search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனமழை எச்சரிக்கை: 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம்
    X

    கனமழை எச்சரிக்கை: 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம்

    • இன்று முதல் 19ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்நிலையில் இன்று முதல் 19ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளது.

    கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும்; நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    Next Story
    ×