என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது.
    • ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இருக்கும்.

    அதிகளவு நீர் ஓடும் போது அருவியில் குளித்து மகிழவும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவர்.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்வர்.

    தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று 200 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால், காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகளாகவும் காட்சியளிக்கிறது.

    ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    கர்நாடக அணிகளில் இருந்து உபரி நீர் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கின்றன. அருவிகளில் கொட்டும் தண்ணீரின் வேகமும் சற்று குறைந்துள்ளது.

    கோடை காலம் துவங்கும் முன்பே கர்நாடகாவில் மழை குறைந்ததாலும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    நீர்வரத்து மேலும் குறைந்ததால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கான தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கும் நிலை உள்ளது.

    இதே நிலை தொடர்ந்தால் கோடை சுற்றுலா இந்த ஆண்டு கடுமையாக பாதிப்பு நிலை ஏற்படும்.

    • அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளோம்
    • சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

    தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த கூட்டணியில் அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளோம் என்று இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "அதிமுக தலைமையிலான கூட்டணியில் எங்களுக்கு சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம். போட்டியிடாத தொகுதிகளில் NDA கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம்" என்று கூறினார்.

    • சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
    • 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.

    சென்னை :

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அறநிலையத்துறை இவ்வளவு சிறப்பாக செயல்படமுடியும் என காட்டியவர் சேகர்பாபு.

    * தான் செயல்பாபு என்பதை தொடர்ந்து நிரூபித்து கொண்டிருப்பவர் அமைச்சர் சேகர்பாபு.

    * தி.மு.க. ஆட்சியில் 4,192 கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

    * 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.

    * 19 திருக்கோவில்களில் முதலுதவி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    * 12 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    * 5 லட்சம் பேர் கலந்து கொண்ட முருகன் மாநாட்டை நடத்தி காட்டினோம்.

    * உலகிற்கே தனிப்பெருங்கருணை என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார்.

    * பசிப்பிணியை போக்கும் திட்டங்கள் தான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள்.

    * வள்ளலார் தமிழ் சமூகத்தில் உதித்த புரட்சியாளர்.

    * வள்ளலாரை போற்ற வேண்டியது தமிழ் சமூகத்தின் கடமை.

    * அனைத்துலக வள்ளலார் மாநாட்டை குறிக்கும் விதமாக நினைவுத்தூண் அமைக்கப்படும்.

    * வள்ளலார் சன்மார்க்க பயிற்சி பள்ளி அரசு சார்பில் அமைக்கப்படும்.

    * 3 இடங்களில் வள்ளலார் அன்னதான கூடங்கள் அமைக்கப்படும்.

    * வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்.

    * தலைநகர் சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றார். 

    • வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வெளியாக உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தனித்து களமிறங்குகிறார்கள்.

    இதனால் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தி.மு.க. பம்பரமாக சுழன்று வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பல சிறிய கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தே.மு.தி.க. திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

    இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று தே.மு.தி.க. தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய திருப்பமாக தே.மு.தி.க.வை தங்களது கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தே.மு.தி.க. தலைவர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    தமிழகத்தில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் ஒன்றாக மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாகவே பா.ஜனதா-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையை இன்னும் சில தினங்களில் முடித்து அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதை உறுதி செய்துவிட வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    கடந்த முறை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்திலேயே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்படாததால் பிரேமலதா அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    இதுபோன்ற சூழலில் தான் இன்னும் 2 வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர இருக்கிறார். அதற்குள் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையை உறுதி செய்து தங்களது கூட்டணியில் அந்தக் கட்சி இருப்பதை எப்படியாவது உறுதி செய்து விட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தே.மு.தி.க. ஜனநாயக கூட்டணியிலேயே இடம்பெறும் என்று நம்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
    • சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள்.

    மதுரை:

    தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

    தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    தே.மு.தி.க. மற்றும் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. ஆகியவை இன்னும் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் மவுனம் காட்டி வருகின்றன.

    இந்த நிலையில் சசிகலாவும் புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சசிகலா சமீபத்தில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கடந்த 3-ந்தேதி அண்ணா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இதுபற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைப்போம். வருகிற சட்டசபை தேர்தலில் எனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள்' என்று கூறினார்.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 6-ந்தேதி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்தே அவர் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், வருகிற 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்த கால் நடும் பணி இன்று காலை பசும்பொன்னில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா புதிய கட்சி தொடங்குகிறார். அந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரையும் சசிகலா அறிவிக்க உள்ளார். மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளார்.

    தமிழக அரசியலில் தன்னை மீண்டும் நிலை நிறுத்த சசிகலா தனிக்கட்சி தொடங்க எடுத்து வரும் முயற்சிகளால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    • இந்த வளைவில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என்ற வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    • இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை அடையாறு மற்றும் கிண்டியை இணைக்கும் பிரதான சாலையாக சர்தார் படேல் சாலை உள்ளது. 3.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் கவர்னர் மாளிகை, சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம், கிண்டி சிறுவர் பூங்கா போன்றவை உள்ளன.

    சர்தார் படேல் சாலையின் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து ராஜீவ்காந்தி சாலை (ஓ.எம்.ஆர். சாலை) தொடங்குகிறது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான இங்கு வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் ரூ.61 கோடியில் 'எல்' வடிவ இருவழிச் சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலத்தில் ஒருவழி வாகன போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது, சர்தார் படேல் சாலையில் இருந்து ஓ.எம்.ஆர். சாலைக்கு செல்பவர்கள் மட்டும் 652 மீட்டர் (அணுகு சாலை உள்பட) நீளம் கொண்ட இந்த 'எல்' வடிவ மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.

    அதேநேரத்தில், அடையாறு பகுதியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாகவும் இந்த பாலம் இருக்கும். கிண்டியிலிருந்து அடையாறுக்கும், ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து கிண்டிக்கும் செல்லும் வாகனங்களும் தடையின்றி செல்லலாம்.

    வாகன ஓட்டிகளின் கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் தடுப்புசுவரின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த வளைவில் செல்லும் போது சிரமமின்றி கடந்து செல்லும் வகையில் குறுக்குவெட்டு சாய்வுடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வளைவில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என்ற வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    வேக கட்டுப்பாட்டுக்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச் சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த 'எல்' வடிவ மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மேம் பாலத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் மேம்பாலத்தில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த மேம்பாலம் அந்த வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ராமாபுரம்: மங்களா நகர், அம்பாள் நகர், போரூர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு.

    அம்பத்தூர்: மணலோடை தெரு, பத்மா சீனிவாச நகர், சரஸ்வதி நகர், லெனின் நகர், ஏரிக்கரை சாலை, வெங்கடேஸ்வரா நகர்.

    வியாசர்பாடி: இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர் முக்கிய தெருக்களில் எம்பிஎம் தெரு, மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் தெரு 10 முதல் 19 வரை, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1 முதல் 8வது மெயின் ரோடு, எம்கேபி நகர், கல்யாண்புரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, சாமியார்தோட்டம் 1 முதல் 4வது தெரு, பல்லையா தெரு 1 முதல் 4வது தெரு வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ. காலனி, சர்மா நகர். 

    • வாச்சாத்தி சம்பவம் குறித்து COMRADE TALKIES ஆவணப்படம் தயாரித்துள்ளது.
    • வாச்சாத்தி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள்என்று தீர்ப்பளிக்கப்பட்டது

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில், கடந்த 1992ம் ஆண்டு வனத்துறை, காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

    இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் காவல் துறையினர். மீதமுள்ள 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை பெற்றவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    COMRADE TALKIES தயாரித்துள்ள 'வாச்சாத்தி' ஆவணப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

    இந்நிலையில், வாச்சாத்தி சம்பவம் குறித்து COMRADE TALKIES தயாரித்துள்ள 'வாச்சாத்தி' ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த ஆவணப்பட திரையிடலில் கலந்து கொண்ட எம்.பி. கமல்ஹாசன், நீதியை நிலைநாட்டிட 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து போராடிய வாச்சாத்தி கிராம மக்களுடன் உரையாடினார்.

    • நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
    • நயினாரின் பேச்சு வருத்தமாகத்தான் இருக்கிறது என்று வானதி சீனிவாசனம் தெரிவித்தார்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

    அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

    நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இத்தனிடையே, இதுகுறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், "நயினாரின் பேச்சு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. ரொம்ப பண்பாகப் பேசக் கூடியவர்.. எதற்காக அப்படி பேசினார் எனத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை, "நயினார் நாகேந்திரன் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். அவர் எந்த உள்நோக்கத்திலும் பேசியதாக தெரியவில்லை. அவர் யாரையும் புண்படுத்த வேண்டும் என்றோ உள்நோக்கத்திடனோ பெண்களை இழிவுபடுத்தா வேண்டும் என்ற எண்ணம் உடையவர் அல்ல. . அவரை விமர்சிக்க திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தகுதி இல்லை"

    • குஷ்பு குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.
    • சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வருபவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.

    இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

    இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், இது தொடர்பான மாலைமலர் செய்தியை பகிர்ந்து குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இதுபோன்ற செய்திகள் நீதித்துறை அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இது பெண்களின் சக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும் பெண்கள் சமூகத்திற்கு ஒரு வலுவான நல்ல செய்தியை அனுப்புகிறது.

    ஒவ்வொரு பெண்ணும் தனக்காக நிற்க வேண்டும், கட்டாயம் நிற்க வேண்டும். கண்ணியம் மற்றும் மரியாதையைப் பாதுகாக்க, மற்றவர்கள் உங்களுக்காக அதைச் செய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம். ஒரு துளி கூட உங்களை அவமதிக்கக் காத்திருக்கும் அத்தகைய ஆண்கள் இன்னும் நம்மிடையே உள்ளனர்.

    உங்கள் தலையை உயர்த்தி நில்லுங்கள், உலகம் உங்களுடன் இருக்கும். இது எனது வெற்றி மட்டுமல்ல, இதுபோன்ற துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் வெற்றி. போதும் போதும். ஒற்றுமையாக நின்று அதை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்!
    • ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்.

    திருப்பத்தூரில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் கலந்துகொண்டு திமுக தலைவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * இந்தியா முழுவதும் எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட், Black and Red-தான் – கருப்பு-சிவப்புதான்!

    * 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்!

    * ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்

    * நம்முடைய திராவிட மாடல் அரசு, சாதனைகளின் அரசாக இருப்பதுதான், பழனிசாமி அவர்கள் இவ்வளவு வேதனையுடன் புலம்புவதற்குக் காரணம்.

    * தமிழ்நாட்டிற்கு பரப்புரைக்கு வரும் பிரதமர், தமிழ்நாட்டிற்கு என்று இந்தச் சாதனைகளை எல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்கிறாரா? இருந்தால்தானே சொல்ல முடியும்!

    * நம்முடைய இலக்கு எவ்வளவு? 200 தொகுதிகள்! 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன தேவை? ஓய்வில்லாத உழைப்பு!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    ×