search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை எதிரொலி: சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு
    X

    4 மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை எதிரொலி: சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

    • அவசர கால மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
    • நாளைக்கு பின் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    அதி கனமழை காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், நீடித்து வரும் கனமழை எதிரொலியாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுதாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.

    அவசர கால மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    நாளைக்கு பின் மழை படிப்படியாக குறையும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×