search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டு மக்கள் பாஜக பக்கம்: பிரதமர் மோடி
    X

    தமிழ்நாட்டு மக்கள் பாஜக பக்கம்: பிரதமர் மோடி

    • பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.
    • தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். "அனைவருக்கும் வணக்கம்" என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அவர் கூறியதாவது:

    * அனைவருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்.

    * அல்வாவை போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள்.

    * தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் பாஜகவின் பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன்.

    * பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.

    * தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    * உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம்.

    * தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.

    * பாஜக தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி.

    * மாற்று எரிசக்தி துறையில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது.

    * நாடு ஒரு புதிய எண்ணத்தோடு பணியாற்றி வருகிறது. இதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்.

    * உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

    * இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது என்று கூறினார்.

    Next Story
    ×