search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Godavari river"

    தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை என்று மத்திய மந்திரி நிதின்கட்கரி டுவிட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கடந்த ஜனவரி மாதம் அமராவதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்கரி, பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது, ‘ஆண்டுதோறும் கோதாவரி நதியில் இருந்து 1100 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே தண்ணீருக்காக மோதல் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வளவு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதற்கெல்லாம் கோதாவரி- கிருஷ்ணா-பென்னார்- காவிரி நதிகளை இணைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாராக இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி செலவாகும். இதற்காக உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து நிதி பெற திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 4 தென்மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்’ என்று கூறியிருந்தார்.

    காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கை விடுத்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள நிலையில் நிதின்கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக நிதின்கட்கரிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தனது டுவிட்டர் பக்கத்தில், இது தான் பா.ஜ.க. என்றும், நீங்கள்(தமிழக மக்கள்) நிராகரித்தாலும் பா.ஜ.க. தனது கடமையை செய்யும் என்றும் கூறி உள்ளது.



    மேலும், நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘நன்றி சார்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோன்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மத்திய மந்திரி நிதின்கட்கரியின் பேட்டியை பார்த்தேன். நெறியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு நிதின்கட்கரி அளித்த பதில் எனது கண்களில் இருந்து கண்ணீரை பெருக்கெடுக்க செய்தது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில் உங்களது பொதுவான திட்டம் என்ன என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு நிதின்கட்கரி, முதல்முறை நெடுஞ்சாலைத்துறை பொறுப்பில் இருந்த போது ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினேன். 2-வது முறை பொறுப்பேற்கும்போது நீர் வழி திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவோம். தமிழகம் தொடர்ந்து தண்ணீர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் வகையில் கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது கடமையும், முதல் வேலையும் ஆகும் என்று பதில் அளித்தார்.

    என்ன அற்புதமான மனிதர் இவர். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் வாக்களித்த போதும் தமிழ்நாட்டின் மேம்பாட்டை தான் முதல் திட்டமாக வைத்திருக்கிறார். இந்த கட்சியைத் தான் தமிழ்நாடு அங்கீகரிக்க தவறிவிட்டது’ என்று கூறி உள்ளார்.
    ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். #BoatCapsize #GodavariRiver
    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று முன்தினம் மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உள்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த மழையுடன் காற்று வீசியதால் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் படகில் பயணம் செய்த சிலர் நீந்தி கரை திரும்பினர். 15-க்கு மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதல் கட்டமாக இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்றும், 10 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    மீட்புப் பணிகளை பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்நிலையில், கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேய மிஸ்ரா கூறுகையில், இன்று நடந்த தேடுதல் வேட்டையில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து, ஆற்றில் படகு கவிழ்ந்து பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 4 குழந்தைகள், 11 பெண்களும் அடங்குவர். மேலும் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது என்றார். #BoatCapsize #GodavariRiver
    ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #BoatCapsize #GodavariRiver #AndhraPradesh

    விஜயவாடா:

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று முன்தினம் மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியுள்ளது. இதனால் படகு ஆற்றில் கவிழ்ந்தது.

    படகில் பயணித்த சிலர் பேர் நீந்தி கரை திரும்பிய நிலையில், பிறரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆறு பேரின் உடலை மீட்புப்படையினர் மீட்டனர். அந்த படகை மீட்புப்படையினர் ஆற்றில் இருந்து கிரேன் மூலம் வெளியே எடுத்தனர். அதில் 8 பேரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் 10 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



    அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப்பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். உடனடியாக ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். #BoatCapsize #GodavariRiver #AndhraPradesh
    ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேர் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #BoatCapsize #GodavariRiver #AndhraPradesh

    விஜயவாடா:

    ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியுள்ளது. இதனால் படகு ஆற்றில் கவிழ்ந்தது.

    படகில் பயணித்த சிலர் பேர் நீந்தி கரை திரும்பிய நிலையில், பிறரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காணாமல் போனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தினார். விஜயவாடாவிலிருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.



    இந்நிலையில், மற்ற 23 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BoatCapsize #GodavariRiver #AndhraPradesh
    ×