என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சித்தூர் அருகே விடுதி அறையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த கொத்தகோட்டா பி.சி காலைணியை சேர்ந்தவர் மஞ்சுநாத் மகன் கவுதம் (வயது17) இவர் பீலேரு அடுத்த வாயல்பாடில் உள்ள அரசு விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். கிரிக்கெட் விளையாட்டு வீரரான கவுதம் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.
இந்த நிலையில் கிரிக்கெட் உபகரணங்கள் வாங்க அவரது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஏற்கெனவே கிரிக்கெட் உபகரணங்கள் வாங்க அதிக அளவு பணம் செலவழித்து விட்டதால் பணம் தர பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த கவுதம் நேற்றிரவு விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இன்று காலை கவுதம் தற்கொலை செய்து கொண்டதை கண்ட விடுதி வார்டன் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வாயல்பாடு போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவபாஸ்கர்ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுதம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வாயல்பாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கவுதம் எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்