என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞர்.
- நீதிபதி பெருந்தன்மையாக கடந்து சென்றாலும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நீதிபதியை தாக்க முயன்றது நமது ஜனநாயகத்தில் உயர்ந்த நீதித்துறை மீதான தாக்குதல்.
நீதிபதியை தாக்க முயன்றது அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு இன்னும் நம் சமூகத்தில் நீடிக்கிறது என்பதை காட்டுகிறது.
தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் நீதித்துறையின் வலிமையை காட்டுகிறது.
நீதிபதி பெருந்தன்மையாக கடந்து சென்றாலும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- 3.92 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.5 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.
- 14 லட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பீகார் தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மாலை தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி,
SIR-க்கு பிறகு பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.92 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.5 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 14 லட்சம் பேர் புது வாக்காளர்கள்.
தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியான அடிப்படையில் நடத்துவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
100 வயதிற்கு மேற்பட்டோர் 14 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 90,712 வாக்கு மையங்கள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
எந்தவொரு வன்முறையையும் சகித்துக் கொள்ளக் கூடாது நிர்வாக அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளம் மற்றும் மற்ற பிளாட்பார்ம் மூலமாக போலி செய்திகள் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
- செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு கோரி வழக்கு தொடரப்பட்டது.
- தனது நிலைப்பாட்டை நீதிமன்றம் தெளிவாக வழக்கு விசாரணையின்போது கூறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், செந்தில் பாலாஜி மீது பண பரிவர்த்தனை உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பின்னர். அவர் கைதும் செய்யப்பட்டார். இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைக்கு இடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நபர் அமைச்சராக இருக்கக் கூடாதா? நீதிமன்றம் அப்படி கூற முடியாது என வாதம் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம். ஆனால், அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சிப்பதாக புகார் வந்தால் , ஜாமீன் விதிமுறைகளை மீறினார் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், தனது நிலைப்பாட்டை நீதிமன்றம் தெளிவாக வழக்கு விசாரணையின்போது கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் எந்த ஒரு மாற்றுக் கருத்தோ, குழப்பமோ இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் அதிகாரத்தில் இல்லை என்பதால் தான் ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
மீண்டும் அமைச்சராக விரும்பினால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
- கான்பூரில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஏ அணி விளையாடியது.
- 2ஆவது போட்டியின்போது சில வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா "ஏ" அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நேற்றுடன் அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிக்கான தொடர்கள் முடிவடைந்தன. ஒருநாள் தொடர் கான்பூரில் நடைபெற்றது.
2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றது. முதல் மற்றும் கடைசி போட்டியில் இந்தியா ஏ வெற்றி பெற்றது.
2ஆவது போட்டியின்போது ஆஸ்திரேலியா ஏ அணி வீரர்கள் சிலருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஹென்றி தோர்ன்டன் உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாகிவிட்டது.
வீரர்களின் உடல் நலக்குறைவுக்கு உணவுதான் காரணம் என ஆஸ்திரேலியா ஏ அணி குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில் பிசிசிஐ துணைத் தலைவரான ராஜீவ் சுக்லா, ஆஸ்திரேலியா ஏ அணியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
உணவுதான் பிரச்சனையாக இருந்திருந்தால் இந்திய வீர்ரகள் உள்பட அனைத்து வீரர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்க வேண்டும். வேறு ஏதாவது இருந்திருக்க வேண்டும். சிறந்த ஓட்டலில் இருந்து அவர்களுக்கு உணவு வரவழைக்கப்பட்டிருந்தது. அனைவரும் அந்த உணவை சாப்பிட்டார்கள். சில வீரர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வேறு ஏதாவது தொற்று (infection) ஏற்பட்டிருக்கலாம்.
அங்கு ஏராளமான ஓட்டல்கள் இல்லை. இதனால் இந்த விசயம் பெரிதாக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு 300 அறைகள் கொண்ட 5 நட்டசத்திர ஓட்டல் தேவை. அதுபோன்ற ஓட்டல் இல்லை. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சர்வதேச விமான நிலையம் அங்கு இல்லை. சிறந்த ஏற்பாடுகள் இருந்திருந்தால், அவர்களுக்கு பலன் தரக்கூடிய வகையில் இருந்திருக்கும்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
- 2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது.
- புற நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு.
2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது
- 2025 ஆம் ஆண்டில் இந்த பைக்குகள் பெற்ற இரண்டாவது விலைக் குறைப்பு இதுவாகும்.
- கடந்த ஜனவரி மாதம், யமஹா அவற்றின் விலைகளை ரூ. 1.10 லட்சமாக குறைத்தது.
இந்தியாவில் சமீபத்தில் புதிய ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் மூலம், 350 சிசிக்கும் குறைவான மோட்டார்சைக்கிள்கள் மிக குறைந்த விலையில் விற்பனையாகின்றன. இந்த வகை பைக்குகளுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதன் விளைவாக பல இரு சக்கர வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த பிரிவில் யமஹா நிறுவனத்தின் பிரபலமான பிரீமியம் மாடல்கள்- R3 மற்றும் MT-03 ஆகியவை உள்ளன.
இரண்டு பைக்குகளும் 350cc-க்கும் குறைவான எஞ்சின் மூலம் இயக்கப்படுவதால், அவற்றின் விலையில் சுமார் ரூ. 20,000 வரை சரிவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, R3 மாடல் ரூ. 3.39 லட்சமாகவும், அதன் நேக்கட் வெர்ஷன் MT-03 மாடல் ரூ. 3.30 லட்சமாகவும் (இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) மாறியுள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், 2025 ஆம் ஆண்டில் இந்த பைக்குகள் பெற்ற இரண்டாவது விலைக் குறைப்பு இதுவாகும். கடந்த ஜனவரி மாதம், யமஹா அவற்றின் விலைகளை ரூ. 1.10 லட்சமாக குறைத்தது. இது 2023-இன் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட கணிசமாக அதிக அணுகக்கூடியதாக மாற்றியது.
இரு மாடல்களிலும் 321cc, இரட்டை சிலிண்டர் எஞ்சின் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட சேஸ் ஆகியவை அசத்தலான ரைடு அனுபவத்தை வழங்குகின்றன. இந்த பிரிவில் சில பைக்குகளை ஒப்பிட முடியாது.
- மத்திய அரசு நிதி வழங்கியதால் தனியார் பள்ளியில் 25 சதவீத சேர்க்கைக்கு அனுமதி.
- இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
இலவச கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை இலவசமாக படிக்க வழி வகை செய்யும் மத்திய அரசின் திட்டத்தில் தமிழகத்தில் 1 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் சேர்க்கப்படுகிறார்கள்.
தற்போது மத்திய அரசு நிதி வழங்காததால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் இந்த வருடம் இலவச கல்வி திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியவில்லை.
இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கியதால் மாணவர் சேர்க்கையை அரசு தொடங்கியுள்ளது. காலதாமதமாக தொடங்குவதால் மாணவர்கள் ஏற்கனவே பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் புதிதாக குழந்தைகளை சேர்க்க வாய்ப்பு இல்லை.
தற்போது தனியார் பள்ளிகளில் படித்து வரும் குழந்தைகளை இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கனவே பெறப்பட்ட கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை தொடங்கியது. அனைத்து மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அவர்களுக்கு குழந்தைகளை இலவச கல்வி திட்டத்தில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கக்கூடிய எல்.கே.ஜி., யு.கே.ஜி., 1-ம் வகுப்பு குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பணத்தை திருப்பி கொடுப்பது சிரமம். காலாண்டு தேர்வு முடிந்துவிட்ட நிலையில் கட்டணத்தை திருப்பி கொடுத்தால் தனியார் பள்ளிகளுக்கு நஷ்டம் பெருமளவில் ஏற்படும்.
காலதாமதத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் எப்படி பொறுப் பேற்க முடியும் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக்கு லேசன் பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தற்போது இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், 2024ம் ஆண்டிற்கான 53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக வின்சி அலோஷியஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சிறந்த குணச்சித்திர நடிகர், நடிகை, ஸ்பெஷல் ஜூரி விருது (நடிப்பு, இயக்கம்), பிரபலமான மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த திடைப்படம், சிறந்த குழந்தைகள் திரைப்படம், சிறைந் கதை எழுத்தாளர், சிறந்த திரைக்கதை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர், பாடகி, சிறந்த படக்தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள 2024ம் ஆண்டின் கேரள மாநில திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழுவின் தலைவராக நடிகரும் இயக்குநருமான பிரகாஷ் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நடுவர் குழுவில் ரஞ்சன் பிரமோத், ஜிபு ஜேக்கப், பாக்யலட்சுமி, காயத்ரி அசோகன், நிதின் லூகாஸ் மற்றும் சந்தோஷ் எச்சிக்கானம் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தலைவராக பிரகாஷ் ராஜ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுப்மன் கில் டி20 மற்றும் டெஸ்ட் கிரகி்கெட்டின் சிறந்த கேப்டன் என்பதை ஏற்கனவே காண்பித்து விட்டார்.
- ஆகவே, ஒருநாள் கிரிக்கெட்டிலும் எந்த மாறுபாடும் இருக்காது.
இந்திய ஒருநாள் அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஆதரித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச்.
சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-
சுப்மன் கில் டி20 மற்றும் டெஸ்ட் கிரகி்கெட்டின் சிறந்த கேப்டன் என்பதை ஏற்கனவே காண்பித்து விட்டார். ஆகவே, ஒருநாள் கிரிக்கெட்டிலும் எந்த மாறுபாடும் இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான தொடர் மிகச் சிறந்த தொடராக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவான் என நினைக்கிறேன். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-1 எனக் கைப்பற்றும். இருந்தாலும் இதில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இந்தியா சிறந்த அணி. இந்த தொடரை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்றார்.
- ஜியோ ரூ.209 திட்டம் 22 நாட்கள் சேவை செல்லுபடியாகும், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது.
- ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள்.
வோடபோன் ஐடியா (Vi) அதன் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றான ரூ.249 திட்டத்தை நீக்கியுள்ளது. ரூ.249 திட்டம் இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. ரூ.249 திட்டம் முன்பு 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் வந்தது. இந்தத் திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உடன் வருகிறது.
பிரபல ரீசார்ஜ் திட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், வோடபோன் ஐடியா இன்னும் ரூ.239 திட்டத்தை வழங்குகிறது, இது இன்னும் ஒரு நல்ல சலுகையாகும். ரூ.239 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்து. இத்துடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது.
1.5 ஜிபி அல்லது அதற்கும் மேற்பட்ட தினசரி டேட்டாவை வழங்கும் அதிக விலை திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய பயனர்களை தூண்டுவதற்காக வோடபோன் ஐடியா (Vi) இந்த திட்டத்தை நீக்கியிருக்கலாம். இதற்கு பிறகு, மலிவு விலை வரம்பை (ரூ.300க்குக் கீழ்) பார்க்கும்போது, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை 1 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை பெரும்பாலும் நீக்கியுள்ளன. ஜியோ இன்னும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.209 திட்டத்தை வழங்குகிறது.
ஜியோ ரூ.209 திட்டம் 22 நாட்கள் சேவை செல்லுபடியாகும், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள். நிர்ணயிக்கப்பட்ட டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.
மலிவு விலை பேக்குகள் பிரிவின் கீழ் ஜியோ வழங்கும் மேலும் இரண்டு திட்டங்கள் உள்ளன, அவை ரூ.189 மற்றும் ரூ.799 விலையில் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் கால்ஸ் வழங்குகின்றன. ஆனால் ரூ.189 திட்டத்துடன், பயனர்கள் 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ரூ.799 திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. மேலும் இது 84 நாட்கள் சேவை செல்லுபடியை வழங்குகிறது.
- தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்து ரையாடுகிறார்.
- பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கல்வி, சமூக நீதி உள்ளிட்ட 10 உரிமைகளை வலியுறுத்தி 'உரிமை மீட்க, தலைமை காக்க' என்ற தலைப்பில் நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் தனது பிரசார நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை காலையில் நெல்லைக்கு வரும் அன்பு மணி ராமதாஸ் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அன்புமணி ராமதாஸ் மாலையில் பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் வரும்போது அவரை வரவேற்கும் விதமாக அரசு அருங்காட்சியகம் அருகே உள்ள சவேரியர் ஆலயத்தில் இருந்து தெற்கு பஜாரில் லூர்து நாதன் சிலை வரையிலும் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு நெல்லை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை யில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கரூர் சம்பவத்தின் எதிரொலியாக அன்புமணி ராமதாஸ் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதே நேரம் பொதுக்கூட்டத்தை பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
- ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
- ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் வருகிற 19-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் 25-ந்தேதி களில் நடக்கிறது.
ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றாலும் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார். டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2027-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வு குழு இந்த முடிவை மேற்கொண்டு உள்ளது. அதன் முதல்கட்ட பணியாகத்தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே ரோகித் விளையாடி வரும் நிலையில்,
அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்நிலையில், ரோகித் சர்மாவின் பழைய டுவீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு 2012 ஆம் ஆண்டு ரோகித் தனது எக்ஸ் பதிவில், "45 எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்தாமல் 77 எண் கொண்டஜெர்சியை அணிந்து விளையாட போவதாக ரோகித்" தெரிவித்திருந்தார்.
அதன்படி சில காலத்திற்கு 77 ஜெர்சியை அணிந்து ரோகித் விளையாடினார். ஆனால் பின்னர் மீண்டும் 45 எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடிய ரோகித் தற்போது வரை அந்த ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார்.
தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்ட கில் 77 எண் கொண்ட ஜெர்சியில் விளையாடி வருகிறார். அவ்வகையில் தனக்கு அடுத்து யார் கேப்டனாக ஆகா போகிறார் என்பதை ரோகித் முன்னரே கணித்து விட்டார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.






