என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
- அ.தி.மு.க.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
சொந்த நலனுக்காக அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி விட்டார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்த நிலையில் அவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* அ.ம.மு.க. காற்றில் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து கொண்டிருக்கிறது.
* கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
* அ.ம.மு.க. கப்பலில் ஓட்டை விழுந்து இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் மூழ்கும் என்று தெரிந்துதான் நிர்வாகிகள் விலகுகின்றனர்.
* டி.டி.வி.யிடம் இருந்து தப்பித்து பிழைத்தால் போதும் என்று அ.ம.மு.க. நிர்வாகிகள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
* டி.டி.வி.தினகரன் 100 சதவீதம் விரக்தியில் பேசுகிறார்.
* அ.ம.மு.க. தொண்டர் பெயர்களை வெளியிட்டால் அ.தி.மு.க. பலவீனமாக உள்ளதா? பலமாக உள்ளதா? என டி.டி.வி. புரிந்துகொள்வார்.
* அ.தி.மு.க.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அது குறித்து டி.டி.வி. கவலைப்பட வேண்டாம் என்று கூறி உள்ளார்.
- கல்வியில் சமத்துவத்திற்காக புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது என அண்ணாமலை தெரிவித்தார்.
- மத்திய அரசன் 2025 பொருளாதார ஆய்வறிக்கை கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக தமிழ்நாட்டைப் பாராட்டியுள்ளது.
இந்தி திணிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட எக்ஸ் பதிவு தேசிய அளவில் பேசுபொருளானது.
மும்மொழி கொள்கை குறித்து மு.க.ஸ்டாலின் நேற்று பதிவிட்ட எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கற்க வாய்ப்பு மறுக்கிறீர்கள்? என்று ஒருதலைப்பட்சமான கொள்கைகளை பின்பற்றுபவர்கள் கேட்கிறார்கள். சரி, வடக்கில் எந்த மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறது என்பதை அவர்கள் ஏன் முதலில் கூறட்டும்.அவர்கள் அங்கு இரண்டு மொழிகளை முறையாகக் கற்றுக் கொடுத்திருந்தால், நாம் மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?" என்று பதிவிட்டிருந்தார்.
அதை பதிவை பகிர்ந்த பகிர்ந்த அண்ணாமலை, "மு.க.ஸ்டாலின் அவர்களே, கல்வியில் சமத்துவத்திற்காக புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.
தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கு வேறு தரத்தை அனுமதிக்கும் அதே வேளையில், எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது மட்டுமே நீங்கள் என்றென்றும் திணிக்க விரும்பும் கல்வி முறை ஒருதலைபட்சமாக உள்ளது. உங்கள் வசதிக்கேற்ப எங்கள் கேள்வியை நீங்கள் குறைத்துள்ளீர்கள் என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
"உங்கள் குடும்பத்தினரும் உங்கள் அமைச்சர்களும் நடத்தும் தனியார்ப் பள்ளிகள் உட்பட தனியார் சிபிஎஸ்இ/மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் மொழியைக் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில், எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் மூன்றாம் மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?" என்பதே எங்கள் கேள்வி.
வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நீங்கள் குறிப்பிடுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு எவ்வளவு ஆங்கிலப் புலமை இருக்கிறது?
மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்கள் பகுதிநேர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மறுப்புடன் வாழ்ந்து, எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தி வருவதால், ஒருவரின் மொழிப் புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கு முன், எங்கள் III, V, மற்றும் VIII வகுப்பு மாணவர்களின் தமிழ் மொழிப் புலமை குறித்த சமீபத்திய ASER கிராமப்புற 2024 அறிக்கையைப் படிக்க நேரம் ஒதுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மு.க. ஸ்டாலின் அவர்களே ஒருவரின் மொழிப் புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கு முன், 3, 5, மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் எங்கள் மாணவர்களின் தமிழ் மொழித் திறன் குறித்த சமீபத்திய ASER கிராமப்புற 2024 அறிக்கையைப் படிக்க நேரம் ஒதுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பகுதி நேரப் பள்ளிக் கல்வி அமைச்சர், நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பணயம் வைக்கிறார்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் பதிவை பகிர்ந்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவில், "பாஜக எவ்வாறு தரவுகளை கையாளுகிறது என்பதை உலகம் அறியும் - டாக்டர் பரகலா பிரபாகர் அதை The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis என்ற புத்தகத்தில் அம்பலப்படுத்தினார். பாஜக தனது பிரச்சாரத்திற்கு ஏற்றவாறு புள்ளிவிவரங்களை தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டி, எண்களைத் திரிகிறது.
உங்கள் ASER தரவு? அது எப்படி சூழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும், அதனால்தான் கல்விக் கொள்கைகளின் உண்மையான தாக்கம் குறித்து நாங்கள் எங்கள் சொந்த கணக்கெடுப்பை நடத்துகிறோம்.
உங்கள் 2025 பொருளாதார ஆய்வறிக்கை கூட, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்ற மைல்கல் திட்டங்கள் மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக தமிழ்நாட்டைப் பாராட்டியுள்ளது. எழுத்தறிவில் சிரமப்படும் பாஜக ஆளும் மாநிலங்களைப் போலல்லாமல், நாங்கள் எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்கிறோம்.
தமிழ்நாட்டு மாணவர்கள் மீது அக்கறை இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள் - அப்படியானால், உங்கள் அரசாங்கம் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.2,152 கோடியை ஏன் நிறுத்தி வைத்துள்ளது? உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், எங்களுக்கு உபதேசம் செய்வதற்குப் பதிலாக, இந்த நிதியை விடுவிக்குமாறு உங்கள் மத்திய அரசிடம் சொல்லுங்கள்.
நீங்கள் நியாயம் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (KVs) ஜெர்மன் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளை நீக்கிவிட்டு, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் தொடர்ந்து திணித்து, மாணவர்களுக்கு உலக அறிவை தடுத்து, பாஜகவின் பிரிவினைவாத சித்தாந்த அஜெண்டாவிற்கு முன்னிறுத்துகின்றன
நீங்கள் உண்மையிலேயே மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்றால், எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பது பற்றிய தரவை எங்களுக்குத் தரவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று பதிவிட்டிருந்தார்.
- அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
- மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம்.
மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ. 2400 கோடி நிதியை அளிக்கும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்தார். இவரது கருத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பூதாகாரமாக வெடித்துள்ளது. மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாடு பா.ஜ.க. மட்டும் மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு இல்லை என்றும் மாணவர்கள் விரும்பிய மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என்றும் தொடர்ச்சியாக கூறி வருகிறது. மேலும், தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் இந்தி கற்பதை தி.மு.க. திட்டமிட்டு தடுப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கரண் தப்பார் மேற்கொண்ட நேர்காணலில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். அவரது கேள்விகளுக்கு அதிரடி பதில் அளித்ததோடு, பதில் கேள்விகளையும் அடுக்கினார்.
நேர்காணலில் மும்மொழிக் கொள்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த பி.டி.ஆர். "மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் ரூ. 2400 கோடி நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் கூறுவது லஞ்சம் கொடுத்தாதால் தான் தொழிலை நடத்த விடுவேன் என ரவுடி துப்பாக்கியை எடுத்து எனது நெற்றி பொட்டில் வைத்து மிரட்டி கேட்பது போல இருக்கிறது," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எப்பொழுதும் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை குறிப்பாக இந்தியை எதிர்ப்பதாக பேசி வருகின்றீர்கள். கல்வி மிக நுட்பமானது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தி குறிப்பாக எங்களுக்கு தேவையில்லை என்பதை நீதிக்கட்சி காலத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். ஏற்கனவே இந்தியை திணிக்க நினைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாடறியும்."
"எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்காது. ஏற்கனவே இந்தி தான் தேசிய மொழி என்று கூறி முப்பது மொழிகளை அழித்து விட்டார்கள். எங்கள் குழந்தைகளுக்கு எந்த மொழி தேவையோ அதனை கற்று கொள்ளட்டும். நாங்கள் தடுக்க மாட்டோம். இந்தி கற்றுத் தரும் பள்ளிகளை நாங்கள் அழிக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு தமிழ் மொழியை தான் கற்றுக் கொடுக்கும். கூடுதலாக ஆங்கிலம் மட்டும் தான் கற்பிக்கப்படும்."
"நான் ஒரு தொழிலை ஆரம்பிக்கிறேன். அந்த தொழிலுக்கு பாதுகாப்பு தர வேண்டிய நபர் ஒரு ரவுடி போல துப்பாக்கி எடுத்துக்கொண்டு எனது நெற்றியில் வைத்து மாமுல் தர வேண்டும். அப்போதுதான் தொழிலை நடத்த முடியும் என சட்ட விரோதமாக கேட்கிறார். அவர் மிரட்டுவதற்காக நான் மாமூல் தர வேண்டுமா? நியாயப்படி நீங்கள் துப்பாக்கி எடுத்து என் தலையில் வைத்து மிரட்டுபவரிடம் தான் பேச வேண்டும். என்னிடம் பேசக்கூடாது" என்றார்.
- இத்தனை ஆண்டுகளில் வட இந்தியாவில் எத்தனை உத்தர பாரத தமிழ் பிரசார சபைகள் நிறுவப்பட்டுள்ளன?
- பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் 3 அல்லது 30 மொழிகளைக் கற்பிக்க விரும்பினால் அதை செய்து கொள்ளுங்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்தியர்கள் இந்தி மொழியைக் கற்க வைப்பதற்காக தட்சிண் பாரத இந்தி பிரசார சபை அமைக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் வட இந்தியாவில் எத்தனை உத்தர பாரத தமிழ் பிரசார சபைகள் நிறுவப்பட்டுள்ளன?
உண்மை என்னவென்றால், வட இந்தியர்கள் தமிழையோ அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழியையோ பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கோரவில்லை. எங்கள் மீது இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்றுதான் கேட்கிறோம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் 3 அல்லது 30 மொழிகளைக் கற்பிக்க விரும்பினால் அதை செய்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டை தனியாக விட்டுவிடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தெலுங்கில் ராபின்வுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர்.
- இந்த படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் ராபின்வுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
வார்னர், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது மைதானத்தில் வைத்தே புஷ்பா பட ஸ்டைலை செய்து காட்டி இந்திய ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிலையில் டேவிட் வார்னர் தெலுங்கு திரைபடத்தில் நடிக்க உள்ளதாக நீண்டகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தன.
அதன்படி டேவிட் வார்னர் நடித்துள்ள திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கிரிக்கெட் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த வார்னர், தற்போது திரைபடங்களில் களமிறங்கி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளார்.
- சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
- தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வயது மூப்பின் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
அங்கு தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். இதனை தொடர்ந்து தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வருகை தந்துள்ளார்.
- ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்தவர் அய்யா வைகுண்டர்.
- "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!"
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள்!
"எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!" என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- சீனாவில் 627 மில்லியன் (அதாவது 62 கோடி பேர்) அதிக எடை அல்லது பருமனான மக்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களிடையே காணப்படும் கவலை உடல் எடை குறித்துதான். நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் உணவு முறை, தூக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க நிறைய 'டயட்' முறைகள் இருந்தாலும் எடை குறைந்த பாடில்லை என்பது பெரும்பாலானவர்களின் கவலையாக உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 45 கோடி பேர் உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது தான் இதற்கு முக்கிய காரணம்.

ஆய்வின்படி, உலகளவில் அதிக எடை கொண்டவர்களை அதிகம் கொண்ட நாடுகளாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை தொடரும். 2050 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்ட பருமனான அல்லது அதிக எடை கொண்டவர்கள் மக்கள்தொகை 450 மில்லியன் (அதாவது 45 கோடி) ஆக இருக்கலாம்.
சீனாவில் 627 மில்லியன் (அதாவது 62 கோடி) அதிக எடை அல்லது பருமனான மக்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்த எண்ணிக்கை 214 மில்லியனை (21 கோடி) எட்டும் என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
- ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகி விட்டன.
- தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம்.
சென்னை:
முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
என் பிறந்தநாளில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், பல்வேறு அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அன்பான வாழ்த்துகளைப் பதிவிட்டிருந்தனர். அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
பா.ஜ.க. நிர்வாகியான அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் எனக்கு 'மும்மொழி'யில் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி என்னுடைய பிறந்த நாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், சகோதரி மும்மொழியில் வாழ்த்தி தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய 'பண்பையும்' காட்டியிருக்கிறார். தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் 'இந்தி' இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு.
தமிழ்-ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். எனக்கு தெலுங்கு தெரியாது. நான் படித்ததும் இல்லை. தெலுங்கானா மாநில கவர்னராக இருந்த சகோதரி தமிழிசை தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து அதனைத் தெரிந்து கொள்ளவில்லை. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார்.
இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கானப் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள தமிழிசைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரி தமிழிசை தெலுங்கு எழுத்துகளில் வாழ்த்துச் செய்தியை எழுதக்கூட அவசியமில்லை என்கிற அளவிற்கு அவருடைய பதிவிலேயே இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிய முடிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னேற்றமும், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எழுத்தாகவும் குரலாகவும் மாற்றக்கூடிய வாய்ப்பும் எளிய முறையில் எல்லாரும் பயன்படுத்தும் வகையிலான மென்பொருள்கள் கைபேசிகளிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
கூகுல் மொழிபெயர்ப்பு போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக் கடப்பதற்கு உதவுகின்றன. ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகி விட்டன. ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும். அறிவியலைப் புறக்கணிக்கும் கட்சியான பா.ஜ.க.வும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பைக் கட்டாயமாக்குகிறார்கள்.
ஒருவர் விரும்புகிற எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகளல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதைத்தான் அன்று முதல் இன்று வரை தெளிவாகச் சொல்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஏன் புரியவில்லை? புரியாமல் இல்லை. புரியாதது போல பாசாங்கு செய்கிறார்கள்.
உருது மொழியும், அண்டை மாநிலங்களில் பேசப்படும் தெலுங்கு, கன்னட மொழிகளும் நம்முடைய கல்விக் கொள்கையின்படி இங்குள்ள சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. இந்த மொழிகள் எதுவும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியதல்ல.
ஆனால், பா.ஜ.க.வின் நோக்கமே தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்பது தான். அதனால்தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.
தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுத்தரப்படுகிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். பரம்பரை பரம்பரையாகவே கல்வி வியாபாரம் செய்யும் பா.ஜ.க.குடும்பத்தினர் பற்றிய பட்டியலை வெளியிட்டு பதிலுக்குப் பதில் பேசுவது நமது நோக்கமல்ல.
உரிய அனுமதியுடன் எந்தக் கட்சியை சார்ந்தவர்களும், எந்தவொரு கட்சியையும் சாராதவர்களும் பள்ளிக்கூடங்களை நடத்த முடியும். தி.மு.க.வினரில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துகிறவர்களும், ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துகிறவர்களும் உரிய அனுமதியுடன்தான் நடத்துகிறார்கள்.
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை தானே தவிர, தி.மு.க.வினரோ வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள்.
தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. இந்தி மொழி என்பது கட்டாயமும் இல்லை.
தென்னிந்தியர்கள் இந்தியைக் கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டதுபோல, வட இந்தியாவில் தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ் பிரச்சார சபாவையோ, திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 3 இல்லை 30 மொழி கூட கற்றுத் தாருங்கள். தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள். நாங்கள் கேட்பதெல்லாம் இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்பதுதான். வட இந்தியர்கள் தமிழோ அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழியோ கற்க நாங்கள் வலியுறுத்தியதே இல்லை.
தமிழ்நாட்டில் தற்போது ஓடும் ரெயில்களுக்கு கூட இந்தி-சமஸ்கிருதப் பெயர்களை வைப்பவர்கள் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- அசாம் முன்னாள் முதல்வரின் மகள், தனது கார் ஓட்டுனரை செருப்பால் அடிக்கும் வீடியோ வைரல்
- அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவின் மகள் காஷ்யப், தனது கார் ஓட்டுநரை செருப்பால் வீடியோ வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், கார் ஓட்டுநர் மண்டியிட்டு அமர்ந்துள்ளார். அப்போது அவரை காஷ்யப், கடுமையாக திட்டி செருப்பால் அடிக்கிறார்.
அசாம் மாநிலத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வரின் மகள், "எனது ஓட்டுநர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை பற்றி தவறாக பேசி வந்தான். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. இப்போது குடித்துவிட்டு என் வீடு கதவை தட்டினான்" என்று தெரிவித்தார்.
பிரபுல்ல குமார் மஹந்தா, 1985 முதல் 1990 மற்றும் 1996 முதல் 2001 வரையில் 2 முறை அசாம் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.
- ஆதாரமற்ற கருத்துக்கள் அடிப்படை உண்மைக்கு முரணாக உள்ளன.
காஷ்மீர் மற்றும் மணிப்பூர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கடுமையாக பதிலடி கொடுத்தது. மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தொடர்ந்து ஆரோக்கியத்துடனும், துடிப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 58வது கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அரிண்டம் பாக்சி, "இந்தியாவின் பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தொடர்ந்து ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் உள்ளதை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆதாரமற்ற கருத்துக்கள் அடிப்படை உண்மைக்கு முரணாக உள்ளன."
"இந்திய மக்கள் நம்மைப் பற்றிய இத்தகைய தவறான கருத்துகள் மற்றும் எண்ணங்கள் தவறு என்று பலமுறை நிரூபித்துள்ளனர். மேலும், இந்தியாவையும், நமது பன்முகத்தன்மை மற்றும் நாகரீக நெறிமுறைகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் வலியுறுத்துகிறோம்," என்று தெரிவித்தார்.
முன்னதாக மணிப்பூர் மற்றும் காஷ்மீர் நிலவரம் குறித்து பேசிய துர்க், வன்முறை மற்றும் மக்கள் இடம்பெயரும் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான முயற்சிகள் பேச்சுவார்த்தை, அமைதியை நிலைநாட்டுவது மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
- புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது.
- உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் 12 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆற்றின் மறுகரையில் இருந்து புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர் 10 பேரை காப்பாற்றினர். 2 பேர் காணாமல் போயினர்.
தேடுதலுக்கு பிறகு ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.






