search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    கொரோனா தடுப்பு விவகாரம்- மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதில்

    கொரோனா தடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
    சேலம்:

    கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க நானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் நிற்கிறோம். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

    என்னைப்பற்றியும், அரசைப்பற்றியும் குறை கூறி அறிக்கை விடுவதுதான் திமுக தலைவர் ஸ்டாலினின் வேலை. அவர் அரசியல் அறிக்கையை மட்டுமே வெளியிடுகிறார்.

    கொரோனா விவகாரத்தில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளே திணறிக்கொண்டிருக்கிறது.

    அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

    நாளை நடைபெறும் மருத்துவ குழுவினரின் ஆலோசனைக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
    Next Story
    ×