என் மலர்
நீங்கள் தேடியது "கட்டாய கல்வி உரிமைச்சட்டம்"
- மத்திய அரசு நிதி வழங்கியதால் தனியார் பள்ளியில் 25 சதவீத சேர்க்கைக்கு அனுமதி.
- இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
இலவச கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை இலவசமாக படிக்க வழி வகை செய்யும் மத்திய அரசின் திட்டத்தில் தமிழகத்தில் 1 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் சேர்க்கப்படுகிறார்கள்.
தற்போது மத்திய அரசு நிதி வழங்காததால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் இந்த வருடம் இலவச கல்வி திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியவில்லை.
இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கியதால் மாணவர் சேர்க்கையை அரசு தொடங்கியுள்ளது. காலதாமதமாக தொடங்குவதால் மாணவர்கள் ஏற்கனவே பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் புதிதாக குழந்தைகளை சேர்க்க வாய்ப்பு இல்லை.
தற்போது தனியார் பள்ளிகளில் படித்து வரும் குழந்தைகளை இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கனவே பெறப்பட்ட கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை தொடங்கியது. அனைத்து மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அவர்களுக்கு குழந்தைகளை இலவச கல்வி திட்டத்தில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கக்கூடிய எல்.கே.ஜி., யு.கே.ஜி., 1-ம் வகுப்பு குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பணத்தை திருப்பி கொடுப்பது சிரமம். காலாண்டு தேர்வு முடிந்துவிட்ட நிலையில் கட்டணத்தை திருப்பி கொடுத்தால் தனியார் பள்ளிகளுக்கு நஷ்டம் பெருமளவில் ஏற்படும்.
காலதாமதத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் எப்படி பொறுப் பேற்க முடியும் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக்கு லேசன் பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தற்போது இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- 2021–2022 மற்றும் 2022–2023 கல்வியாண்டுகளுக்கான ஒன்றிய அரசின் 60% பங்களிப்பான ரூ.342.69 கோடி இதுவரை வழங்கப்படவில்லை.
- ஒட்டுமொத்த செலவினங்களையும் தமிழக அரசே செய்துள்ளதாக தமிழக அரசு வாதம்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டிற்கு மாநில அரசு உடனே நிதியளிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிதி வழங்குவதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சம பங்கினைக் கொண்டுள்ளன. ஆனால், இந்த செலவினங்களுக்கு மாநில அரசாங்கமே பிரதான பங்கினை வகிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தவறானது என வாதிட்டார்.
மேலும், 2025–2026 கல்வியாண்டிற்கான முழு நிதி செலவையும் மாநில அரசே அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஒன்றிய அரசும் இந்த செலவுகளுக்கு பங்களிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட வில்சன், 2021–2022 மற்றும் 2022–2023 கல்வியாண்டுகளுக்கான ஒன்றிய அரசின் 60% பங்களிப்பான ரூ.342.69 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அந்த கல்வியாண்டுகளுக்கான ஒட்டுமொத்த செலவினங்களையும் தமிழக அரசே செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வில்சின் வாதங்களை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மனுவின் மீது மத்தயி அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர்:.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப் பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட் டத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை கடந்த மாதம் 20-ந் தேதி முதல் கடந்த 25-ந்தேதி வரை இணையதளம் மூலமாக 6 ஆயிரத்து 995 விண்ண ப்பங் கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண் ணப்பங்கள் பெறப்பட்டுள்ள பள்ளிகளில் நாளை 30ந் தேதி குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு மையம் இல்லாத பள்ளிகளில் காலை 8.30 மணிக்கும், பொதுத்தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் மதியம் 2.30 மணிக்கும் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் நடைபெறும்.
இணையதளத்தில் விண்ணப்பித்த விவரம் மற்றும் அனைத்து சான்றுகளை பெற்றோர் கொண்டு வந்து குலுக்கலில் பங்கேற்கலாம். ஆதரவற்றோர், எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும். பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும். விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் நேரடியாக சேர்க்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.






