என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நிஞ்ஜா 1100SX என்பது நிஞ்ஜா 1000SX இன் புதுப்பிக்கப்பட்ட மாடலாகும்.
- இது 17-இன்ச் அலாய் வீல்களில் பிரிட்ஜ்ஸ்டோன் பாட்லாக்ஸ் S23 டயர்களை கொண்டிருக்கிறது.
கவாசாகி நிறுவனத்தின் நிஞ்ஜா 1100SX மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் குறிப்பிட்ட காலத்திற்கு ரூ. 1 லட்சம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. நிறுவனம் இந்த தள்ளுபடியை கேஷ்பேக் வவுச்சராக வழங்குகிறது. இது தள்ளுபடிக்கு முன் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையான ரூ. 13.49 லட்சத்தில் பயன்படுத்தி பைக்கை சற்றே குறைந்த விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகை ஸ்டாக் நீடிக்கும் வரை அல்லது செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
நிஞ்ஜா 1100SX தவிர , கவாசாகி இந்தியா வேறு சில மாடல்களுக்கும் தள்ளுபடிகளை வழங்குகிறது. ஒருவேளை புதிய ஜிஎஸ்டி வரம்பு விதிக்கப்படுவதற்கு முன்பு அதிக விற்பனையைப் பெறுவதற்கும் அதன் பெரும்பாலான மாடல்களின் விலைகள் கணிசமாக அதிகரிப்பதற்கும். செப்டம்பர் 22 முதல், 350cc க்கு மேல் உள்ள இரு சக்கர வாகனங்கள் 40 சதவீத GST ஐ ஈர்க்கும், இது முந்தைய 28 சதவீத விகிதத்திலிருந்து அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, KLX 230 மற்றும் நிஞ்ஜா 300 போன்ற சில சிறிய வேரியண்ட்களைத் தவிர, இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் கவாசாகியின் பெரும்பாலான மோட்டார்சைக்கிள்களின் விலை அதிகரிக்கும். உண்மையில், 350cc க்கும் குறைவான பைக்குகள் அவற்றின் மீது விதிக்கப்பட்ட GST விகிதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறையும் என்பதால் விலை குறையும்.
நிஞ்ஜா 1100SX என்பது நிஞ்ஜா 1000SX இன் புதுப்பிக்கப்பட்ட மாடலாகும். இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 1,099 சிசி லிக்விட் கூல்டு, இன்லைன்-4 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 9,000rpm இல் 136bhp பவர் மற்றும் 7,600rpm இல் 113Nm டார்க் உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கவாசாகி நிறுவனம் குயிக் ஷிஃப்டரை ரிப்ரெஷ் செய்துள்ளது. இது தற்போது 1,500-க்கும் குறைந்த rpmஇல் இயங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ட்வின்-டியூப் அலுமினியம் ஃபிரேம் உள்ளது. இது 17-இன்ச் அலாய் வீல்களில் பிரிட்ஜ்ஸ்டோன் பாட்லாக்ஸ் S23 டயர்களை கொண்டிருக்கிறது. அம்சங்களின் பட்டியலில் புளூடூத் இணைப்புடன் கூடிய TFT டிஸ்ப்ளே, பவர் மோடுகள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவை அடங்கும்.
- இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை நாளை எதிர்கொள்கிறது.
- குல்தீப் யாதவுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) இன்று தொடங்கி 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஆங்காங் அணிகள் மோதுகின்றன. நாளை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை எதிர்கொள்கிறது. துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.
டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். இதனால் வீரர்கள் தேர்வு சவாலாக இருக்கும். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வரிசையில் ஆடுவார்.
விக்கெட் கீப்பர் வாய்ப்பில் சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவி வந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இது சஞ்சு சாம்சன் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் குல்தீப் யாதவுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி, தனது புதிய படமான "மிடில் கிளாஸ்"-இன் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநரான கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார்.படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படம் 2022-ல் படப்பிடிப்பைத் தொடங்கியது. ஆரம்பத்தில், இந்தப் படம் KJR Studios மற்றும் கௌஸ்துப் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு: சுதர்ஷன் ஸ்ரீநிவாசன்
எடிட்டிங்: சான் லோகேஷ்
இசை: பிரணவ் முனிராஜ்
திரைப்படம் இந்தாண்டு வெளியாக இருக்கிறது. முனீஷ்காந்த் இந்த ஆண்டு பெருசு, கேங்கர்ஸ், படைத் தலைவன், ஜென்ம நட்சத்திரம், சரண்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமி அகத்தியன், கடைசியாக 2023-ல் இறைவன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
- காணொலி காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
சென்னை:
தி.மு.க. சார்பில் கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள் ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும், 'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்தும் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் காணொலி காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு பிறகும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
- நேபாள தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.
பெரும் அளவிலான இளைஞர்கள் காத்மாண்டுவில் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 20 பேர் ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் இதற்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்று தனது ராஜினாமா கடிதத்தைச் பிரதமர் சர்மா ஒலியிடம் சமர்ப்பித்தார்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான அவசர கூட்டமும் நடத்தப்பட்டு சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட சேவைகளை விரைவில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு பிறகும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது
பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமர் சர்மா ஒலி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே சமயம், போராட்டக்காரர்களை நேபாள அரசு கையாண்ட விதம் அதிருப்தி அளிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
- ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
- 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதேபோல், 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். காஞ்சிபுரத்தில் இருந்து உதயநிதி இன்று தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வருகிற 13-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தினங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.
- செங்கோட்டையனை பா.ஜ.க.வினர் தற்போதைக்கு சந்திக்க முடியாது.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம், செங்கோட்டையனை இயக்குவது அண்ணாமலையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.
* தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியதைத்தான் கேட்டனர்.
* அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவிற்கு பின்னணியில் இருப்பது தி.மு.க.
* தி.மு.க.வின் தூண்டுதலில்தான் அனைத்து பிரச்சனைகளும் இங்கு நடக்கின்றன.
* செங்கோட்டையனை பா.ஜ.க.வினர் தற்போதைக்கு சந்திக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் டெல்லி செல்கிறார்.
- இது தோராயமாக 24 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் சார்ஜ் செய்ய உதவுகிறது.
- வெளிப்புறத்தில் 942 லைட்-அப் பிக்சல்கள் கொண்ட ஒரு பெரிய ஒளிரும் கிரில் உள்ளது.
மியூனிக் IAA மொபிலிட்டி 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை GLC மின்சார SUVயை மெரிசிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. EQC-யின் வாரிசாக நிலைநிறுத்தப்பட்ட இந்த மாடல், நிறுவனத்தின் முழு-மின்சார MB.EA தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது வடிவமைப்பு மற்றும் பொறியியல் கவனத்தில் மாற்றத்தைக் குறிக்கிறது.
இது இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும். இவை 369bhp பவர் மற்றும் 504Nm டூயல் மோட்டார், ரியர் டிரைவ் GLC300+, மற்றும் 483bhp மற்றும் 808Nm வழங்கும் இரட்டை மோட்டார் GLC400 4MATIC என அழைக்கப்படுகின்றன. இரண்டும் 94kWh பேட்டரியைப் பயன்படுத்துகின்றன மற்றும் 800-வோல்ட் மின் அமைப்பில் இயங்குகின்றன. இது தோராயமாக 24 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் சார்ஜ் செய்ய உதவுகிறது.
அதன் மின்சார இயல்பு இருந்தபோதிலும், புதிய GLC அதன் வம்சாவளிக்கு உண்மையாகவே உள்ளது மற்றும் ICE மாடலை விட சுமார் ஐந்து அங்குல நீளம் கொண்டது. இந்த மின்சார கார் முழு சார்ஜ் செய்தால் 713 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று WLTP-மதிப்பிட்டுள்ளது.
வெளிப்புறத்தில் 942 லைட்-அப் பிக்சல்கள் கொண்ட ஒரு பெரிய ஒளிரும் கிரில் உள்ளது. உள்புறத்தில் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் கொண்டுள்ளது. 39.1-இன்ச் டிஸ்ப்ளே A-பில்லர் முதல் A-பில்லர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட், ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடுகள் மற்றும் பயணிகள் இடைமுகத்தை ஒரு யூனிட்டாக ஒருங்கிணைக்கிறது.
- 2005-ல் பாலியல் குற்றத்திற்காக சோஹன் சிங்கிற்கு ஆயுள் தண்டனை பெற்றார்.
- மேல் முறையீட்டுக்கு பின் சோஹன் சிங்கிற்கு 2017-ல், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
மத்தியபிரதேசத்தில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2005-ல் பாலியல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற சோஹன் சிங்-ன் தண்டனைக்காலம் மேல் முறையீட்டுக்கு பின் 2017-ல், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனால் அவர் 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூனில்தான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.
சோஹன் சிங் 11 ஆண்டுகள் 6 மாதம் 24 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 4 ஆண்டுகள் 7 மாதம் அவர் சிறையில் இருந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருந்த சோஹன் சிங்கிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
அதனை தொடர்ந்து பல மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களி நடித்தார். இவரது அழகு மற்றும் நடிப்பிற்கு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகினர்.
கடைசியாக அவர் லியோ மற்றும் ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளையராஜாவின் தென்ரல் வந்து என்னை தொடும் பாடலை பாடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கிடைக்கும் நேரத்தில் திருப்பி தாக்கும் வேலையை செய்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
- யாரெல்லாம் முகமூடி அணிந்து சென்றார்களோ அவர்களை எல்லாம் கூட்டமாக சேர்ந்து தாக்கின.
காகத்தின் அறிவுத்திறன் 7 வயது சிறுவனின் மூளைக்கு சமமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். 2012-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வின்படி, விஞ்ஞானிகள் இதை தெரிவித்தனர்.
காகங்கள் மனித முகங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அசாத்தியமான நினைவாற்றல் படைத்தவை ஆகும். தனது இனத்திற்கு எதிரான தாக்குதல் நடத்திய மனிதர்களை தங்கள் வாரிசுகளுக்கும், மற்ற காக்கை கூட்டத்திற்கு அடையாளம் காட்டி, கிடைக்கும் நேரத்தில் திருப்பி தாக்கும் வேலையை செய்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள், மனிதன் மீது காக்கைகள் நடத்தும் தாக்குதலை பற்றி தெரிந்து கொள்ள ஒரே மாதிரியான முகமூடி அணிந்த சிலரை வைத்து காகங்களை பிடித்து, வெவ்வேறு இடங்களில் அடைத்து விட்டனர்.

அடைபட்ட இந்த காக்கைகள் ஒரு சில தினங்கள் கழித்து திறந்து விடப்பட்டன. திறந்து விடப்பட்ட காகங்கள், அது பறந்து சென்ற இடங்களில் எல்லாம் யாரெல்லாம் முகமூடி அணிந்து சென்றார்களோ அவர்களை எல்லாம் கூட்டமாக சேர்ந்து தாக்கின.
இதன் மூலம், காக்கைகள் தங்களை துன்புறுத்தும் மனிதர்களை எத்தனை காலம் ஆனாலும் திருப்பி தாக்கும் அளவுக்கு நினைவுத்திறனை கொண்டுள்ளன என்றும் தெரியவந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- குடிபோதையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தல், திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களும், விபத்துகளும் அதிகரித்து விட்டன.
- ஓர் வீட்டில் 5 அறைகளும், ஓர் சமையல் அறையும் இருந்தால் அந்த இல்லத்தை ரெஸ்டோ பாராக மாற்றி விட முடியும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டு வருவதும், அதனால் புதுவையில் போதைக் கலாச்சாரம் பரவி குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கின்றன. கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய புதுவை அரசு, வருவாய் ஈட்டுவதற்காக மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் வணிகத்தை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது.
ஏராளமான வரலாற்றுச் சிறப்புகளையும், கலாச்சாரப் பெருமைகளையும் கொண்ட புதுச்சேரி இப்போது அதற்காக புகழ் பெறாமல், மது மற்றும் கஞ்சா போதைக் கொண்டாட்டங்களுக்காக பெயர் பெற்று வருவது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மது அருந்துவதற்காக புதுச்சேரி செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இன்னொருபுறம் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களும் மது அருந்த தூண்டப்படுகின்றனர். இவை அனைத்துக்கும் காரணம் புதுச்சேரியில் தெருவுக்கு 4 மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டிருப்பது தான். அதிலும் குறிப்பாக ரெஸ்டோ பார்கள் என்ற பெயரில் குடிப்பகத்துடன் கூடிய மதுக்கடைகள் மூலைக்கு மூலை திறக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றச்செயல்கள் பெருகி விட்டன.
சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக குழுவாக புதுச்சேரி சென்றுள்ளனர். அங்குள்ள ஓ.எம்.ஜி என்ற ரெஸ்டோ பாரில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அவர்களுக்கும், குடிப்பகப் பணியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சண்முகப்பிரியன் என்ற மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஷாஜன் என்ற மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
இதையொத்த நிகழ்வுகள் புதுவையில் அடிக்கடி நிகழத் தொடங்கி விட்டன. குடிபோதையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தல், திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களும், விபத்துகளும் அதிகரித்து விட்டன. இதனால் புதுவை அதன் இயல்பிலிருந்து மாறி பெரும் கலாச்சாரச் சீரழிவை சந்தித்து வருகிறது. புதுச்சேரி படிப்படியாக கோவாவைப் போல மாறி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் புதுவை இந்தியாவின் போதை தலைநகராக மாறிவிடும்.
புதுவையில் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெற்றோரும் தங்களது பிள்ளைகள் மதுவுக்கு மிகவும் மோசமாக அடிமையாகி வருவதை எண்ணி மிகுந்த வருத்தத்திலும், வேதனையிலும் வாடுகின்றனர். புதுவையில் சாலைவிபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டன. மதுவால் புதுவை மிக மோசமான கலாச்சார சீரழிவை எதிர்கொண்டு வருவது கவலையளிக்கிறது.
புதுச்சேரியின் இந்த சீரழிவுகளுக்கு காரணம் அங்கு அளவில்லாமல் திறக்கப்படும் மதுக்கடைகள் தான். எஃப்.எல் 1, எஃப்.எல் 2 ஆகிய பெயர்களில் மதுக்கடைகளுக்கான உரிமங்கள் வழங்கப்படுகின்றன. எஃப்.எல் 1 என்பது மொத்த வணிகத்திற்கான உரிமம் ஆகும். எஃப்.எல் 2 சில்லறை வணிகத்திற்கான உரிமம். இதில் ரெஸ்டோ பார் எனப்படும் குடிப்பகங்களுக்கும் உரிமம் வழங்கப்படுகிறது. ரெஸ்டோபார் உரிமம் பெறுவதற்காக நிபந்தனைகளும், கட்டணமும் மிகவும் குறைவு என்பதால் அதிக எண்ணிக்கையில் அவை திறக்கப்பட்டு வருகின்றன.
ஓர் வீட்டில் 5 அறைகளும், ஓர் சமையல் அறையும் இருந்தால் அந்த இல்லத்தை ரெஸ்டோ பாராக மாற்றி விட முடியும். அதாவது அந்த அறைகளில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு சில்லறையில் மது வழங்குவது தான் ரெஸ்டோபார்களின் நோக்கம். ஆனால், விதிகளை மீறி கட்டுப்பாடு இல்லாமல் ரெஸ்டோ பார்களில் அனைவருக்கும் கட்டுப்பாடின்றி மது வணிகம் செய்யப் படுகிறது. அதனால், புதுவையில் மது வெள்ளமாக ஓடுகிறது; சீரழிவுகள் பூகம்பமாக வெடிக்கின்றன.
புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் இன்றைய நிலையில், 86 மொத்த வணிகக் கடைகள், 240 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 476 சில்லறை வணிகக் கடைகள், 107 சாராயக் கடைகள், 81 கள்ளுக்கடைகள் என மொத்தம் 750 போதை பானக்கடைகள் உள்ளன. புதுவையின் மக்கள்தொகையான 13.94 லட்சத்துடன் ஒப்பிடும்போது 1859 பேருக்கு ஒரு போதைபானக் கடைகள் உள்ளன. புதுச்சேரி நகரத்தில் மட்டும் 536 போதைபானக்கடைகள் உள்ளன. இது 1772 பேருக்கு ஒரு கடையாகும். காரைக்காலில் இன்னும் குறைவாக 1516 பேருக்கு ஓர் போதைபானக் கடை உள்ளது. கோவாவில் 250 பேருக்கு ஒரு மதுக்கடை இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக அதிக மதுக்கடைகள் உள்ள மாநிலமாக புதுவை தான் திகழ்கிறது.
புதுவையில் இப்போது இருக்கும் மதுக்கடைகளே மிகவும் அதிகம் என்று கூறப்படும் நிலையில், இன்னும் 100 ரெஸ்டோபார்களுக்கு அனுமதி அளிக்க புதுவை அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் நடந்து விட்டால், புதுவையில் மதுக்கடைகள் உள்ளன என்று கூறுவதற்கு பதிலாக மதுக்கடைகளுக்குள் புதுவை உள்ளது என்று கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதேபோல், புதுவையில் ஏற்கனவே 3 மது ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 6 மது ஆலைகளுக்கு புதுவை அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. ஆனால், ஆளுனர் தலையிட்டு அந்த ஆலைகளுக்கு உரிமம் அளிப்பதை தடுத்து நிறுத்தியிருக்கிறார். இல்லாவிட்டால் புதுவை மாநிலத்தில் மது சுனாமியாக ஓடிக் கொண்டிருந்திருக்கும்.
புதுவையில் ஏராளமான மது ஆலைகள், மதுக் கடைகள், குடிப்பகங்கள் இருப்பதை யாராலும் நியாயப் படுத்த முடியாது. அண்மைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் மது அருந்தி விட்டு வகுப்புகளுக்கு வருவது அதிகரித்து வருகிறது. மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு மதுக்கடைகளுக்கும், குடிப்பகங்களுக்கும் தாராளமாக அனுமதி அளிப்பதை ஏற்க முடியாது. பணம் ஈட்டுவது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்கக் கூடாது. பணத்திற்காக மது வணிகத்தை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் இம்மண்ணில் திடமான இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
இதை உணர்ந்து புதுவை மாநிலத்தை மதுவின் பிடியிலிருந்து மீட்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக புதுவையில் இனி புதிய மது ஆலைகளுக்கோ, மதுக்கடைகளுக்கோ அனுமதி அளிக்கப்படாது என்று புதுவை அரசு அறிவிக்க வேண்டும். அதன்பின் இப்போது இருக்கும் மதுக்கடைகள், குடிப்பகங்கள் ஆகியவற்றை படிப்படியாக மூட வேண்டும். புதுவையிலும் மது விலக்கு என்ற இலக்கை நோக்கியப் பயணத்தை அம்மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






