என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் 8 கைதிகள் திடீர் உண்ணாவிரத போராட்டம்
கோவை:
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறை வளாகத்தில் ஒரு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தினசரி 3 அரசு டாக்டர்கள் அங்கு சென்று கைதிகளுக்கு ஏற்படும் சின்ன பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும் கைதிகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறைக் கைதிகள் வார்டுக்கு அனுப்ப படுவார்கள்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறைக்கைதிகள் வார்டில் 10 கைதிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம். தற்போது இங்கு 8 கைதிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் 8 பேர் டாக்டர்கள் சரியாக வருவது இல்லை. தேவையான சிகிச்சைகளை அளிப்பதில்லை என கூறி நேற்று மாலை முதல் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
நேற்று இரவு இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட மறுத்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்