கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 2 பேர் உயிரிழப்பு

புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது.உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 2 பேர் உயிரிழப்பு
Published on

ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் 12 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆற்றின் மறுகரையில் இருந்து புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர் 10 பேரை காப்பாற்றினர். 2 பேர் காணாமல் போயினர்.

தேடுதலுக்கு பிறகு ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com