என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கேள்வி: பா.ஜ.க. பொருளாளர் கருத்து ஏற்புடையதா? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கேள்வி: பா.ஜ.க. பொருளாளர் கருத்து ஏற்புடையதா?](https://media.maalaimalar.com/h-upload/2023/05/01/1874456-10.webp)
அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கேள்வி: பா.ஜ.க. பொருளாளர் கருத்து ஏற்புடையதா?
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- அ.தி.மு.க. தலைமை பற்றி பா.ஜனதா பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்ததற்கு அண்ணாமலை பதில் அளிக்க வேண்டும் என்று டி.ஜெயக்குமார் கேட்டு இருந்தார்.
- பா.ஜனதா வினையாற்றினால் எதிர்வினையாற்ற அ.தி.மு.க. தயாராக இருக்கிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித் ஷாவை அண்மையில் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உடனிருந்தார். அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையிலான மோதல் தொடர் கதையாகி வந்த நிலையில், டெல்லியில் அமித் ஷா இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைத்ததாக தகவல் வெளியானது.
எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று வந்ததும் எங்களுக்குள் பிரச்சினை எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
அதேபோல அண்ணாமலையும், எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எந்த தகராறும் இல்லை என்றார்.
இந்நிலையில் பா.ஜ.க. மாநில பொருளாளர் எஸ். ஆர்.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், மலைக்கு சமம் இல்லை என்பதால் ஆறு தலைகளுடன் நடந்த கூட்டம். தமிழ்நாட்டில் எந்த முடிவையும் அண்ணாமலையே எடுப்பார் என்றும் அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அ.தி.மு.க.வுக்கு அமித் ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் உணர்த்தியிருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இது அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
பா.ஜ.க. நிர்வாகிகள் அ.தி.மு.க. குறித்து விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பா.ஜனதா வினையாற்றினால் எதிர்வினையாற்ற அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. அதில் மாறுபட்ட கருத்தே இல்லை, எங்களுக்கும் பதிலடி கொடுக்கத் தெரியும் என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க. தலைமை பற்றி பா.ஜனதா பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்ததற்கு அண்ணாமலை பதில் அளிக்க வேண்டும் என்று டி.ஜெயக்குமார் கேட்டு இருந்தார். ஆனால் பா.ஜனதா தரப்பில் இருந்து பதில் இல்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தை ஜெயக்குமார் மீண்டும் கிளப்பி உள்ளார்.
அ.தி.மு.க. தலைமை குறித்து பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, "பா.ஜ.க.வினரின் விமர்சனங்களுக்கு அ.தி.மு.க.வினருக்கும் பதிலடி கொடுக்கத் தெரியும். வேண்டாம் என அடக்கி வைத்துள்ளோம்.
இதுபோன்ற விமர்சனங்கள் பா.ஜ.க. வினர் அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் இல்லாததையே காட்டுகிறது.
இவை எல்லாம் அண்ணாமலை சொல்லி நடக்கிறதா இல்லையா என்பதை அண்ணாமலை ஊடகங்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும். அப்படிச் சொன்னால் தான் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்காது. இல்லையென்றால் அண்ணாமலை சொல்லித்தான் அவரது கட்சியினர் செய்கிறார்கள் என நினைக்க வேண்டி வரும்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)