

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வழியாக பாயும் கோதாவரி ஆற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி வினாடிக்கு 5.13 லட்சம் கனஅடி தண்ணீர் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் அருகாமையில் கண்டி போச்சம்மா ஆலயத்தில் இருந்து பாப்பிகொன்டலு என்ற சுற்றுலாத்தலத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் கோதாவரி ஆற்றின் வழியாக 60-க்கும் அதிகமானவர்கள் ஆந்திர மாநில அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகில் இன்று சென்று கொண்டிருந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 11 பேரின்உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.