search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருமணமான 6 மாதத்தில் விபத்தில் சிக்கி பலியான வாலிபர் - உருக்கமான தகவல்கள்

    வாசுதேவநல்லூர் அருகே திருமணமான 6 மாதத்தில் விபத்தில் முத்துக்குமார் இறந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சிவகிரி:

    புளியங்குடி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மகன் முத்துக்குமார் (வயது 29). இவருக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இவர் புளியங்குடி பஸ் நிலையம் அருகிலுள்ள பிரபல செல்போன் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    நேற்று காலையில் இவரும், இவரது நண்பரான செல்வக்குமாரும் தேவிபட்டினத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அந்த திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு மாலை புளியங்குடிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது வாசுதேவநல்லூர் அம்பேத்கர் சிலை அருகே வந்தபோது, வாசுதேவநல்லூரை சேர்ந்த ராமர் (50) சைக்கிளில் திடீரென்று குறுக்கே வந்துள்ளார். இவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை நிறுத்த முத்துக்குமார் முயற்சித்துள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் செல்வக்குமார் மற்றும் ராமருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இறந்த முத்துக்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
    Next Story
    ×