search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனிமொழி எம்.பி.யிடம் கண் சிகிச்சைக்காக உதவி கேட்ட சிறுமி
    X

    கனிமொழி எம்.பி.யிடம் கண் சிகிச்சைக்காக உதவி கேட்ட சிறுமி

    • மழை வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து தொடர்ந்து களத்தில் நின்று, தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
    • கண் பார்வை குறைபாடுள்ள 7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி. அவரை அருகில் அழைத்து பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16, 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பேய் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் அந்த பகுதிகளை பெருமளவில் பாதித்தது.

    இந்தநிலையில் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, அந்த பகுதியில் மழை வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து தொடர்ந்து களத்தில் நின்று, தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர்-சொக்கப்பழங்கரை ஊராட்சியில் கனிமொழி எம்.பி. நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு கண் பார்வை குறைபாடுள்ள 7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி. அவரை அருகில் அழைத்து பேசினார். அப்போது அந்த சிறுமி 'தனக்கு கண் பார்வையில் பிரச்சனை இருக்கிறது என்றும், அதற்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்' என்றும் வேண்டுகோள் வைத்தார். சிறுமியின் அந்த வார்த்தையை கேட்டதும், உடனடியாக கண் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்..

    Next Story
    ×