் பிருந்தாவன் சாலை ரெயில் நிலையத்தை காலை 10 மணிக்கு சென்றடைந்தது.

    பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீபாங்கே பிகாரி கோவில், நிதிவன்-குப்ஜ கிருஷ்ணா கோவில் ஆகியவற்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் மற்றும் பூஜை செய்தார். பின்னர் அவர் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வழிபடுகிறார். அதன்பின் மாலையில் அந்த சிறப்பு ரெயிலில் டெல்லிக்கு புறப்படுகிறார்.

    இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும். மூத்த ரெயில்வே ஊழியர்களுக்காக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக 2 என்ஜின்கள் இருக்கும். ஒரு என்ஜின் இயங்கும் அதே வேளையில், மற்றொரு என்ஜின் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய உடன் பயணிக்கும் என்றார். ஜனாதிபதியின் இந்த பயணத்தை தொடர்ந்து ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பிற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டன.

    கடந்த 2023-ம் ஆண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு ரெயில் மூலம் ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து தனது சொந்த ஊரான ராய்ரங்பூருக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதனிடையே இன்று முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாத்தினார் தடுக்கின்றனர்.
    • மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் செய்வதாக புகார்

    தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில் பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாதியினர் தடுக்கும் அராஜகம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை மீறி பள்ளி மாணவர்கள் பொது பாதையை பயன்படுத்தினர்.

    கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், "தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில், காலம்காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த, பொது பாதையினை, சாதிய ஆதிக்கத்தின் பெயரில், பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என தடுக்கும் அராஜகம்....... சிபிஐ(எம்),தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், மிக வன்மையாக கண்டிக்கிறோம்!

    மாவட்ட நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் காட்டியது மென்மேலும் வன்முறையை அதிகரிக்கச் செய்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

    • அனுஷ்கா நடிப்பில் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'காட்டி'.
    • நடிகர் மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' ஓணம் பண்டிகையையொட்டி வெளியானது.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

    காட்டி

    அனுஷ்கா நடிப்பில் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'காட்டி'. இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோயினாக சோலோவாக அனுஷ்கா களமிறங்கினார். இப்படம் வெளிவந்து எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில் நாளை ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

    சுமதி வளவு

    கடந்த மாதம் 1 -ம் தேதி திரைக்கு வந்த சுமதி வளவு, மந்தமான விமர்சனங்களை பெற்ற போதிலும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படம் நாளை முதல் ஜீ5 தளத்தில் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

    ஹிருதயபூர்வம்

    நடிகர் மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' ஓணம் பண்டிகையையொட்டி வெளியானது. இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாக படக்குழு தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இப்படம் நாளை வெளியாக உள்ளது.

    ஓடும் குதிர சாடும் குதிர

    பகத் பாசில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான மலையாள சினிமா. மரச்சாமான்கள் விற்கும் கடைக்காராக நாயகன் இருக்கிறார். நண்பருடன் இணைந்து ஒரு வீட்டிற்கு மரச்சாமான்கள் இறக்கி வைக்க செல்கிறார். அங்கு காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரும் நாயகியுடன் காதலில் விழுகிறார். நாயகனின் அர்ப்பணிப்பை கண்டு நாயகியும் காதல் கொள்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமணத்தன்று தனது கணவர் குதிரையில் வந்து இறங்கவேண்டும் என்ற ஆசையை நாயகி கொண்டிருக்கிறார். நாயகியின் ஆசையை நிறைவேற்ற திருமணநாளில் நாயகன் குதிரையில் செல்ல விபத்தில் காயமடைந்து 'கோமா' நிலைக்கு செல்கிறார். அதன்பின்னர் நாயகன்-நாயகியின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகள் தொடர்பான நகைச்சுவை சினிமா. நெட்பிளிக்சில் நாளை வெளியாகிற இதனை தமிழில் காணலாம்.

    மகா அவதார் நரசிம்மா

    கே.ஜி.எப்., காந்தாரா போன்ற பிரமாண்ட படங்களை தயாரித்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே. தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் இதிகாச கதைகளை மையமாக வைத்து கார்ட்டூன் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் முதலாவதாக அரக்கன் இரண்யகசிபு மகன் பக்தன் பிரகலாதன் மற்றும் விஷ்ணு அவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவின் கதையை தழுவி கார்ட்டூன் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. அஸ்வின் குமார் இயக்கத்தில், சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூ.320 கோடி வசூல் குவித்து இந்தியாவில் வெளியான கார்ட்டூன் படங்களிலேயே அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை பிடித்துள்ளது. தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி உள்ள இதனை தமிழில் காணலாம்.

    மதராஸி

    சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் நடிப்பில் வெளியான படம். வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகிகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் தொடர்பான சினிமா. அனிருத் இசையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம். அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வருகிற 3-ந்தேதி வெளியாகிறது.

    இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

    • இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
    • ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன 2நிலையில், ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்திய 'ஏ' அணிஅணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகியதால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்தியா A அணியை பிசிசிஐ அறிவித்தது. ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    1வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி:-

    ஷ்ரேயாஸ் ஐயர் (C), பிரப்சிம்ரன் சிங் (WK), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுதிர் சிங், ரவி பிஷ்னாய், அபிஷேக் போரல், பிரியான்ஷ் ஆர்யா, சினுர்ஜீத் சிங்

    இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி:

    ஷ்ரேயாஸ் லியர் (C), திலக் வர்மா (VC), அபிஷேக் ஷர்மா, ப்ரப்சிம்ரன் சிங் (WK), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், துதிஷ்னோ சிங், துதிஷ்னோ சிங், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், 

    ×