என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
- ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் திரையரங்கில் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை புதுப்பொலிவுடன் கடந்த 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு அன்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இசைஞானி இளையராஜாவின் அதிரடியான இசையில், விஜயகாந்துடன் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், லிவிங்ஸ்டன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.
தற்போது, பலரும் இப்படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் திரையரங்கில் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
அப்போது, இப்படத்தில் இடப்பெறும் "ஆட்டமா தேரோட்டமா" பாடலுக்கு, மன்சூர் அலிகான் மற்றும் பேரரசு நடனமாடி வைப் ஆனார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், 'கேப்டன் பிரபாகரன்' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், பேரரசு உள்ளிட்ட பிரபலங்கள் கேக் வெட்டி விஜயகாந்த் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
- நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும்.
- கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்.
பிரதமர் மோடி, அவரின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ளார். அங்கு பல்வெறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மோடிக்கு (தனக்கு) விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்களின் நலன்தான் மிக முக்கியமானவை. அமெரிக்காவின் மிரட்டலால், நமக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால், அனைத்தையும் நாம் தாங்கிக் கொள்வோம்.
காங்கிரஸ் 60 முதல் 65 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தது. அப்போது நாடு மற்ற நாடுகளை சார்ந்திருந்தது. இது ஊழலை இறக்குமதி செய்யவதற்காகத்தான்.
நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்.
லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ரஷியாவின் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தாவிடில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்டும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
- ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்க நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பங்கேற்க உள்ளார்.
- "பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம்" என்றார்.
சென்னை மயிலாப்பூரில் நாளை நடைபெறும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம், 3.05 லட்சம் மாணவர்கள் பயன் பெறவுள்ளனர்.
இத்தொடக்க விழாவில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக, அவர் இன்று மாலை சென்னை வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பகவந்த் மான் கூறுகையில்," பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம்" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
பஞ்சாப்பில் தற்போது மதிய உணவுத் திட்டம் உள்ளது. காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம்" என்றார்.
- காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது.
- நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன்.
காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் கட்டமைப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் என்ற வகையில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என கட்சி தலைவர்களிடம் பேசும்போது, அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே வலியுறுத்தினார்.
ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சா் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக கார்கே தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டர்.
இது தொடர்பாக கார்கே வெளியிட்டு எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது. லால் பகதூர் சாஸ்திரி, கோவிந்த் வல்லாப் பண்ட், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டு ராவ், அமைச்சர் தரம் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மாவட்ட தலைவர் பதவியை வகித்தவர்கள். நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன்.
கட்சியின் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 சதவீதம் என்ற வகையில் நாம் உயர்த்த வேண்டும். அவர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து, முக்கிய கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்.
பீகாரில், ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி வாக்காளர் அதிகாரம் என்பதன் மூலம் முழு ஆதரவை மக்களிடம் இருந்து பெற்று வருகின்றன. நாட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில், நம்முடைய போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சொல்ல வேண்டும்.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
- கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் அமரன் படத்திற்கு விருது.
- 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் வந்தது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் நடித்து இருந்தனர்.
கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில், கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் 'சிறந்த பிறமொழித் திரைப்படம்' வென்றுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கு கேரள அமைச்சர் வாசவனிடம் விருதை பெற்றுக்கொண்டார்.
- தமிழக முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கை திறந்து வைத்தார்.
- பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.7.50 கோடியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு, பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- Snatch முறையில் 84 கிலோ தூக்கினார்.
- clean and jerk முறையில் 109 கிலோ தூக்கினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த்த சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் மீரா பாய் மொத்தமாக 193 கிலோ பளு தூக்கி தங்கம் வென்றார். ஸ்னட்ச் முறையில் 84 கிலோவும், க்ளீன் மற்றும் ஜெர்க் முறையில் 109 கிலோவும் தூக்கி காமன்வெல்த் சாம்பியன்ஷிப்ஸ் சாதனையும் படைத்தார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் ஆவார். மலேசிய வீராங்கனை (161 கிலோ) வெள்ளி்ப் பதக்கமும், வேல்ஸ் வீராங்கனை (150 கிலோ) வெண்கல பதக்கமும் வென்றனர். 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருநது, 48 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.
இவர் உலக சாம்பியன்ஷிப் டைட்டில் மற்றும் இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கமும் வென்றுள்ளார்.
- திமுக-வில் உழைப்பவர்களுக்கு மரியதை கிடைக்காது.
- அதிமுக-வால் அடையாளம் காட்டி, அங்கு சென்றவர்களுக்குதான் மரியாதை கிடைக்கிறது.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பேரணியின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக என்பது ஜனநாயகம் உள்ள ஒரு கட்சி. திமுக-வை பொறுத்தவரையில் அது ஒரு குடும்ப கட்சியாக மாறிவிட்டது. திமுக-வில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என்று ஸ்டாலின் பேசுகிறார். திமுக-வில் உழைப்பவர்களுக்கு மரியதை கிடைக்காது. அதிமுக-வால் அடையாளம் காட்டி, அங்கு சென்றவர்களுக்குதான் மரியாதை கிடைக்கிறது.
இங்கிருந்து செந்தில் பாலாஜி போனார். அவருக்கு நல்ல இலாகா. இங்கிருந்து ரகுபதி போனார். அவருக்கு நல்ல இலாகா. இப்படி தமிழக அமைச்சரவையை பார்த்தீர்கள் என்றால் 8 பேர் அதிமுக-வில் இருந்து போனவர்கள். திமுக-வில் ஆளில்லை. 8 பேர் எட்டப்பனாக மாறி திமுகவுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்று ரகுபதி நச்சு வார்த்தையை கக்கி கொண்டிருக்கிறார். அதிமுக என்ற ஒரு கட்சி இருந்ததனாலேயே நாட்டு மக்கள் ரகுதிபதி என்பவரை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். துரோகிகளை பற்றி கவலைப்பட தேவையில்லை. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது.
- வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது.
மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது.
விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் சிங் இன் தி ரெயின். வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.
மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை.
இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் நடிக்க மாட்டார்களா என்று ஏக்கம் ரசிகர்களுக்கு இப்போதும் உண்டு.
இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்தை சாம் ரொட்ரிகஸ் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்நிலையில் படத்தின் பூஜை விழா இன்று துபாயில் நடைப்பெற்றது.
- டெஸ்ட் போட்டிக்கு தயார் படுத்துதல் முக்கியமானது.
- முதல்தர போட்டிகளுக்கு தயார் படுத்திக் கொள்வது, டெஸ்ட் போட்டியில் தாக்குப்பிடிக்க உதவியாக இருக்கும்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா மூன்று விடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். ஏற்கனவே டி20-யில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். 38 வயதான ரோகித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் 4301 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.58 ஆகும்.
ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் நீங்கள் ஐந்து நாட்கள் விளையாட வேண்டும். மனதளவில் இது பெரிய சவாலாகும். அது நம்மை சோர்வடையச் செய்யும். ஆனால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் முதல்தர கிரிக்கெட் விளையாடி அதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்தவர்கள்.
மும்பை கிரிக்கெட், கிளப் கிரிக்கெட் போன்ற போட்டி அளவிலான கிரிக்கெட்டில் விளையாட தொடங்கும்போது அது இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் கொண்டதாக இருக்கும். மிகவும் இளம் வயதிலேயே அதற்கு ஏற்றவாறு விளையாடும் வகையில் தயார் படுத்தப்படுவோம். அப்படி தயார்படுத்துதல் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி போன்ற கடுமையான சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது எளிதாக இருக்கும்.
தயார் படுத்தலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இளம் வீரர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆனால், படிப்படியாக மிகப்பெரிய அளவில் கற்றுக் கொள்கிறார்கள். நான் கிரிக்கெட் விளையாட்டை தொடங்கும்போது வேடிக்கை பார்ப்பது. அனுபவிப்பது என்பதாக இருந்தது.
இளையோர் பருவத்தில் தயார் படுத்துதல் குறித்து புரிந்து கொள்வதில்லை. ஆனால், அதற்கு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும்போது, புரிந்து கொள்வார்கள். நமக்கு சரியாக என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு தயார் படுத்துவார்கள்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- Do You Wanna Partner தொடரில் தமன்னா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாலிவுட் நடிகைகள் தமன்னா பாடியா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும், அமேசான் பிரைம் வீடியோவின் புதிய வெப் சீரிஸ் "Do You Wanna Partner" ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெப் தொடர், கரண் ஜோஹர், அதார் பூனாவாலா மற்றும் அபூர்வ மேத்தா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் சோமன் மிஸ்ரா மற்றும் ஆர்சித் குமார் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இந்த சீரிஸ் உலகளாவிய ரீதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது ஒரு ஹிந்தி காமெடி டிராமா, இரு பெண் நண்பர்கள் – ஆண் ஆதிக்கம் செலுத்தும் பீர் தயாரிக்கும் மதுபான துறையில் தங்களுக்கே உரிய ஸ்டார்ட்அப்பை உருவாக்க முயலும் பயணத்தை மையமாகக் கொண்டது.
இத்தொடரை உருவாக்கியவர்கள் கோங்கோபாத்யாய் & நிஷாந்த் நாயக் மற்றும் இயக்கியவர் காலின் டி'குன்ஹா
முக்கிய நடிகர்களானஜாவேத் ஜாஃப்ரி, நகுல் மேத்தா, நீரஜ் கபி, ஷ்வேதா திவாரி, சுஃபி மோட்டிவாலா, ரன்விஜய் சிங்கா இதில் நடித்துள்ளனர்.
இரண்டு பெண் நண்பிகளின் சுவாரஸ்யமான தொழில் பயணத்தை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுடன் கலந்த "Do You Wanna Partner" சீரிஸ், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
- நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை செப்.5ம் தேதி வழங்கப்படும்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதைமுன்னிட்டு, ஆண்டுதோறும் நாட்டின் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதன்படி, நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பிஎஸ் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை செப்.5ம் தேதி வழங்கப்படும்.






