search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னை சிறுமியை கற்பழித்த கும்பல்- பெண் உள்பட 5 பேர் கைது

    வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி சென்னை சிறுமியை கற்பழித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    சென்னை பள்ளிக்கரனை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பக்கத்து வீட்டில் வசித்து வந்த மலர்விழி என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.

    அவரிடம் தனக்கு ஏற்ற வேலை வாங்கி தருமாறு இளம்பெண் கேட்டார். மலர்விழி தனக்கு தெரிந்த சென்னையை சேர்ந்த ரங்கராஜ், ஜெயக்குமார், ஜெபராஜ் ஆகியோரிடம் சிறுமியை அனுப்பி வைத்தார்.

    3 பேருடன் மேலும் 3 பேரும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை மாறி, மாறி பலாத்காரம் செய்தனர்.

    இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேட்டுப்பாளையம் வந்தார். ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கால் டாக்சி டிரைவர் மணிகண்டன் அங்கு வந்தார்.

    அப்போது சிறுமி வீட்டில் கோபித்து கொண்டு வந்து விட்டதாகவும் தனக்கு ஊட்டியில் வேலை வாங்கி தரும்படியும் தெரிவித்தார்.

    சிறுமியை கால் டாக்சி டிரைவர் ஊட்டிக்கு அழைத்து சென்றார். அங்கு அறை எடுத்து சிறுமியை தங்க வைத்து 2 நாட்கள் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் மேட்டுப் பாளையத்தில் வீட்டிற்கு அழைத்து வந்தார். தனது மனைவியிடம் இந்த சிறுமி ரெயில் நிலையத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தார். அவரை பார்க்க பாவமாக இருந்தது. எனவே வீட்டிற்கு அழைத்து வந்தேன். அவள் இங்கு இருக்கட்டும் என்றார். மணிகண்டன் மனைவியும் இரக்கப்பட்டு தங்க அனுமதித்தார். இந்த நிலையில் மணிகண்டன் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை பயன்படுத்தி கொண்ட மணிகண்டன் 5 நாட்கள் தனது வீட்டில் சிறுமியை தங்க வைத்து பலாத்காரம் செய்தார்.

    பின்னர் சிறுமியை ரெயிலில் சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னை சென்ற சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவரை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியிடம் விசாரித்த போது தன்னை சென்னையை சேர்ந்த வாலிபர்களும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் மணிகண்டனும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து ரெயில்வே டி.எஸ்.பி. அண்ணாத்துரை தலைமையில் மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த கால் டாக்சி டிரைவர் மணிகண்டன், சென்னையை சேர்ந்த ரங்கராஜ், ஜெயக்குமார், ஜெபராஜ் மலர்விழி ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    மலர்விழி சென்னையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர் சிறுமியை விபசார தொழிலில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளார்.

    கைதான 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு அப்பகுதி போலீஸ் நிலையத்திற்கு விரைவில் மாற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் வழக்கு ரெயில்வே போலீசாரிடம் இருந்து உள்ளூர் போலீசுக்கும் மாற்றப்பட உள்ளது.

    இதற்கிடையே சிறுமியை பலாத்காரம் செய்த சென்னையை சேர்ந்த மேலும் 3 பேர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×